24
உசிலம்பட்டி அருகே நக்கலப் பட்டி ஊராட்சி குஞ்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து வேலன் மனைவி அமுதா வயது34.
இவர் உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று (24/03/2019) இரவு வீட்டில் தனியாக இருந்த யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி செய்துகொண்டார்.
இதைப் பார்த்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்று (25/03/2019)காலை உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதா சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலர் தற்கொலை குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
You must be logged in to post a comment.