20
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பசுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒச்சு மனைவி கழுவாயி (50). இவர் தனது தோட்டத்தில் வழக்கம் போல் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது நாங்கள் வியாபாரிகள் என மாடு வாங்க வந்ததாக கூறி இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்து கழுவாயி உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.