Home செய்திகள் மதுரையில் முதல்முறையாக டேப் பால் கிரிக்கெட் லீக் போட்டி.

மதுரையில் முதல்முறையாக டேப் பால் கிரிக்கெட் லீக் போட்டி.

by ஆசிரியர்

மதுரை நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியில் இளைஞர்களை இணைக்கும் பொருட்டு மதுரையில் முதன்முறையாக நடைபெற இருக்கும் மதுரை டேப் பால் (Tape Ball)  கிரிக்கெட் லீக் போட்டியின் தொடக்கவிழா வரும் பிப்ரவரி 23,24தேதிகளில் மதுரை  கல்லூரி மைதானத்தில் பகல்,இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் 100க்கும் மேற்பட்ட அணிகளாக இளைஞர்கள் பங்கு பெறுகின்றன.இதில் பங்குபெறும் அனைத்து அணிகளுக்கும் ஒரு கிரிக்கெட்  கிட் பாிசாக வழங்கப்பட இருக்கிறது.மேலும் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் ஜெர்சி வழங்கப்படும்.இதில் வெற்றி பெற்று முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய்50000,இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய்25000,மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய்15000 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூபாய்10000 பணப்பரிசும் வழங்கப்பட இருக்கிறது.இப்போட்டி நடைபெறும் இரண்டு நாட்களும் மதுரையை ஸ்மார்ட்  சிட்டியாக மாற்ற பொதுமக்களின் கருத்துக்கள், எண்ணங்கள், தீர்வுகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறந்த எண்ணங்கள், தீர்வுகளுக்கு சிறப்பு பாிசுகளும் வழங்கப்படும்.
மேலும் போட்டி நடக்கும் இரண்டு நாட்களும் கண்டுகளிக்க குடும்பத்துடன் வரும் பொதுமக்களுக்காக உணவு வளாகம்,  குழந்தைகளுக்கான கேம்ஸ் ஜோன் அமைக்கப்பட்டிருக்கும் என இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளார் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!