8
அறிவிப்பு
நாளை (05-03-2017) அன்று கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா பள்ளியில் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம் மாலை 03.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரில் உள்ள அனைத்து தாய்மார்களும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி பற்றிய விளக்கங்கள் மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த தடுப்பூசி குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இக்கூட்டத்தில் குழந்தைகள் நல மருத்துவர் B.ஜவாஹிர் ஹுசைன் MBBS.,DCH கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், டெங்கு, மலேரியா வராமல் தடுக்க ஆலோசனைகள் வழங்க வருகை தர உள்ளார்கள். இக்கூட்டம் பள்ளி வளாகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ள நிர்வாகம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment.