Home செய்திகள் ஆபத்தான முறையில் மின் வயர் இரும்பு மின்கம்பத்தில் இருப்பதால் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

ஆபத்தான முறையில் மின் வயர் இரும்பு மின்கம்பத்தில் இருப்பதால் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகே உள்ள இரும்பினாலான மின் கம்பம் ஒன்று பயிர்கள் அனைத்தும் திறந்த நிலையிலேயே உள்ளது. தினசரி மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் தபால் நிலையம் ஒன்றும் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மேலும் இது இரும்பினால் ஆன இன்பமாக இருப்பதால் மின்கசிவு ஏற்பட்டு யாராவது அதை தொட்டால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது என அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயிர் போவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் இந்த இரும்பினாலான மின் கம்பங்களை அகற்றி வயர்களை சரி செய்து புதிய சிமிட்டினால் காங்கிரட் மின்கம்பத்தை நிறுவ வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!