5
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தினகரன தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஞானசேகரன வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் பழளீஸ்வரன் , காசி, துணை செயலர்கள் மாரிமுத்து திருமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து, மாரிமுத்து, ஜெகன் குமார் ஆகியோர் பேசினர்.தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பழனிக்குமார், கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜமூர்த்தி, மாவட்ட செயலர் ரவிச்சந்தின் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், பணி வரன்முறை மற்றும் ஓய்வூதியம், உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது.
You must be logged in to post a comment.