19
கடந்த 29.06.2018ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் A1 திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பாக நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட சரக துணை தலைவர் ந.காமினி, இ.கா.ப., தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., இரத்ததானம் செய்து துவக்கி வைத்தார்.
மேலும் இம்முகாமில் இராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் M.நடராஜன், கமுதி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R.சண்முகசுந்தரம், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் Dr.சாதிக் அலி, இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நிலைய மருத்துவர் Dr.ஞானக்குமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேலாளர் முருகேசன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் ஹாரூன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) கோகுலகிருஷ்ணன், மாவட்ட தாலுகா காவல் ஆளினர்கள், ஆயுதப்படை காவல் ஆளினர்கள், கமுதி தனி ஆயுதப்படை காவல் ஆளினர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 356 பேர் இரத்ததானம் செய்தனர். இரத்தவங்கி மருத்துவர் பாத்திமா பத்தூள்ராணி தலைமையில் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் இரத்த வங்கி மருத்துவ குழுவினர் இரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த முகாமை மாவட்ட இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் S.அய்யப்பன் ஒருங்கிணைத்தார்.
You must be logged in to post a comment.