Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில்  கிராமசபை கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில்  கிராமசபை கூட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.. இராமநாதபுரம் மாவட்டத்தில்  நாட்டின் 72 வது    சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு ,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கவும் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களில் எழுத படிக்கத் தெரியாத பள்ளிக்குச் செல்லாத 15 வயது நிரம்பிய பெண்கள் குறித்து கணக்கு எடுத்தல், கிராமங்களில் அடிப்படை வசதிகளின் தற்போது நிலை குறித்து கணக்கெடுத்தல் மற்றும் சீர்செய்தல் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் கழிப்பறை பயன்பாட்டை உறுதி செய்தல் பாரத பிரதமர்குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல்  போன்ற பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியத்தில் பாண்டியூர் கிராமசபா கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேசியதாவது தமிழ்நாடு முதல்வர் தமிழகத்தில் 1-1 -2019 முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பை கூடுதல் வலு சேர்க்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 1 – 7 _2018 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது பயன்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்

திருப்புல்லாணி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியகிரி தலைமையில் நடந்தது இக்கூட்டத்தில் ஊராட்சியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் ஊராட்சி செயலாளர் கருப்பையா தீர்மானங்களை வாசிக்க கிராம பொதுமக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேதுக்கரை ஊராட்சியில் மேலப்புதுக்குடி கிராமத்தில் அங்கு உள்ள தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருப்புல்லாணி ஒன்றிய     உதவியாளர் ரேவதி பார்வையாளராக பங்கேற்றார் ஊராட்சி செயலர் சாந்தி தீர்மானங்களை வாசிக்க கிராம மக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்

மாயாகுளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகேஸ்வரன் பார்வையாளராக பங்கேற்றார் ஊராட்சி செயலாளர் அமுதா   தீர்மானங்களை வாசித்தார் பொதுமக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

காஞ்சிரங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திருப்புல்லாணி   ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகேஸ்வரன் கலந்து கொண்டார் ஊராட்சி செயலாளர் அமுதா தீர்மானங்களை வாசிக்க ஊர் பொதுமக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்

கடலாடி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜீவகன் பார்வையாளராக கலந்து கொண்டார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலர் அஜ்மல் கான் தீர்மானங்களை வாசிக்க ஊர் பொதுமக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சிக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜீவகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் ஊராட்சி செயலர் ஜெயபால் தீர்மானங்களை வாசிக்க பொதுமக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று ஆய்வு செய்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!