58
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, கீழக்கரை, உள்வட்டத்திற்கு ஆட்பட்ட 29 குக்கிராமங்களுக்கான முதல் நாள் வருவாய் 1430 ஆம் பசலி ஆண்டு வருவாய் கணக்கு தணிக்கை நடைபெற்றது.
இதணை தனித் துணை ஆட்சியர் (மண்டபம்) சிவக்குமாரி தலைமையில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் பழனிகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் 11க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது இந்நிகழ்வின் போது கீழக்கரை வருவாய் ஆய்வாளர் பார்கவி. உத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் லூர்து மலர் திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் 29 கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.