18
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி அணைப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தமிழக முதல் சிறப்பு திட்டமான அம்மா திட்ட முகாம் மண்டல துணை தாசில்தார் ருக்மணி தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். முகாமில் பட்டா மாறுதல், வாரிசுசான்றிதழ், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வேண்டிய மனுக்கள் என்பன உள்ளிட்ட 122 மனுக்கள் பெறப்பட்டது.முகாமில் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் முனி ராஜா, ஒன்றியக் கவுன்சிலர் பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா
You must be logged in to post a comment.