Home செய்திகள் வாகன நெரிசலால் தத்தளிக்கும் கீழக்கரை… காவல்துறை நடவடிக்கை எடுக்குமா??

வாகன நெரிசலால் தத்தளிக்கும் கீழக்கரை… காவல்துறை நடவடிக்கை எடுக்குமா??

by ஆசிரியர்

கீழக்கரையில் பெருகி வரும் வியாபார தலங்கள், அதிகரிக்கும் நான்கு சக்கர வாகனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதியில்லாத தற்காலிக ஆட்டோ நிறுத்தங்கள், முறையில்லாமல் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் ஆகியவைகளால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதுகரித்த வண்ணம் உள்ளது.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை முக்கியமாக முஸ்லிம் பஜார் சந்திப்பு, ரிஃபாய் தைக்கா போன்ற பகுதிகளில் முறையில்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களாலும், ஆட்டோக்களாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

இதற்கு கீழக்கரையில் உள்ள காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வருவார்களா??

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!