8
இராமநாதபுரம் ராஜா மேல்நிலை பள்ளி மைதானத்தில் அகில உலக பெண்கள் தினம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் பெண்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்குவது தான் மாவட்ட மக்கள் அமைப்பின் நோக்கம், பெண்கள் மருத்துவத்திலும் கலையிலும், சமூக சேவையிலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் சாதனை படைக்கிறார்கள், கல்வி நிலையம் முதல் காவல் நிலையம் வரை பாதிக்கப்படுவபவள் பெண்களே, வரதட்சனை கொடுமை பாலியல் பலாத்காரம் ஆண்களால் குடியின் கொடுமை என பல்வேறு துண்பங்களுக்கு ஆளாகிறாள் என கவிஞர் கலைவாணி சிறப்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பரமக்குடி மாவட்ட மக்கள் அமைப்பு தலைவி இராமலெட்சுமி, கமுதி ஒன்றியம் மாவட்ட மக்கள் அமைப்பு பொருளாளர் ரூபி, திருவாடனை ஒன்றியம் செங்கோல் மேரி, மண்டபம் ஒன்றியம் கர்லோ பா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர்.
You must be logged in to post a comment.