Home செய்திகள் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் 69-வது ஜெனிவா கண்வென்சன் தினம்..

சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் 69-வது ஜெனிவா கண்வென்சன் தினம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் 69-வது ஜெனிவா கண்வென்சன் தினத்தை முன்னிட்டு யூத் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மாணவர் முத்துக்குமரன் பேசுகையில், “மனித நேயம் என்பது துன்பம் அன்பு பண்பு வெளிப்பட வேண்டும் உலக நாடுகள் சுனாமியில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அப்போது ஒவ்வொரு மனிதனிடமும் மனித நேயம் இருந்தன தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் மனிதநேயத்துடன் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தாஸிம் பீவி கல்லூரி சோனை மீனாள் கல்லூரி, கௌசானல் கல்லூரி, செய்யது ஹமீதா கல்லூரி, புரட்சித்தலைவி கலைக்கல்லூரி, முத்தாலம்மன் பாலிடெக்னிக் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் சேர்மன் ஹாரூன் மாவட்டச் செயலாளர் ராக்லேண்ட் மதுரம் ராமநாதன் குப்தா கோவிந்தராஜ் வழக்கறிஞர் மார்டின் மனோகரன் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!