Home செய்திகள் கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய சரகம் குண்டக்கரை ஆற்றில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராமர் 33/17, த/பெ கணேசன், மூலக்கரைபட்டி ,  மணி 28/17, த/பெ லெட்சுமணன், கீழக்குளம் , முனியசாமி 20/17, த/பெ முத்துராமன், பாப்பனம் , பாலமுருகன் 40/17, த/பெ சுப்பிரமணி, வாடிபட்டி ஆகிய நான்கு பேர் காவல் துறையினரால் நேற்று (14-12-2017) கைது செய்யப்பட்டனர்.

மேலும் அம்மூவர் மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு மணல் அள்ளும் இயந்திரம் (Reg. No. TN 65 AZ 9078, For Regn) 3 டிப்பர் லாரிகள் (Reg. No. TN 65 W 7817, TN 67 AE 8088, TN 45 AS 2388) ஆகியவற்றையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!