தூத்துக்குடி மில்லர் புரம் 1 ஆவது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 72) இவர் கடந்த 17 ஆம் தேதி முதல் காணவில்லை, இது தொடர்பாக தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி தெர்மல் கடற்கரை பின்புறம் இவருடைய உடல் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, மீனவராக இல்லாத இவருடைய உடல் கடலில் விழுந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் , இது கொலையா ? தற்கொலையா ? என்ற ரீதியில் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்
You must be logged in to post a comment.