செங்கத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
சென்னை- சேலம் இடையே அமைக்க எட்டு வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்காவில் தோப்புகள் குடியிருப்பு பகுதிகள் ஆறுகள் ஏரிகள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றனர்.
இந்நிலையில் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கம் தாலுக்கா விவசாயிகள் மண்மலை பிரச்சனை நாராயணன் கொட்டாய் புதுப்பாளையம் நயம்பாடி கிராமத்தில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் கூறியதாவது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், 5 மாவட்ட விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இத்திட்டத்தினால் விவசாயிகள் தங்கள் நிலத்தை பறிகொடுப்பதோடு தமிழகத்தில் உணவு உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நோக்குடன் செயல்படுபவர்கள் இயற்கை வளம் பாதிப்பு அடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எட்டு வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கிறோம்.
மேளம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெரும் பொருளாதார ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார திட்டங்களை வகுப்பதற்கும் கரோனா தொற்றால் அனைவரையும் பாதுகாக்கவும் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் உரிய ஏத்திட்டாங்க புதிய திட்டங்களை படுத்தாமல் ஊரடங்கு பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவன முதலாளிகளை தாரைவார்ப்பதுடன் தொழிலாளர்களின் உரிமையை பறித்து வருகிறது என விவசாயிகள் கூறினர்.
You must be logged in to post a comment.