Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தொடர்ந்து கரையில் ஒதுங்கும் பேராமைகள..

தொடர்ந்து கரையில் ஒதுங்கும் பேராமைகள..

by ஆசிரியர்

கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதியில் இறந்த நிலையில் பேராமைகள் ஒதுங்குவது அதிகரித்து வருகிறது.

இன்றும் (15-04-2017) ஏர்வாடி கடற்கரையில் இறந்த நிலையில் பச்சை நிற பேராமை கரை ஒதுங்கியது.  இது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில் கடலுக்குள் செல்லும் நபர்கள் ப்ளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களை கடலில் வீசுவதால் இந்த வாயில்லா அரிய கடல் ஜீவன்கள் அழிவதற்கான காரணமாக அமைந்து விடுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்த அரிய வகை ஆமைகளை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!