அதிமுக சார்பில் திருமானூர் ஒன்றியத்தில் இலந்தைகூடம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் பூத் கமிட்டி தொடக்க விழா ஆலோசனை கூட்டம் 10-12-18 அன்று நடைபெற்றது.
அம்மா பேரவை கிளை செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். அரியலூர் மாவட்ட செயலாளரும் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு அதிமுக கட்சி தொடங்கப்பட்டு பல சட்டமன்றத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற செய்திருக்கிறீர்கள்.
தற்போது 100 உறுப்பினர்களுக்கு 3 நபர்கள் வீதம் பூத் கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் ஒற்றுமையாக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அமோக வாக்கு விகிதத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் நமது கழகத்தை வீழ்த்த நினைக்கும் டிடிவி தினகரனை இருக்கின்ற இடம் தெரியாமல் ஆக வேண்டும் என்றும் திமுக நமது கட்சியின் பலத்தை கண்டு பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. பொய் பிரச்சாரங்கள் செய்து ஏழை மக்களை ஏமாற்றும் கட்சியாகவும் உள்ளது என பேசினார்.
நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் விஜயபார்த்திபன் மற்றும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் ஊராட்சி செயலாளர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.
செய்சியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.