27
சென்னையில் அதிகாலையில் பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் கடும் பாதிப்பு..
அதிகாலையில் ஒருமணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமானம் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
7 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. ஒரு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் தாமதம் ஆனதால் புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதம் ஏற்ப்பட்டது. குறித்த நேரத்தில் விமானங்களின் புறப்பாடு இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.