இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரிய கண்மாய் ரூ.78 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று (27.5.2020) நடந்தது. இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, நீர்வள ஆதாரத்து ரை குண்டாறு வடிகால் வட்ட உதவி பொறியாளர் கே.கண்ணன், உதவி செயற் பொறியாளர் கே.ராமமூர்த்தி, ஏ. உசிலங்குளம் ஊராட்சி தலைவர் செந்தூர், சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணப்பன், ஒப்பந்தகாரர் வி.கே. முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
Category:
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். தொகுதியின் சார்பில் தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் காவல் நிலையம் போதிய இடவசதிகள் இன்றி சிறிய கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.நகர் காவல்துறையினர் தங்களுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தங்கள் தொகுதிக்கு புதிய காவல் நிலைய கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கையை உடனடியாக ஏற்று 110 விதியின் கீழ் 1 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்டார்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்குள் உள்ள பெரிய வளாகத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட 3 அடுக்கு புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்க்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.10 மாத காலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நகர் காவல்துறையினருக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்களுக்கு தொல்லை.. ஆட்சியரிடம் முறையீடு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்கள் கடன் தொல்லை தாங்காமல் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து முறையீடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நிதி நிறுவனங்களில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு மற்றும் இல்லத்தரசிகள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடன் வாங்கி உள்ளனர் தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கடன் செலுத்த கால அவகாசம் விதித்துள்ளது இருப்பினும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து கடன்களை செலுத்த வேண்டும் அதுவும் வட்டியுடன் செலுத்த வேண்டும் காலதாமதம் ஆக்க கூடாது என மகளிர் குழுக்களையும் பெண்களையும் வலியுறுத்தி வருவதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கூறி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்து தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளின் உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம்..மின்வேலி அமைத்து தர கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம். தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை. மின்வேலி அமைத்து விவசாயிகளை காக்க வேண்டுமென என அரசுக்கு கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர் ஒருவர் மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் மா மரங்களை யானைக் கூட்டங்கள் சேதப்படுத்தி மாங்காய் மற்றும் தென்னை மரங்களை தூர்ரோடு சாய்த்து தென்னங்குருத்து சாப்பிட்டு சேதப்படுத்தி விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாம்பழம் குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி என்பவர் நம்மிடம் கூறும்பொழுது இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுமார் குறிப்பாக ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆக மா மரங்கள் மற்றும் தென்னை, வாழை போன்ற விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாமரங்களை குறிவைத்து காட்டு யானை கூட்டங்கள் தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் முகாமிட்டு மா மரங்களை ஒடித்து மாங்காய்களை சாப்பிட்டும், தென்னை மரங்களை சாய்த்தும் சேதபடுத்தி வருகின்றது. இது குறித்து பலமுறை வனத்துறைக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை இந்த பகுதியில் மின் வேலி அமைத்து விவசாயிகளையும், விவசாய பயிர்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் த.ம.மு.க மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரகுமான் தலைமையில். ஏழு உட்பிரிவுகளை உள்ளிட்டு தேவேந்திர வேளாளர் என்று அரசாணை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று 200 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றன.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்:-சீமான் கோரிக்கை…
by Askar
written by Askar
காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்:-சீமான் கோரிக்கை…
கொரோனோ தீநுண்மி நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.ம நதிநீர் ஆணையங்களை மத்திய புனலாற்றல் அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றது, இலவச மின்சாரத்தை இரத்து செய்யக்கூடிய வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை தன்வயப்படுத்தியது என மாநில உரிமைகளை வலுக்கட்டாயமாக பறித்து, மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற ஒரு உள்ளாட்சி நிர்வாக அமைப்பு போல மாற்றுவதற்கு மத்தியில் ஆசகாரணங்காட்டிளள தொடர்ந்து முயல்கிறது.
மாநில தன்னாட்சிப் பற்றி வாய்கிழியப் பேசும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த அதிகாரப் பறிப்பு சதியினைக் கண்டும் காணாதது போல கடந்து சகாரணங்காட்டிள வாய்மூடி மௌனியாக உள்ளனர்.
மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகாரத்தின்
உச்சபட்சமாக கொரோனோ நோய்ப்பரவலால் உண்டான நாட்டின் பொருளாதார முடக்கத்தை காரணங்காட்டி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்கவிருப்பதாக அறிவித்தது மோசமான நிர்வாகச்சீர்கேடு.
ஒருபுறம், பிரதமர் மோடி தற்சாஅறிவிப்பிஅதிர்ச்சியளிப்பதாகழபழம்போது, மறுபுறத்தில், மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் மூலம் அனைத்து அரசுத்துறைப் பங்குகளையும் தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பிஅதிர்ச்சியளிப்பதாகழப
நாட்டினைத் தனியாருக்கு விற்பதாக பொதுவெளியில் அறிவித்தவர்கள் காட்டினைத் தனியாருக்கு விற்கும் முடிவை இரகசியமாகத் திட்டமிட தொடங்கியுள்ளனர் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியளிப்பதாகழ உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 காடுகளைத் தனியார் திட்டங்களுக்காகத் தாரை வார்த்துள்ளது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திபாங் பள்ளத்தாக்கில் உள்ள இடு மிஷ்மி பழங்குடி மக்கள் வாழும் திபாங் பள்ளத்தாக்கு அதிக அளவில் புலிகள் உள்ளிட்ட பல்லுயிர்ச்சூழல் பெருக்கமுடைய வளமான வனப்பகுதியாகும். இந்த பள்ளத்தாக்கினை நாட்டின் மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தினை பயன்படுத்தமற்றும்ளள எதிர்ப்புமின்றி கடந்த மாதம் 23ம் தேதி இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக அமைக்கப்படும் அணைகள், சுரங்கங்கள், பெரிய குழாய்கள், மின்நிலையம் மற்றும்ள சாலை ஆகியற்றால் சுமார் 1,200 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கும் மேலான மரங்கள் அகற்றப்படும் சூழல் உள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தப் பள்ளத்தாக்கு ஒரு மிகப்பெரிய பேரழிவினைச் சந்திக்க நேரிடும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டள இத்திட்டமானது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனப்பாதுகாப்புக் கொள்கைக்கு முரணாக உள்ளது. வெளிப்படைத்தன்மையின்றி திபாங் நீர்மின் திட்டத்தடெஹிங்ள சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த செய்தியானது அப்பகுதியில் வாழும் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவைத்தவிர, அசாமிலுள்ள டெஹிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புக்கல் சுரங்கம், கர்நாடகாவிலுள்ள ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் அமைத்தல் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் அவசர அவசரமாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தாலவாழும்ப பொதுமுடக்க காலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் மூலமாக 15 க்கும் மேற்பட்ட அழிந்துவரும் உயிரினங்கள் வாழும் பகுதிகள், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் ஏராளமான வனப்பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இவற்றையெல்லாம் உணராமல் இலாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வருங்கால தலைமுறையினருக்குச் சொந்தமான காடுகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது பேராபத்தானது.
அரசுப்பொதஅனைத்துழ நிறுவனங்கள் என்பவைகூட மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மனிதர்களுக்கு சொந்தமானவை. ஆனால், காடுகள் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்கள் என்பது பூமியல் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானவை.
அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையாக இருக்க வேண்டுமேயன்றி , மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் வளமோடு வாழ்வதற்காக மற்ற அனைத்து உயிர்களையும் அவை வாழும் இடங்களையும், வளங்களையும் அழிப்பதென்பது சிறிதும் மாந்தநேயமற்ற கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
எனவே, மத்திய அரசுழ உடனடியாகக் காடுகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த முறையற்ற அனுமதிகளை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் கடும்கோபத்திலுள்ள மக்களின் கடும் எதிர்ப்பினையும், குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தினைப்போல் நாடு தழுவிய மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!
by Askar
written by Askar
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 144 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செங்கம் ராஜா தலைமையிலும் பள்ளிப்பட்டு நாகராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்,
- மின்சாரத் திருத்தச் சட்டம் 2020ஐ திரும்பப்பெறு!
- விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்!
- வரும் குறுவை பருவ கால விதைப்பிற்கு, புதிய கே.சி.சி கடன்களை வழங்கு!
- விமானத்திற்கான எரிபொருளின் விலையை லிட்டருக்கு ரூ.22.54 ஆக குறைத்திருப்பதுபோல, விவசாயிகள் பயன்படுத்தும் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.22 ஆக குறைத்திடு!
- விவசாயிகளை நட்டத்திலிருந்து காக்க, விளைபொருட்களின் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்து!
- 100 நாட்கள் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். விவசாயப் பணிகளுக்கு 100 நாட்கள் விவசாய தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும்.
- நிலுவையிலுள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கு.!
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே விவசாயி அடித்துக் கொலை: ஒருவர் கைது; திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!
by Askar
written by Askar
நிலக்கோட்டை அருகே விவசாயி அடித்துக் கொலை: ஒருவர் கைது; திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த ராமன் வயது 65. இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த செல்லம் மகன்கள் மூர்த்தி வயது 42, தங்கராசு வயது 40 , பொன்னுச்சாமி வயது 38 ஆகிய மூவர் தோட்டமும் பக்கத்திற்கு பக்கம் உள்ளது. இதன்காரணமாக இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் ராமன் நிலக்கோட்டைக்கு வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் நிலக்கோட்டையில் இருந்து செங்கோட்டை நோக்கி திண்டுக்கல் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே வந்து கொண்டிருந்த போது தங்கராஜ் திடீரென வழிமறித்து தகராறு செய்து ராமன் மீது கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இருட்டு நேரம் என்பதால் யாரும் அப்பகுதியில் பார்க்காத நிலையில் அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பின்னர் அவ்வழியாக வந்த செங்கோட்டையை சேர்ந்த சிலர் ராமன் காயத்தோடு கிடக்கிறார் என தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாருக்கு கிடைத்த உடன் அவரது தலைமையில் போலீசார் விரைந்து சென்று ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் விரைந்து வந்து சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்து இது குறித்து விசாரணை நடத்தினார்.
பின்னர் கொலை செய்த தங்கராஜை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது:-ஜெ.தீபா..!
by Askar
written by Askar
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது:-ஜெ.தீபா..!
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணன் மகனும், அண்ணன் மகளும் இரண்டாம் நிலை வாரிசு என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய சொல்லி உள்ளது என நிருபர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த தீபா, மெமொரியல் உருவாக்குவதால் மக்களுக்கு என்ன பயன் என்பதை நீதிபதிகள் பட்டியிலிட்டுள்ளனர்.
இறுதியாக சொல்லக்கூடியது என்னவென்றால் இதற்கும் மேலாக இப்படி ஒரு அநியாயமாக செயலை செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. ஜெயலலிதா சொத்து தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாக உள்ளது. தீர்ப்பும் அவசர சட்டமும் முரணாக உள்ளது. அவரச சட்டம் செல்லாது.
மேல்முறையீடு செல்ல நானும் தீபக்கும் முடிவு செய்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்வோம். அதன்பிறகே போயஸ் தோட்டம் செல்வோம்.
எனக்கும் தம்பிக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தர நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாங்கள் தான் சட்டப்பூர்வ வாரிசு என நீதிமன்றமே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் சில பகுதிகளில் தொற்று அறியப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என கண்டறியப்பட்ட கமுதி பால் கடை முதல் முஸ்லிம் பஜார் வரை சாலைகளும், சாலை தெருவிலும் சாலைகள் அடைக்கப்பட்டு தனி நபர் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் வாகனங்களில் செல்லும் நபர்கள் அப்பகுதியை தவிர்த்து மாற்று பாதையை உபயோகப்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPS உடன் வெல்ஃபேர் கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்திப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் தனிமையில் இருந்து மீண்டு நேற்று பணியில் இணைந்த அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPSஐ சந்தித்து நலம் விசாரித்து உரையாடினர்.
நோய்த் தொற்றால் ஏற்படும் தனிமை எவ்வளவு அபாயகரமானது என்பதை உரையாடலின் போது குறிப்பிட்டது, அந்த தனிமையின் வேதனையை வெளிப்படுத்தியது.
அச்சந்திப்பின் நினைவாக வெல்ஃபேர் கட்சியின் மாநில பொருளாளர் அலி அஸ்கர் துணை ஆணையருக்கு சீல்டு மாஸ்க் அணிவித்ததுடன் அவருடன் பணிபுரியும் சக காவலர்களுக்கும், வெல்ஃபேர்கட்சியின் சார்பாக “சீல்டு மாஸ்க்” வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் வழக்கறிஞர் ஷாஜஹான் மற்றும் மாநிலச் செயலாளர் முஹம்மது கவுஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கஷ்டப்படும் குடும்பத்திற்கு உதவிய வடகாடு காவல் ஆய்வாளர்!
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 26.05.2020 அன்று புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான் விடுதியில் கஷ்டப்படும் குடும்பத்திற்கு மாரியம்மன் நற்பணி மன்றம் குழுவின் உதவியுடன் வடகாடு காவல் ஆய்வாளர் பரத்ஸ்ரீனிவாசன் காவல்துறை சார்பாக அரிசி, காய்கறிகள் வழங்கினார். மேலும், கைகளை கழுவும் முறைகள் பற்றியும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொது இடங்களுக்கு வரும்போது முககவசம் அணியுமாறும், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிஐடியு தொழிர்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்; மற்றும் கோரிக்கை மனு..!
by Askar
written by Askar
சிஐடியு தொழிர்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்; மற்றும் கோரிக்கை மனு..!
திண்டுக்கல் ஊராட்சி ஓஎச்டி ஊழியர்கள், தூய்மை காவலர்களுக்கு முதல்வர் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஊராட்சிகளில் உள்ள ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.2600/அடிப்படை ஊதியம் ரூ.4000/ ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி அரசாணை வெளியிடவும், தூய்மை காவலர்களுக்கு ரூ.2600/ ஊதியம் ரூ.3600/ ஆக உயர்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை அரசாணையாக வெளியிட வலியுறுத்தியும், ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கவும், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் , சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமையில் 60 தொழிலாளர்களும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் குணசீலன் தலைமையில் 75 பேரும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் தனசாமி தலைமையில் 70 பேரும், நத்தத்தில் சிஐடியு கன்வீனர் ஸ்டாலின் தலைமையில் 40 பேரும், வத்தலக்குண்டில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் 150 பேரும், நிலக்கோட்டையில் சிஐடியு உதவித்தலைவர் அழகர்சாமி தலைமையில் 70 பேரும், குஜிலியம்பாறையில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேரும், சாணார்பட்டியில் ராஜா தலைமையில் 60 பேரும், தொப்பம்பட்டியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் மோகனா தலைமையில் 50 பேரும் மனு கொடுக்கும் இயக்கத்தில் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சாரசட்டம் 2020-யை வாபஸ் பெற வேண்டி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!
by Askar
written by Askar
இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சாரசட்டம் 2020-யை வாபஸ் பெற வேண்டி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சாரச் சட்டம் 2020 வாபஸ் பெற வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளுக்கு ரூபாய் 10000 வழங்கவேண்டும். மத்திய அரசு வழங்கும் விவசாயிகள் உதவி தொகை ரூபாய் 6 ஆயிரத்தை 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த உத்தரவிட்டு வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 28 மையங்களில் 27-5-2020 (இன்று) விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன்படி தொப்பம்பட்டி 7, ஆத்தூர் 6, சாணார்பட்டி 3, பழனி ரெட்டியார்சத்திரம் நிலக்கோட்டை தலா 2, குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை வத்தலக்குண்டு நத்தம் தலா 1, திண்டுக்கல் ஒன்றியத்தில் 25 பேர்கள் கலந்து கொண்டதில்16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தத்தில் 419 பேர் கலந்து கொண்டுள்ளனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுவினால் தொடரும் உயிர் பலி.. மது மயக்கத்தில் கண் முன்னே மகனை பறிகொடுத்த தந்தை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள ஐ நேந்தல் கண்மாயில் பிரமோத் என்ற ஒன்பது வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி இறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஐநேந்தல் பகுதியை சார்ந்தவர் விருமாண்டி, அவர் தன் மகனுடன் அருகில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அச்சமயத்தில் விருமாண்டி குடிபோதையில் இருந்துள்ளார். அப்பொழுது குளிக்க சென்ற சிறுவன் ஆரமான இடத்திற்கு சென்று தத்தளித்துள்ளான். ஆனால் விருமாண்டி போதையில் நிலை இல்லாமல் இருந்ததால் அவரால் கண்மாயில் இறங்கி காப்பாற்ற இயலாமல், அவர் கண் முன்பே சிறுவன் நீரில் மூழ்கி இறந்துள்ளான்.
பின்னர் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மதுரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குடிபோதையால் தனது 9 வயது மகனை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் மீண்டும் தொடருமா சாலை பணிகள்??.. ஊரடங்கும்.. தடையும் நீங்கி நாட்கள் பல கடந்து விட்டது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வந்த சாலை போடும் பணிகள் நிறுத்தப்பட்டது.
ஆனால் சில நாட்களுக்கு முட்பு ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு கட்டுபாட்டுடன் பணிகள் தொடரலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசும் மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்து நாட்களுக்கு மேலாகியும் சாலை பணிகள் தொடங்கப்படவில்லை.
சாலை பணி பாதியில் நிறுத்தப்படரடதால் பல இடங்களில் மேடு பள்ளத்துடன், இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக போட்டுள்ள தார் சாலையில் கற்கள் பெயர்ந்து வருகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் தரமான சாலையை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மார்ச் முதல் மே 31 வரை கடன் தவனை நீட்டிப்பு காலத்திற்கு வட்டி சலுகை பொருந்தும், வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடியை சந்தித்த பின்;பி.ஆர்.பாண்டியன் அறிக்கை..
by Askar
written by Askar
மார்ச் முதல் மே 31 வரை கடன் தவனை நீட்டிப்பு காலத்திற்கு வட்டி சலுகை பொருந்தும், வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடியை சந்தித்த பின்;பி.ஆர்.பாண்டியன் அறிக்கை..
மத்திய அரசு நபார்டு வங்கி மூலம் கூடுதலாக ரூ30000ம் கோடி அவசரக்காலகடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் இயற்க்கை சீற்றங்களால் ஒட்டு மொத்த தமிழகம் தொடர்ந்து பேரழிவை சந்தித்து வருகிறது. இதனால் பெற்றக் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடி தாங்காமல் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்க்கொலை அதிர்ச்சி மரணங்கள் அடைந்துள்ளனர்.
தற்ப்போது கொரோனா தாக்குதலால் விவசாய உற்ப்பத்தி பொருட்கள் அழிவால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் 80% விவசாயிகள் கடன் பெறும் தகுதியை இழந்துள்ளனர். எனவே வேளாண் கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாய உற்பத்தியை பெருக்க முடியாது.
இதுவரையில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இரண்டு முறை கடன் தவணை திரும்ப செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்தும், வட்டி தள்ளுபடியும் அறிவித்துள்ளார். மார்ச் மாதம் முதல் மே 31 வரை காலத்திற்கான தவணை செலுத்துவதற்க்கான அரசாணை வங்கிகளுக்கு பிறப்பித்துள்ளதாகவும், ஆனால் வட்டி சலுகைப் பெறுவதற்க்கான அரசாணை வழங்கவில்லையெனக் கூறி கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் பெற்ற தேதியில் இருந்து இன்று வரை 9%ம் முதல் 13%ம் வரை வட்டி அபராத வட்டி செலுத்து வேண்டுமென வங்கிகள் கெடுபிடி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 2 வது கட்ட அறிவிப்பில் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்’
தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளும் மத்திய அரசின் 2வது கட்ட அறிவிப்பினை பின்பற்ற மறுப்பதோடு வட்டியில்லா கடனுக்கு அபராத வட்டி வசூல் செய்யப்படும் எனவும் மிரட்டி வருகின்றனர்.
வங்கிகளின் கடன் வசூல் குறித்து விரிவான திட்டமிடும் வகையில் மாநில, மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தை உடன் நடத்தி திட்டமிட தமிழக அரசு முன் வரவேண்டும் என தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களை இன்று தஞ்சாவூரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
அதற்கு அவர் மார்ச் முதல் மே 31 வரை கடன் தவணை நீட்டிப்புக் காலத்திற்கான வட்டி சலுகை பெறுவதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது எனவும் அற்க்கான அரசாணை நகல்களையும் வழங்கினார்.
மேலும் ஜூன் 1 முதல் ஆகஸ்டு வரையிலான கால நீட்டிப்பிற்கும், வட்டி தள்ளுபடி குறித்தான அரசாணைகளும் விரைவில் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்து தொடர் நடவடிக்கை மேற்க்கொள்ளும் வகையில் மாநில, மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேற்க்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் த.புண்ணியமூர்த்தி உடனிருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் 3 நபர்கள் கைது . மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராணி இவரதுவரது மூத்த மகன் விக்னேஷ் என்ற சுப்பிரமணியன் (வயது 36) .
இவரது தந்தை ஆனந்தமூர்த்தி கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்து உள்ளார்.மேலும் இவரது தம்பி இருளப்பன் இரண்டு வருடத்திற்கு முன்பு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்நிலையில் விக்னேஷ் என்ற சுப்பிரமணியன் தாயார் ராணியுடன் காமராஜ நகர் பகுதியில் இருக்கும் தனியார் பர்னிச்சர் கடையில் மூன்று வருடங்களாக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் என்ற சுப்பிரமணியன் 2018 ஆம் ஆண்டு மதுரையில் சரண் என்பவருடன் சேர்ந்து மாரி என்பவரை வெட்டி உள்ளார். வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார்.
பின்பு மும்பைக்கு சென்று வேலை செய்து மீண்டும் மதுரை வந்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை இரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்த பொழுது முதுகில் கத்தியால் ஏற்பட்ட கீறல் காயம் இருந்தது அவனிடம் தாய் ராணி கேட்டதற்கு மாரிக்கு ஆதரவாக மணி, சோனா, சோம்பன் அனைவரும் சேர்ந்து ராஜீவ் காந்தி நகர் பால்வாடி அருகில் வழிமறித்து கத்தியால் முதுகில் கோடு போட்டு விட்டான் என்று ராணியிடம் சொல்லியுள்ளார்.
திருப்பரங்குன்றம் – வெள்ளக்கல் செல்லும் ரோட்டில் விக்னேஷ் என்ற சுப்பிரமணி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவனியாபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக அவனியாபுரம் காவல் துறை ஆய்வாளர் பெத்துராஜ், உதவி ஆணையர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.
வதனிப்படையினர் மாரி, தங்கபாண்டி மற்றும் டோக் ரவி ஆகியோரை அவனியாபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சிறப்பு செயற்குழு ஆலோசனை கூட்டம் என்.அப்துல் ஹனான், எஸ்.பாலன் தலைமையில் இன்று (27.5.2020) நடத்தது. பி.பாலசுப்ரமணியன், எம்.செய்யது சுல்தான், சி.செல்வகுமார், எஸ்.நாகராஜன், எம்.சதக்கத்துல்லாஹ், எம்.காதர் முகைதீன், எஸ்.என்.தொத்திரியாஸ் முன்னிலை வகித்தனர். பேரிடர் கால நிவாரணமாக மீனவர் நல உறுப்பினர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிய தமிழக அரசுக்கும், மீனவர் நலனுக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதி அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரானா பரவல் எதிரொலியால் தங்கள் சொந்த ஊர் சென்ற மீன்பிடி தொழிலாளர்கள் போக்குவரத்து தடையால் ஜூன் 1ல் தொழிலுக்கு திரும்புவதில் சிரமம் உள்ளது.
ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரம் பாதிப்பால் தளவாட சாமான்கள் கிடைக்கப்பெறாததால் படகுகள் சீரமைப்பு பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் . ஜூன் ஒன்றாம் தேதிக்கு பதிலாக ஜூன் 15 அன்று படகுகளை தொழிலுக்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது. தடைக்காலம் நீங்கிய பின் கடலுக்குச் சென்று மீனவர்கள் பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட ஏற்றுமதி மீன் ரகங்களை கொள்முதல் செய்ய ஏற்றுமதி நிறுவனங்கள் முனைப்பு காட்டவில்லை. மீன் ரகங்கள் கொள்முதல் தொடர்பாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர், மீன்வளத்துறை உயரதிகாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜாகீர் உசேன், விஜயரூபன், சர்புதீன், அருளானந்து, மகேஷ், வின்சென்ட், பாக்கிய நாதன், இளங்கோவன், நாராயணன், இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டசமூகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்க:-வைகோ அறிக்கை..
by Askar
written by Askar
பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட
சமூகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்க:-வைகோ அறிக்கை..
மராட்டிய மாநிலம் பீமாகோரேகான் வன்முறை தொடர்பாக பொய் வழக்கு புனையப்பட்டு, மும்பை பைகுல்லா சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமா சென் ஆகிய இரு பெண் சமூகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி சையத் தலைமையிலான குழு மத்திய அரசுக்கும், மராட்டிய மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவில் உச்சநீதிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த், வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், பேராசிரியர் அமித் பாதுரி, பொருளாதார நிபுணரும் பேராசிரியையுமான ஜெயதி கோஷ், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இந்திh ஜெயசிங், காலின் கன்சால்வேஸ், சமூகச் செயற்பாட்டாளர்கள் அருணாராய், தீஸ்தா செதல்வாட், பியூசில் பொதுச்செயலாளர் சுரேஷ், மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென் மற்றும் சபனா ஆஷ்மி உள்ளிட்ட 656 முக்கிய ஆளுமைகள் கையொப்பமிட்டுள்ளனர்.
2018 ஜனவரி 1 இல் பீமாகோரேகானில் எல்கார் பரிசத் நடத்திய மராட்டிய பேஷ்வாக்குகளுக்கு எதிராக ஆங்கிலேய மகர் படைப்பிரிவு நடத்திய போரின் 200 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென், கவிஞர் வரவரராவ், வெர்ணன் கன்சால்வேஸ், வழக்கறிஞர் அருண் பெரைரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
மவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமருக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது அப்போது மராட்டியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியது.
இந்தப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென் ஆகியோர் மும்பை பைகுல்லா சிறையில் கடும் சித்ரவாதைகளைச் சந்தித்து வருகின்றனர். பல்வேறு உடல் நோய்களுடன் போராடி வரும் இவர்கள் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் கொரோனா நோய்த் தொற்று, பரவி இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவேதான் இடைக்கால பிணை அளித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கௌதம் நவ்லகா இருவரும் தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி, மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபா ஆறு ஆண்டுகளாக ஈவு இரக்கமின்றி சிறையில் அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.
இந்துத்துவ கருத்தியலை எதிர்த்து வரும் சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காகப் போராடி வரும் மனித உரிமைப் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) பொய் வழக்குப் புனைந்து நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தி, மிரட்டி அச்சுறுத்தி பணிய வைக்கும் அக்கிரமத்தில் இறங்கி உள்ளது. பா.ஜ.க. அரசின் இத்தகையப் பாசிசத்திற்கு எதிராக இந்தியாவில் அறிவுத்துறையினர் கொந்தளித்து வருகின்றனர்.
பெண்கள் என்றும் பாராமல் சுதா பரத்வாஜ், சோமாசென் போன்றோரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதை ஏற்கவே முடியாது. கொரோனா பேரிடர் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மாற்றுக் கருத்துடையவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு சித்ரவதை செய்வதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமா சென் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை -8
27.05.2020
You must be logged in to post a comment.