தமிழ் முழக்கப் பேரவை கூட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் முதல் தமிழறிஞர் நெல்லை ஆ.கணபதி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நெல்லையில் 28.05.19 இன்று நடைபெற்றது.
இவ்வமைப்பின் தலைவர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.திருக்குறள் முருகன் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரையைத் தொடர்ந்து தமிழறிஞர் நெல்லை ஆ.கணபதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலஞ்சென்ற தமிழறிஞர் நெல்லை ஆ.கணபதி பற்றி தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா உரையாற்றுகையில் “தாமிரபரணிக் கரையோரத்திலிருந்து தமிழைச் சுமந்து தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் கொண்டு சென்றவர்தான் கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அன்புத் தகப்பனார் நெல்லை ஆ.கணபதி அவர்கள்” எனக் குறிப்பிட்டார். அதை தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடந்த தமிழ் முழக்கப் பேரவையின் கூட்டத்தில் தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, ராசகிளி உட்பட பலர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் சத்திய மூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் செ.திவான், பாப்பையா, கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி,மருத்துவர் அய்யனார், தேவி, பிரபா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ் முழக்கப் பேரவையின் செயலாளர் இராமன் எழுதிய தித்திக்கும் திருப்புகழ் என்ற நூலும் வெளியிடப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.