பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கொரோனாவின் எதிரொலியினால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் ,ஓட்டோ ஓட்டுனர்களுக்கும், வர்த்தகர் கழக மகாலில் முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கும், வலையப்பட்டி மலையாண்டி கோவிலில் சலவைத்தொழிலாளர்களுக்கும் மாவட்ட அதிமுக சார்பில் தமிழக வீட்டுவசதி வாரியத்தலைவர் பிகே.வைரமுத்து மற்றும் அவரது மகன் பிகேவி.குமாரசாமி ஆகியோர் தனது சொந்த நிதியில் காய்கறிகள், அரிசி, மளிகை சாமான்கள், எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 நிவாரண நிதியுதவியை 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிக்குமார், மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் கருணாகரன் ,பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் மற்றும் வேலு, பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா அம்பலகாரர், செயல் அலுவலர் தனுஷ்கோடி, மற்றும் பலர்
You must be logged in to post a comment.