கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா பனைக்குளம் குருப் நல்லாங்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆ.கணேசன் தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர் திரு.கே எம் தமிம்ராஜா மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் அம்மா திட்டம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 6 (ஆறு) பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல் பெயர் நீக்கம் , பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப் பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 33 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இம் முகாமில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் கோகிலா கிராம நிர்வாக அலுவலரகள் சபிதா, கோகிலாதேவி, பூபதி, முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் நல்லாங்குடி கிராம தலைவர் ராமலிங்கம், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.