22
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பூ பாண்டியபுரம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஈசிஆர் ரோட்டில் பக்கவாட்டில் உள்ள விளைநிலத்தில் கடந்த 3 நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளிவருகிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சேதமடைந்துள்ள இடத்தை பார்வையிட்டு மராமத்துப் பணிகளை மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை ஒரு சில சமூக விரோதிகள் விஷமிகள் உடைத்து சேதப்படுத்தி வருவதால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் கிராம மக்கள் தண்ணீருக்காக தினமும் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.
You must be logged in to post a comment.