சாமுவேல் என்றிச் சுகுவாபே (Samuel Heinrich Schwabe) அக்டோபர் 25, 1789ல் டெசாவ் ஜெர்மனியில் தேசாவு என்னுமிடத்தில் பிறந்தார். இவர் முதலில் இறையியலாளராக இருந்த இவர் பின்னர் வானியலில் கவனம் செலுத்தலானார். 1826ல் சூரியக் கரும்புள்ளிகளை நோக்கிடலானார். இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும் அறிவன் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை நோக்குதல் அரிதெனக் கருதினார். என்றாலும் அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது கரும்புள்ளியாகத் தோன்றும் என நம்பித் தன் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1826 முதல் 1843 வரை 17 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் சூரியனை நோக்கி அதன் கரும்புள்ளிகளைப் பதிவு செய்யலானார். இவர் வல்கானைக் காணாவிடினும் சூரியக் கரும்புள்ளி வட்டிப்பைக் கண்டுபிடித்து “1843 இல் சூரியனின் நோக்கீடுகள் (Solar Observations during 1843)” எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் முடிவுகளை வெளியிட்டார். அதில் இக்கரும்புள்ளிகள் 10 ஆண்டுகளில் பெரும அளவை அடைகின்றன என முன்மொழிந்தார்.இந்த ஆய்வை முதலில் எவரும் கண்டுகொள்ளவில்லை. என்றாலும், அப்போது பெர்ன் வான்காணக இயக்குநராக இருந்த உருடோல்ஃப் வுல்ஃப் , மிகவும் ஆழ்ந்துணரவே சூரியக் கரும்புள்ளிகளின் ஆய்வை முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொண்டார். சுகுவாபேயின் நோக்கீடுகள் பின்னர் 1851ல் அலெக்சாந்தர் வான் அம்போல்டால் தனது அண்டம் (Kosmos) எனும் நூலின் மூன்றாம் தொகுதியில் பயன்படுத்தப்பட்டன. இப்போது சூரியக் கரும்புள்ளிகளின் அலைவுதன்மையும் நேரமும் துல்லியமாக அறியப்பட்டுள்ளன. எனவே வானியலின் ஓர் அரிய கண்டுபிடிப்புக்குச் சுகுவாபே சொந்தக்காரர் ஆனார். இவருக்கு 1857ல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் வழங்கப்பட்டது. சூரியக் கரும்புள்ளி ஒன்றைச் சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையில் கண்டுபிடித்த சாமுவேல் என்றிச் சுகுவாபே ஏப்ரல் 11, 1875ல் தனது 85வது அகவையில் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்திகள்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் குறித்த சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட அனைத்து சிறப்பு மகளிர் மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் 15 வயதிற்கு மேற்பட்ட மார்பகம் தொடர்பான பிரச்சினை உள்ள அனைத்து மகளிருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மார்பகம் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும், ஸ்கேன்,மாமோகிராம், நோய் அறிகுறி பற்றிய ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது..
முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நெல்லை கேன்சர் கேர் சென்டர், குற்றாலம் ரோட்டரி கிளப், தென்காசி மகளிர் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து நடத்தியது. 22.10.21 காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கீதா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் தலைமை தாங்கி மார்பகப் புற்றுநோய் பற்றியும்,தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.நிகழ்வில் வருவாய் அலுவலர் திருமதி ஜனனி சவுந்தர்யா சிறப்புரையாற்றினார். தென்காசி சக்தி ரோட்டரி கிளப் தலைவர் கிருஷ்ணவேணி அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார். சக்தி ரோட்டரி கிளப் மூலம் நோயிலிருந்து குணமான பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நெல்லை கேன்சர் சென்டர் உதவும் கரங்கள் முருகன் ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறியும் அவசியத்தினை பற்றி பேசினார். குற்றாலம் ரோட்டரி கிளை தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டு இது போன்ற மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார். இந்த முகாமில் சுமார் 128 மகளிர் பங்குபெற்று, மார்பகப் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றுக் கொண்டனர். பிங்க் அக்டோபர் சிறப்பு மார்பக புற்றுநோய் முகாமில், மருத்துவர் கீதா,மருத்துவர் லதா, மருத்துவர் மல்லிகா, ஜெரின் இவாஞ்சலின், மருத்துவர் சுவர்ணலதா, மருத்துவர் மணிமாலா, மருத்துவர் வளர்மதி, மயக்க மருத்துவர் ராஜேஸ்வரி,மருத்துவர் ஷீபா, மருத்துவர் இர்பான் உல்ஹக், மருத்துவர் ரஜினிகாந்த், அல்மாஸ் பானு, மருத்துவர் அன்னபேபி, மருத்துவர் ஷமிமா, மருத்துவர் முத்துக்குமாரசாமி, மருத்துவர் கோபிகா,ஆயுஷ் மருத்துவர் மேனகா, மருத்துவர் மகிதாசிரி,மருத்துவர் சிவ நந்தினி, மருத்துவர் உமா மகேஸ்வரி ஆகியோர் சிகிச்சை வழங்கினார்கள். நிகழ்வின் இறுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லோன் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் என்ற நபரின் முகநூல் பக்கத்தில் இருந்து அவரது தொலைபேசி எண்ணை எடுத்து அவருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நபர் 4 லட்சம் ரூபாய் லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கூகுள் பே மூலம் ரூபாய் 40,000 வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். இது குறித்து செல்வம் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி வழக்கு பதிவு செய்து எதிரியின் தொலைபேசி எண் மற்றும் வங்கி விபரங்களை வைத்து முகவரியை கண்டறிந்ததில் மேற்படி மோசடியில் ஈடுபட்டது இடையர்பாளையம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் கார்த்திகேயன் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் எதிரியை தேடி வந்த நிலையில் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை சார்பு ஆய்வாளர் மாதவன், தலைமை காவலர் கோபி மற்றும் காவலர் முத்துக்குமார் ஆகியோர் எதிரியை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து பின்பு சிறையில் அடைத்தனர்.மேலும் கார்த்திகேயன் இது போல் பலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்;சுரண்டை அருகே பரபரப்பு..
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் கிராம பகுதியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலில் உறுப்பினர் ஒருவரை வாக்களிக்க தடுத்ததாக கூறி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கடையநல்லூர் ஒன்றியம் ஆனைகுளம் பஞ். தலைவராக, அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ராஜகுமாரி, யாசர் அராபத், செல்வமணி, கணேசன், வசந்தகுமாரி, இசக்கியம்மாள், மீனா, பெனாசீர் பானு ஆகிய ஒன்பது பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 8வது வார்டு உறுப்பினர் மீனா மற்றும் 3வது வார்டு உறுப்பினர் செல்வமணி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தல் நேரமான 10.30 மணிக்கு மேல் ஆகியும் தேர்தல் நடந்த பஞ்சாயத்து அலுவலக வளாகத்திற்குள் 4-வது வார்டு உறுப்பினர் கணேசன் வரவில்லை என கூறப்படுகிறது.
எனவே செல்வமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த ஒன்றாவது வார்டு பொதுமக்கள் அங்கு கூடத் தொடங்கினர். மீனாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த கணேசனை சிலர் தாக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றதாகவும், எனவே, தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டமும் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் மற்றும் சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் திரளாக கூட கூடாது எனவும், உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தால் தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎஸ்பி அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் ஆனைகுளத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் துவக்கும் பணியை தீவிரப்படுத்துக. பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை மனு
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை ( NIPER ) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத்தை துவக்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும், விரைந்து துவக்க வேண்டிய தேவை குறித்தும் உரம் மற்றும் இரசாயனத்துறை செயலாளர் . அபர்னா இஆப நிதித்துறை செயலளர்(செலவினம்) .T.V. சோமநாதன் சந்தித்துப் பேசிய மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன்தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்காக மதுரையில் 2012 ஆம் ஆண்டு தரப்பட்ட நூறு ஏக்கர் நிலமானது முன்நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்நிலமானது கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே இருக்கிறது. அதற்கான விண்ணப்பமும் மருந்தியல் கழகம் சார்பில் தரப்படவில்லை.இது தேவையற்ற பிரச்சனையை பிற்காலத்தில் உருவாக்கும். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் போல, நிலத்துக்கான பெயர்மாற்றம் மற்றும் ஒப்படைத்தல் என்பதே பெரும் காலவிரயத்தை உருவாக்கும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் பிற வேலைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும் உண்டு.எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழகத்தின் பெயரில் மாற்றித்தர உரிய விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு துறைச்செயலாளரிடம் வலியுறுத்தினேன். மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடமிருந்து பெற்று வந்த அதற்குறிய விண்ணப்பத்தையும் ஒன்றிய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன்.விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்புகிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் .
மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும்.பெண்களைவிட ஆண்கள் அதிகம் மார்பக புற்றுநோயால் பாதிப்பு அடையலாம்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மார்பக புற்றுநோய் விழிப்புணர்பு முகாமை வேலம்மாள் மருத்துவமனை இயக்குநர் கார்த்திக் முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்.வேல்மாள் மருத்துவ கல்லூரி புற்றுநோய் துறை தலைவர் Dr.ராஜ்குமார். பேசும் போது மார்பக புற்றுநோய் என்பது ஆரம்பகாலகட்டத்தில் கண்டறியப்படுவதில்லை .பெண்கள் உடற்பயிற்ச்சி மற்றும் சுயபரிசோதனைகள் மூலம் மார்பக கட்டிகளை பற்றி தெரிந்து சிகிட்சை ஆரம்பிக்கலாம்.இதேபோல் ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மிகவும் பாதிப்பை உண்டாக்கும். பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் கட்டி பற்றி அறிந்து கொள்வதில்லை என்பது வருத்தமான செய்தி ஆகையால் அனைவரும விழிப்புணர்வுடன் இருந்து கொள்வது அவசியம் என குறிப்பிட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1804).
வில்கெம் எடுவர்டு வெபர் (Wilhelm Eduard Weber) அக்டோபர் 24, 1804ல் ஜெர்மனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815ல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது வகுப்புகளில் சிறந்து விளங்கிய வெபருக்கு முனைவர் பட்டத்துடன் பேராசிரியராகப் பணியும் அதே பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. 1831ல், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் பரிந்துரையில், தமது 27வது அகவையிலேயே கொட்டிஞ்சென் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிக்கமர்த்தப்பட்டார். தமது மாணவர்களை தாம் விளக்கும் பாடங்களையும் சோதனைகளையும் கல்லூரி ஆய்வகத்தில் கட்டணமேதுமின்றி அவர்களே சோதனைகளை மேற்கொள்ள ஊக்குவித்தார்.தமது இருபதாவது அகவையிலேயே தம் உடன்பிறப்பான எர்னஸ்ட் வெபருடன் இணைந்து அலைக் கோட்பாடும் பாய்மத்தன்மையும் என்ற நூலை எழுதினார். இது மிகவும் புகழ்பெற்றது. ஒலியியல் இவருக்கு மிகவும் விருப்பமான அறிவியல்துறையாக இருந்தது. இத்துறையில் பல நூல்களை எழுதினார். தமது தம்பி எடுவர்டு வெபருடன் இணைந்து மனிதர்கள் நடப்பதின் இயக்கவியல் என்ற நூலை எழுதினார். இந்த நூல்கள் 1825க்கும் 1838க்கும் இடையே எழுதப்பட்டன. 1833ல் வெபரும் காஸும் இணைந்து முதல் மின்காந்த தந்தியை தங்கள் ஆய்வகத்திலிருந்து கொட்டிஞ்சென் இயற்பியல் கழகம் வரை நிறுவினர். டிசம்பர் 1837ல் அரசியல் காரணங்களுக்காக அனோவர் அரசு வெபரை பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்தது. சிலகாலம் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளுக்குச் சென்றிருந்த வெபர் லைப்சிக்கில் இயற்பியல் பேராசிரியராக 1843 முதல் 1849 வரை பணிபுரிந்தார். 1849ல் கொட்டிஞ்சென் மீண்டும் இவரை பணிக்கமர்த்தியது.கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் மற்றும் கார்ல் பெஞ்சமின் கோல்ட்ஸ்மிட்டுடன் இவர் எழுதிய புவியின் காந்தப்புலத்தின் நிலப்படத் தொகுப்பு கோட்பாடுகளின் படி வடிவமைக்கப்பட்டது மிகவும் முக்கிய ஆக்கமாகும். இவரது முயற்சியாலேயே காந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. காஸுடன் இணைந்து காந்தவியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். 1864ல் மின்னியக்க விகிதசம அளவைகள் என்ற நூலில் மின்னோட்டத்தை அளப்பதற்கான நெறிமுறைகளை விவரித்திருந்தார். 1855ல் அரச சுவீடிய அறிவியல் கழக வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1856ல் ருடோல்ஃப் கோல்ரோச்சுடன் இணைந்து நிலை மின்னியலுக்கும் மின்காந்தவிசைக்கும் இடையேயான விகிதம் அப்போது கண்டறிந்திருந்த ஒளியின் வேகத்திற்கு இணையான எண்ணாக அமைந்திருந்ததை நிரூபித்தார். இந்த நிரூபணமே பின்னர் ஒளியும் மின்காந்த அலைகளே என்ற மக்சுவல்லின் உய்த்துணர்விற்கு காரணமாயிற்று. மேலும் இது மின்னியக்கவியலுக்கும் வித்திட்டது. மேலும் 1856இல் வெபரும் கோல்ரோச்சும் தங்கள் ஆயவுக்கட்டுரை ஒன்றில் முதன்முதலாக ஒளியின் வேகத்திற்கு “c” என்ற குறியீட்டைப் பயன்படுத்தினர்.கார்ல் காசுடன் இணைந்து முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த வில்கெம் எடுவர்டு வெபர் ஜூன் 23, 1891ல் தனது 86வது அகவையில் கொட்டிஞ்செனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். காந்தப்பாயத்திற்கான அனைத்துலக அலகு வெபர் (Wb) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வெபர் கொட்டிஞ்செனில் மரணமடைந்த போது மேக்ஸ் பிளாங்க், மாக்ஸ் போர்ன் புதையுண்டிருந்த அதே கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற பதத்தை பயன்படுத்தி லிஸ்ப் (Lisp) கணினி மொழியைக் அறிமுகப்படுத்திய ஜான் மெக்கார்த்தி நினைவு தினம் இன்று (அக்டோபர் 24, 2001).
ஜான் மெக்கார்த்தி (John McCarthy) செப்டம்பர் 4, 1927ல் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் ஒரு ஐரிஷ் குடியேறிய தந்தை மற்றும் லிதுவேனியன் யூத குடியேறிய தாய் ஆகியோருக்கு பிறந்தார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒருங்கிணைந்த ஆடைத் தொழிலாளர்களின் அமைப்பாளராக மெக்கார்த்தியின் தந்தை வேலை பெறும் வரை, குடும்பம் பெரும் மந்தநிலையின் போது அடிக்கடி இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அவரது தந்தை அயர்லாந்தின் கவுண்டி கெர்ரியில் உள்ள குரோமேன் என்ற மீன்பிடி கிராமத்திலிருந்து வந்தவர். அவரது தாயார் 1957ல் இறந்தார். மெக்கார்த்தி விதிவிலக்காக புத்திசாலி, பெல்மாண்ட் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆரம்பத்தில் பட்டம் பெற்றார். மெக்கார்த்தி 1944ல் கால்டெக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.மெக்கார்த்தி கணிதத்திற்கான ஆரம்பகால திறனைக் காட்டினார். தனது இளம் வயதிலேயே அருகிலுள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (கால்டெக்) இல் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களைப் படிப்பதன் மூலம் கல்லூரி கணிதத்தை கற்றுக் கொண்டார். இதன் விளைவாக, கால்டெக்கில் கணிதத்தின் முதல் இரண்டு ஆண்டுகளை அவர் தவிர்க்க முடிந்தது. உடற்கல்வி படிப்புகளில் கலந்து கொள்ளத் தவறியதற்காக மெக்கார்த்தி கால்டெக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். மேலும் பி.எஸ். 1948 இல் கணிதத்தில் கால்டெக்கில் தான் ஜான் வான் நியூமன் ஆற்றிய சொற்பொழிவில் கலந்துகொண்டது அவரது எதிர்கால முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.மெக்கார்த்தி ஆரம்பத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு கால்டெக்கில் பட்டப்படிப்பு படிப்பை முடித்தார். 1951ல் பிரின்ஸ்டனில் இருந்து கணிதத்தில் ஸ்பென்சரின் மேற்பார்வையின் கீழ் “ப்ரொஜெக்ஷன் ஆபரேட்டர்கள் மற்றும் பகுதி வேறுபாடு சமன்பாடுகள்” என்ற தலைப்பில் பி.எச்.டி. ஆய்வுக் கட்டுரையை முடித்தார்.பிரின்ஸ்டன் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் குறுகிய கால நியமனங்களுக்குப் பிறகு, மெக்கார்த்தி 1955 இல் டார்ட்மவுத்தில் உதவி பேராசிரியரானார். ஒரு வருடம் கழித்து, மெக்கார்த்தி 1956 இலையுதிர்காலத்தில் ஒரு ஆராய்ச்சி சக ஊழியராக எம்ஐடிக்கு சென்றார். 1962 ஆம் ஆண்டில், மெக்கார்த்தி ஸ்டான்போர்டில் ஒரு முழு பேராசிரியரானார். அங்கு அவர் 2000ல் ஓய்வு பெறும் வரை இருந்தார். எம்ஐடியில் தனது ஆரம்ப நாட்களின் முடிவில், அவர் ஏற்கனவே தனது மாணவர்களால் “மாமா ஜான்” என்று அன்போடு குறிப்பிடப்பட்டார். செயற்கை நுண்ணறிவுக்கான கணித தர்க்கத்தை மெக்கார்த்தி வென்றார்.ஆலன் டூரிங், மார்வின் மின்ஸ்கி, ஆலன் நியூவெல் மற்றும் ஹெர்பர்ட் ஏ. சைமன் ஆகியோருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவின் “ஸ்தாபக பிதாக்களில்” ஜான் மெக்கார்த்தி ஒருவர். மெக்கார்த்தி, மின்ஸ்கி, நதானியேல் ரோசெஸ்டர் மற்றும் கிளாட் ஈ. ஷானன் ஆகியோர் 1956 ஆம் ஆண்டு கோடையில் புகழ்பெற்ற டார்ட்மவுத் மாநாட்டிற்கு எழுதிய ஒரு திட்டத்தில் “செயற்கை நுண்ணறிவு” என்ற வார்த்தையை உருவாக்கினர். இந்த மாநாடு AI ஐ ஒரு துறையாகத் தொடங்கியது. மெக்கார்த்தி 1950 களின் பிற்பகுதியில் லிஸ்பைக் கண்டுபிடித்தார். லாம்ப்டா கால்குலஸின் அடிப்படையில், 1960 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்னர் லிஸ்ப் விரைவில் AI பயன்பாடுகளுக்கான நிரலாக்க மொழியாக மாறியது. 1958 ஆம் ஆண்டில், மெக்கார்த்தி மொழிகள் குறித்த ACM தற்காலிகக் குழுவில் பணியாற்றினார், இது ALGOL 60 ஐ வடிவமைத்த குழுவின் ஒரு பகுதியாக மாறியது. ஆகஸ்ட் 1959 இல் அவர் மறுநிகழ்வு மற்றும் நிபந்தனை வெளிப்பாடுகளைப் பயன்படுத்த முன்மொழிந்தார். இது ALGOL இன் பகுதியாக மாறியது. அல்காரிதமிக் மொழிகள் மற்றும் கால்குலி பற்றிய சர்வதேச தகவல் கூட்டமைப்பு (IFIP) IFIP பணிக்குழு 2.1 இன் உறுப்பினராக, நிரலாக்க மற்றும் தகவல்தொடர்புகளில் சர்வதேச தரங்களை வளர்ப்பதில் அவர் ஈடுபட்டார்,1961 ஆம் ஆண்டில், எம்ஐடியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக வழங்கப்பட்ட உரையில், பயன்பாட்டு கம்ப்யூட்டிங் என்ற கருத்தை பகிரங்கமாக பரிந்துரைத்தவர் அவர்: கணினி நேர பகிர்வு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கம்ப்யூட்டிங் சக்தியையும் குறிப்பிட்ட பயன்பாடுகளையும் கூட விற்கக் கூடியதாக இருக்கும். பயன்பாட்டு வணிக மாதிரி (நீர் அல்லது மின்சாரம் போன்றவை). கணினி அல்லது தகவல் பயன்பாட்டின் இந்த யோசனை 1960 களின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் 1990 களின் நடுப்பகுதியில் மங்கிவிட்டது. இருப்பினும், 2000 ஆம் ஆண்டிலிருந்து, யோசனை புதிய வடிவங்களில் மீண்டும் தோன்றியது. 1966 ஆம் ஆண்டில், ஸ்டான்போர்டில் உள்ள மெக்கார்த்தியும் அவரது குழுவும் சோவியத் யூனியனில் உள்ள சக வீரர்களுடன் தொடர்ச்சியான சதுரங்க விளையாட்டுகளை விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கணினி நிரலை எழுதினர். 1982 ஆம் ஆண்டில், விண்வெளி நீரூற்று என்ற கருத்தை அவர் உருவாக்கியதாகத் தெரிகிறது, இது ஒரு வகை கோபுரம் விண்வெளியில் விரிவடைந்து, பூமியிலிருந்து உந்தப்பட்ட ஒரு துகள்களின் வெளிப்புற சக்தியால் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. பேலோட்கள் கன்வேயர் பெல்ட்டை மேல்நோக்கி சவாரி செய்யும்.செயற்கை நுண்ணறிவிற்காக தாம் ஆற்றிய பங்களிப்பிற்காக 1971 ஆம் ஆண்டு, டியூரிங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற டார்த்மோத் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவிற்கு பொருத்தமான ஆங்கிலப்பதமான Artificial Intelligence என்ற பதத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார். லிஸ்ப் (Lisp) என்ற கணினி மொழியைக் கண்டுபிடித்த ஜான் மெக்கார்த்தி அக்டோபர் 24, 2001ல் தனது 84வது அகவையில் ஸ்டான்போர்ட், கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த பத்ம விபூஷன் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 24, 1940).
கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan) அக்டோபர் 24, 1940ல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஸ்ரீஇராம் வர்மா அரசு உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மத்திய மும்பையின், மாதுங்காவில் உள்ள ராம்நரைன் ரூயா கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அகமதாபாத், பெசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, 1971 இல், உயர் ஆற்றல் வானியலில் தனது டாக்டர் பட்டம் பெற்றார். வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் 244 க்கும் மேற்பட்ட ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். 1993 முதல் 2003 வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்தார். மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார். 2004 ஏப்ரல் முதல் 2009 வரை பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் இயக்குநராகவும் இருந்தார். தற்போது ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். டாக்டர் கஸ்தூரிரங்கன் 16 பல்கலைக் கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.இந்திய அரசால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷன் (1992) மற்றும் பத்ம விபூஷன் (2000) ஆகிய மூன்று முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது, எம்.பி. பிர்லா நினைவு விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.Source By: Wikipediaதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர் இந்த நிலையில் அப்புகாரின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்ட கீளை நியூஸ் மோசமான சாலைகள் குறித்து செய்தியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதில் விழுந்து சிலர் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவ்வளவும் ஏற்பட்டது புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதை மாநகராட்சி ஆணையாளர் பார்வைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது இதனடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வார்டு நேரு நகர் மெயின் ரோடு பகுதியில் அப்பகுதி அதிகாரி சேவியர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் செய்தி வெளியிட்ட இரண்டே நாட்களில் சாலை சரிசெய்யப்பட்டது அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் செய்தி தளத்திற்கும் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலைகளில் குழந்தைகளை,பிச்சை எடுக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியது:தமிழக முதல்வர், பெண்கள், குழந்தைகள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார்.திருமண உதவி திட்டம் கேட்டு இதுவரை விண்ணப்பித்தவர்களுக்கு, தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் சில மாற்றங்கள் கொண்டு வர ஆலோசிக்கப்படுவதாகவும், திருமண நிகழ்சிகள் பதிவு செய்த பின், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.தமிழகத்தில் சிறு வயதில் திருமணம் செய்வது குறைந்து வருவதாகவும், பாலிய திருமணத்தை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடந்த ஆட்சிக் காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, எட்டு கிராமமாக உயர்த்தப்பட்டாலும், அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லையென, குற்றம் சாட்டினார் அமைச்சர்.முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில், அமைச்சர் பி. மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. தளபதி, புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதுப்பட்டியில்ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி. விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் புதுப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளதாகவும் விபத்து ஏற்படும் முன்பு இடித்து விட்டு புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த குடிநீர் தொட்டி ஆனதுசுமார் ஆறு ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் அருகில் கோவில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பதாகவும் வெள்ளி செவ்வாய் போன்ற சுப நாளில் பொதுமக்கள் அதிக அளவில்கோவிலுக்கு வருகை தருகிறார்கள் .
அதனால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் முன்பு இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக குடிநீர் தொட்டியை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காரணமாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் ஆகையால் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்றி விட்டு புதிதாக வேறு இடத்தில் குடிநீர் தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் பணி. சாரணிய மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு
திருவண்ணாமலை அடுத்த பழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரம்மானந்தன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோ.பிரம்மானந்தன் தலைமையில் திருவண்ணாமலை பாரத சாரண இயக்கத்தின் மாவட்ட பயிற்சி ஆணையரும் , பட்டதாரி ஆசிரியருமான கலைவாணி மற்றும் சாரணிய மாணவர்கள் 6 – ம் கட்ட தடுப்பூசி முகாம் பணி மற்றும் கிராமப்புற பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.சாரணர் இயக்கத்தின் மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி மற்றும் சாரண மாணவர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள டோக்கன் வழங்கினார். இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
படியில் நின்ற மாணவர்கள். பாதியிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர். நடுரோட்டில் நின்ற பயணிகள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் வத்தலக்குண்டில் இருந்து நிலக்கோட்டை அணைப்பட்டி வழியாக தினம்தோறும் உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் தெற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் உசிலம்பட்டி நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வத்தலகுண்டில் இருந்து உசிலம்பட்டி பேருந்து சென்றது. பேருந்து நிலக்கோட்டை பகுதியைத் தாண்டிச் சென்றது. நிலக்கோட்டை பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுப்புற மாணவர்கள் அதிக அளவில் பேருந்தில் ஏறினார் இதன்காரணமாக பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது.கூட்டத்தை கட்டுப்படுத்தவும் மேலும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை படிக்கட்டில் தொங்காமல் பேருந்தின் உள்ளே வரச் சொல்லியும் நடத்துனர் பலமுறை மாணவர்களிடம் கூறினார் ஆனால் மாணவர்களோ நடத்துனர் சொல்வதை எதையும் கேட்கவில்லை. இதன் காரணமாக அணைப்பட்டி அருகிலுள்ள திரவியநகர் என்றார் பகுதிக்கு பேருந்து வந்தது ஓட்டுநரும் மாணவர்களிடம் உள்ளே செல்லுமாறு கூறினார் ..ஆனால் மாணவர்கள் கேட்காததால் அதே இடத்தில் பேருந்து நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர் சென்றுவிட்டார். இதனால் பேருந்தில் வந்த பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டு நிலக்கோட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரும் நேரில் வந்தனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் பேருந்து நடுப் பகுதிக்கு சென்றதால் காவல்துறையினர் மற்றும் பேருந்தில் வந்த பயணிகள் அரசு பேருந்து ஓட்டுநர் இடம் இதுபோன்ற தவறை இனி நடக்காது என்று கூறியதை அடுத்து மீண்டும் பேருந்து உசிலம்பட்டி நோக்கி சென்றது… பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
நிலக்கோட்டை செய்தியர்ளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.
இராஜபாளையம் தொகுதியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை இன்று (23.10.2021) காலை 9 மணியளவில் S.தங்கப்பாண்டியன் MLA ரவிச்சந்திரன் DRO வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்களும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய MLA இந்தியாவிலே அதிக மக்களுக்கு தடுப்பூசி போட்ட மாநிலம் தமிழ்நாடு தான் எனவும் தமிழக முதல்வர் மெகா தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி அதிக மக்களுக்கு தடுப்பூசி போட வழிவகை செய்துள்ளார் எனக் கூறினார் மேலும் தமிழக மக்களை காப்பாற்ற பெரும் முயற்சியும் ஓயாமல் உழைப்பையும் மேற்கொள்ளும் சிறந்த முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக் கூறினார்.இந்நிகழ்வில் செயல் அலுவலர் சந்திரகலா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் இளைஞர் அணி மாரிமுத்து கலைவானர் சாமுவேல் சகாயம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை நவீன சிகிச்சையில் முன்னோடியாகத் திகழும் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, இருதய சிகிச்சையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இயற்கையாக தானே கரையக்கூடிய (BRS – Bioresorbable Stent) ஸ்டென்ட்டை தென் தமிழகத்தில் முதன்முறையாக பொருத்தி வெற்றிகரமாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்து சாதனை படைத்துள்ளது.இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக திகழ்வது இருதய இரத்த நாள நோய் (Coronary Artery Disease) ஆகும். உலக அளவில், இருதய இரத்த நாள நோயால் ஏற்படும் இழப்புகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது இருதய இரத்த நாள நோயினால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையும் மேற்கத்திய நாடுகளை விட தமிழகத்தில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பில்லாது அமர்ந்த நிலையிலேயே அதிக நேரம் செலவிடும் வேலை முறை இவற்றைத் தவிர நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பரவல் இவையனைத்தும் இந்திய இளைஞர்களிடையே அதிக இருதய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களுக்கும் இருதய இரத்த நாள நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் விவேக் போஸ் தனது அனுபவத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் இளைஞர்கள் அதிக அளவில் இருதய இரத்த நாள நோய் பாதிப்புக்குள்ளாவதாக கூறினார்.உயர் இரத்தஅழுத்தம் கொண்ட 41 வயதுடைய நோயாளி நெஞ்சில் சிறு அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு வழக்கமான ஈசிஜி மற்றும் எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு மற்றும் தொடர் நெஞ்சு வலியின் காரணமாக அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராபியில் அவருக்கு இடது இரத்த நாளத்தில் ஒற்றை அடைப்பு மற்றும் இரத்தக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அவரது வயது மற்றும் இரத்தக் கட்டி இருப்பதை கருத்தில் கொண்டு, மருத்துவர் விவேக் போஸ் மற்றும் அவரது குழுவினர், அந்த இளைஞருக்கு சமீபத்தில் செயல்பாட்டிற்கு வந்த இந்திய தயாரிப்பான இயற்கையாகவே தானே கரையக்கூடிய ஸ்டென்ட்டை பயன்படுத்த திட்டமிட்டனர். வழக்கமாக பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உலோகத்தால் ஆனவை. மேலும் நிரந்தரமாக உடலின் உள்ளேயே இருப்பவை.’கரையக்கூடிய ஸ்டென்ட்’ என்பது இயற்கையாகவே கரையும் பொருளால் ஆனது. இரண்டு மூன்று வருடங்களில் கரைந்து மறைந்து போகக் கூடியவை. அடைப்பைக் கரைத்து இரத்த நாளத்தை விரிவடையச் செய்தபின், சிகிச்சை அளித்த இரத்த நாளத்தின் உட்சுவரை குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலையையும் மிகச் சிறப்பாக செய்கிறது. மெரில் லைப் சயின்சஸ் நிறுவனத்தின் MeRes 100 BRS என்பது உலகின் முதல் 100 மைக்ரான் அளவுள்ள மெல்லிய Stent அடுக்குகள் ஆகும் இது இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் (DCGI – Drug Controller General of India) ஒப்புதல் மற்றும் ஐரோப்பாவின் CE ஒப்புதல்களைப் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய ஆராய்ச்சியில் இதன் நேர்மறை பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இருதய சிகிச்சையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் பயன்பெறலாம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மருத்துவ நிர்வாகி டாக்டர். பிரவீன் ராஜன், டாக்டர். நிகில் திவாரி நிர்வாக பொது மேலாளர் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் கே. மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கருப்பட்டியில் தொடர் மழையால் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், நாச்சிகுளம் , பொம்மன் பட்டிஉள்ளிட்ட கிராமங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இந்தப்பகுதி விவசாயிகளால் வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் அரசு கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகி வருவதாகவும் கொள்முதல் செய்த நெல்லை ஈரப்பதம் உள்ளதாக கூறி திருப்பி அனுப்பியதாகவும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, விவசாயி கூறும்போது: அரசாங்கத்தை நம்பி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வைத்துள்ளோம். கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வருவதாகவும், அதிகாரியிடம் பலமுறை சென்று முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துசெல்லப்பட்ட நெல் மூட்டைகளையும் ஈரப்பதம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால், முளைத்து வீணாகி வருவதாகவும் இரண்டு நாட்களுக்குள் கொள்முதல் செய்யப்பட வில்லை என்றால், விவசாயிகளை ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபக்சே குடும்பத்திற்காக குனிந்து கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது., MP குற்றச்சாட்டு.
நூறு நாள் வேலைத்திட்டத்தை பற்றி குறை சொல்பவர்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு இதை சொல்ல வேண்டும். தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இலங்கை அமைச்சருக்கு மோடி அரசு வரவேற்றது கண்டனத்துக்குரியது. ராஜபக்ச குடும்பத்திற்கு குணிந்து கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது என மாணிக் தாகூர் எம்பி குற்றம் சாட்டினார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக் தாகூர் கூறுகையில்.?நூறு நாள் வேலைத் திட்டம் வீண்னென்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை நேரடியாக வந்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால்., நேரில் வராமல் அது குறித்து எதுவும் தெரியாமல் குறை சொல்வது என்பது கண்டனத்துக்குரியது.100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப் படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது என செய்தியாளர்களின் கேள்விக்கு.?100 நாள் வேலை திட்டம் வருடத்திற்கு 365 நாட்கள்., விவசாய பணிகள் நடைபெறும். இதை தவிர்த்து மீதமுள்ள 100 நாட்கள் விவசாயப் பணிகள் இல்லாத நாட்கள் என்பதால் இந்த காலகட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும். இதனை தெரியாமல் சினிமாவில் வசனம் பேசுவது போன்று சிலர் பேசி வருகிறார்கள் என தெரிவித்தார்.தொடர்ந்து., உத்தரப் பிரதேசத்துக்கு இலங்கை அமைச்சர் வருகை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு.?மோடி அரசு தொடர்ந்து தமிழர்களின் மனதை புண்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் துரத்தப்பட்டு., ஒரு மீனவர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அமைச்சருக்கு மத்திய அரசு மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பது தமிழர்களின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தற்போதைய மோடி அரசு ராஜபக்ச குடும்பத்திற்கு குனிந்து கொடுக்கக்கூடிய ஒரு அரசாக உள்ளது என மாணிக்கம் தாகூர் M.P தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23, 1873).
வில்லியம் டி கூலிட்ஜ் (Willaim D. Coolidge) அக்டோபர் 23, 1873ல் மாசாசூசெட்சிஸின், ஹட்சனுக்கு எனும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். 1891 முதல் 1896 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி) மின் பொறியியல் பயின்றார். இரு ஆண்டுகள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணிபரிந்தார். ஒரு வருடம் கழித்து, மேலதிக படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி 1899 முதல் 1905 வரை எம்ஐடியில் வேதியியல் துறையின் ஆர்தர் ஏ. நொயஸின் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார்.கூலிட்ஜ் 1905ல் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக வேலைக்குச் சென்றார். அங்கு அவர் சோதனைகளை மேற்கொண்டார். இழை மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தினார். டங்ஸ்டன் ஆக்சைடை சுத்திகரிப்பதன் மூலம், இழைகளாக எளிதில் இழுக்கக்கூடிய ‘டக்டைல் டங்ஸ்டன்’ ஐ உருவாக்கினார். 1911 ஆம் ஆண்டு தொடங்கி, ஜெனரல் எலக்ட்ரிக் புதிய உலோகத்தைப் பயன்படுத்தி விளக்குகளை சந்தைப்படுத்தியது, அவை விரைவில் GE இன் முக்கியமான வருமான ஆதாரமாக மாறியது. அவர் 1913 ஆம் ஆண்டில் இந்த ‘கண்டுபிடிப்புக்கு’ காப்புரிமைக்கு (அமெரிக்க # 1,082,933) விண்ணப்பித்துப் பெற்றார். இருப்பினும், 1928 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க நீதிமன்றம் தனது 1913 காப்புரிமை ஒரு கண்டுபிடிப்பாக செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது.1913 ஆம் ஆண்டில் அவர் கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தார். எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்த மேம்பட்ட கேத்தோடு கொண்ட எக்ஸ்ரே குழாய். இது ஆழமான அமர்ந்த உடற்கூறியல் மற்றும் கட்டிகளை இன்னும் தீவிரமாக காட்சிப்படுத்த அனுமதித்தது. கூலிட்ஜ் குழாய், டங்ஸ்டன் இழைகளைப் பயன்படுத்தியது. அப்போதைய புதிய மருத்துவ சிறப்பு கதிரியக்கவியலில் ஒரு பெரிய வளர்ச்சியாக இருந்தது. அமெரிக்க காப்புரிமை 1913 இல் தாக்கல் செய்யப்பட்டது மற்றும் 1916 இல் அமெரிக்க காப்புரிமையாக 1,203,495 வழங்கப்பட்டது. அதன் அடிப்படை வடிவமைப்பு இன்னும் பயன்பாட்டில் உள்ளது. முதல் சுழலும் அனோட் எக்ஸ்ரே குழாயையும் கண்டுபிடித்தார்.அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் 1914 ல் கூலிட்ஜுக்கு தி ரம்ஃபோர்ட் பரிசை வழங்கியது. கூலிட்ஜுக்கு 1927 ஆம் ஆண்டில் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் எடிசன் பதக்கம் வழங்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் இந்த மதிப்புமிக்க விருதை அவர் நிராகரித்தார். அவருக்கு 1926ல் ஹோவர்ட் என். பாட்ஸ் பதக்கமும், 1927ல் லூயிஸ் ஈ.லெவி பதக்கமும் வழங்கப்பட்டது. கூலிட்ஜுக்கு 1939ல் ஃபாரடே பதக்கம் வழங்கப்பட்டது. அவருக்கு 1944ல் பிராங்க்ளின் பதக்கம் வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சூடான கேத்தோடு எக்ஸ்ரே குழாயைக் கண்டுபிடித்ததற்காக ரெம்ஷெய்ட் நகரம் அவருக்கு ரோன்ட்ஜென் பதக்கத்தை வழங்கியது.தேசிய புகழ்பெற்றக் கண்டுபிடிப்பாளர் அரங்கிற்கும் தேர்ந்து எடுக்கப்பட்டார். மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிப்ரவரி 3, 1975ல் தனது 101வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1975 ஆம் ஆண்டில் அவர் நியூயார்க்கின் ஷெனெக்டேடியில் 101 வயதில் இறப்பதற்கு சற்று முன்னர் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துரை வைகோ தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்கெடுப்பு ஓட்டு பெட்டி வைத்து 106 பேர் கலந்து கொண்டதில் 104 பேர் வாக்களித்தனர்.’ பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம்.ஆனால்முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் . எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் தான் நடைபெற்றது கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை மாவட்ட செயலாளர்கள் வரவேற்று அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் என கூறியதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது தனிப்பட்ட முறையில் துரைவைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் துரை வைகோவுக்கு அரசியலுக்கு வருவது கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர். சில நாளிதழ்களில் விமர்சனங்கள் செய்கின்றன. விமர்சனங்கள் அரசியலில் வருவது சகஜம் ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர் சில பேர் கட்சியை விட்டு செல்வதால் கட்சி பிளவுபடும் என்ற நோக்கம் அல்ல .தொடர்ந்து கட்சி வலுவாக தான் உள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத சிலர் வாட்ஸ்அப் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் உத்திரப்பிரதேச விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை இல்லையேல் கடந்தமுறை சாஞ்சியில் நடைபெற்றது போல் 1500 பேருடன் சென்று எதிர்ப்பு தெரிவிப்போம் வரும் 1ஆம் தேதி லண்டனுக்கு செல் லும் கோத்தபய ராஜபக்சேவை எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு தவறு செய்தவர்கள்தண்டிக்கப்பட வேண்டும் என வைகோகூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.