திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் பகுதியில் அடிப்படை வசியான தெருவிளக்கு வசதி இல்லாமல் தத்தளித்து வந்த கிராம மக்கள் மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி நூதன போராடத்தில் ஈடுபட்டனர் .செங்கம் அடுத்த புதியகுயிலம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களாக தங்கள் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு எரியாமல் உள்ளதாக ஊராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்ததாகவும் இதனை கண்டுகொள்ளாமல் ஊராட்சி செயலாளர் அலுட்சியமாக செயல்பட்டதால் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் சென்று மனு அளித்தும் இதுவரையிலும் தங்கள் பகுதியில் மின் கம்பத்தினை சீரமைக்கவில்லை என வேதனை அடைந்து வந்துள்ளனர்.புதிய குயிலம் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மின் கம்பங்கள் இருந்தும் இதில் முப்பது கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருவதாகவும் மீதமுள்ள கம்பங்களில் விளக்கு எரியாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர் இதனால் கிராமத்தில் உள்ள அணைவரும் ஆறுமணிக்கு மேல் தங்கள் வீட்டை விட்டு வெளிய வரமுடியாத சூழல் நிலவிவருவதாக தொிவிக்கின்றனர் கிராமம் முழுவதும் இருளில் முழ்கி வருவதால் திருட்டு சம்பவம் அறங்கேரும் அபாயம் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.ஊடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படாத ஊராட்சி செயலாளர் ரவி மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதியில் தெரு விளக்கு சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Category:
மாவட்ட செய்திகள்
பாரத முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்தநாளான நவம்பா் 14 ஐ குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதுாாிலுள்ள ஆா்.சி.சிறுமலா் பெண்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக் கொண்டாடப்பட்டது.
முதற்கட்டமாக பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிாியா்கள் அனைவரும் பங்கேற்றனா்.பள்ளிக்குழந்தைகள் இனிப்புகள் வழங்கிய ஆசிாியா்களுக்கு நன்றி தொிவித்தனா்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று, நாட்டு மக்கள் அன்போடு நேரு மாமா என்று அழைக்கும் நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு மிகவும் விருப்பமான குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டு மக்களிள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன் குறித்து சிந்தித்தவர் ஜவஹர்லால் நேரு. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களின் நலன் குறித்து ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஐந்தாண்டு திட்டங்களில் மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது குழந்தைகள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டங்களே.
நாடு முழுவதும் நேரு மாமாவின் பிறந்த தினம் கருதி குழந்தைகளுக்கான கொண்டாட்டம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எண்ணம், கல்வி, செயல் சிறக்க அரசும் திட்டங்களை தீட்டி வருகின்றது .
குழந்தைகள் தின கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) விமர்சையாக குழந்தைகளை வைத்து கொண்டாடுகின்றனர்.
அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான விதவிதமான வண்ண அழங்காரங்களுடன் அவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்.
வண்ண பூக்கள் அழங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு இன்று மாறுவேட போட்டிகள் நடத்தப்படுகின்றது.
பால் திவாஸ் என நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளில் தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு புதிதாக பரிசுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள்.
இந்த தேசத்தின் மிகப்பெரிய நாளைய உந்துசக்தி இன்றைய குழந்தைகள் ஆவார்கள் என்பதை இந்த சமுகம் உணர்ந்துள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்வது , அவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசும் கொண்டு வருகிறது.
குழந்தைகளின் ஆரம்பக் கல்வியினை உறுதி செய்வது நமது கடமையாகும். இதனை வழங்க அனைத்து பெற்றோர்களும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தினம் சம்பந்தமாக திண்டுகல்லைச்சேர்ந்த திருமதி K.நவ்ரீன் கூறியதாவது,
குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக செயல் பட வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும். எனக் கூறினார்.திருமதி K. நவ்ரீனுக்கு, ஒரு சிறந்த தாயாக விளங்க நமது சத்தியப்பாதை மற்றும் கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள் கூறினோம்.!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட பிரச்னைகளுக்கு 94899 19722 ல் புகார் சொல்லுங்க. எஸ்.பி., உடனடி தீர்வு
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வீ.வருண் குமார் நவ.7ல் பொறுப்பேற்றார். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 94899 19722 என்ற செல்போன் எண்ணை பொதுமக்களிடம் பிரபலப்படுத்துமாறு பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இந்த எண் அறிமுகப்படுத்திய நவ.7 முதல் நவ. 12 ஆம் தேதி வரை 64 புகார்பெறப்பட்டுள்ளது. நவ.9 ஆம் தேதியன்று, சாயல்குடி பகுதியில் இளைஞர்கள் சூதாடுவதாக கிடைத்த தகவல் படி, சாயல்குடி போலீசார் துரித மாக சம்பவ இடம் சென்றனர்., சூதாடிய 7 பேரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர். தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அவர்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரிந்தது. மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி சாயல்குடி போலீசில் மனு ரசீது பதிவு செய்து பிள்ளைகளை கண்காணிப்புடன் பார்த்து கொள்ளும்படி, அறிவுறுத்தி அனுப்பினர். பரமக்குடி நகர் காவல் எல்கைகுட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை, நயினார்கோவில் காவல் எல்கைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்றார். இதுதொடர்பாக, 94899 19722 என்ற எண்ணில் புகார் வந்தது. பரமக்குடி நகர் போலீசில் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை பாளையங்கோட்டை இளஞ்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலப்பட மது பாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இப்புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி, ஆர்.எஸ் மங்கபம், ராமேஸ்வரம்
கோவில், பரமக்குடி நகர் மற்றும் வாலிநோக்கம் போலீஸார் துரிதமாக செயல்பட்டு தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதியில் 216கலப்பட மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, கலப்பட மது பாட்டில் விற்க முயன்றதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்னைகள் தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் எல்கைக்குட்பட்ட போலீசார் விரைந்து சென்று, அப்பிரச்னைகளை
தீர்த்து வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் தனிக்கவனம் செலுத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்திப்பில் சுழற்சி முறையில் 4 போக்குவரத்து போலீஸார் நியமித்து, தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் கண்காணிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார். புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் குறித்து 94899 19722 என்ற கைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கண்மாய் கொட்டப்பட்ட டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள். சுகாதார செயலாளர் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு!
by mohan
written by mohan
மதுரை அடுத்த கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் கண்மாய் உள்ளது. இது சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்கள் பாசனத்திற்காக பயன்படுத்தும் கண்மாய் சிலர் வாகனங்களில் வந்து சிறுநீர்ப்பை பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் காலாவதியான பிளாஸ்டிக் பைகள் மருந்து மாத்திரைகள் சிறுநீரகப்பை உள்ளிட்ட கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற மதுரை மாவட்ட பாஜக போராட்டக்குழு தலைவர் குரு சந்திரசேகர் கூறியது, கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மருத்துவ கழிவுகளை இங்கே கொட்டியது யாரென்றும் தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் மற்றும் சுகாதாரத் துறையும் போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என தெரிவித்தனர் .மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” நடித்த “சிவந்த மண்” திரைப்படம். 1969 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அப்போதைய அவரது ரசிகர்களால் ஏகோபித்த “பாராட்டை பெற்றது. சிவாஜி நடிப்பில் முதன் முதலாக வெளிநாட்டில் தயாரிக்க பட்ட திரைப்படம் “சிவந்தமண்” என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் சென்ட்ரல் திரையரங்கில் “பொன் விழா” ஆண்டை கொண்டாடினர்.இதையொட்டி ரசிகர்களுக்கு “இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சென்ட்ரல் திரையரங்க உரிமையாளர்களுக்கு “பாராட்டு கேடயமும்”, பணியாளர்களுக்கு “புத்தாடைகளும்”வழங்கப்பட்டது.மேலும் இந்த திரையரங்கில் 53 வருடங்களாக டிக்கெட் வழங்கும் பணி செய்து வரும் “சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்” “செல்லையா” என்பவருக்கு “சால்வை மற்றும் “மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இவ்விழாவிற்கு சிவாஜி பைன் ஆர்ட்ஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு செயலாளருமான சந்திரசேகரன் தலைமை வகித்தார். குணா மூவீஸ் குணசேகரன் முன்னிலை வகித்தார்.இதில் சிவாஜி பைன் ஆர்ட்ஸ் உறுப்பினர்கள் கணேசன், இன்பசேகரன், கௌரவ தலைவர் கணேசன், செல்வராஜ், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தென்மண்டல செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை ஐ.ஐ.டி மாணவி விடுதியில் தற்கொலை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்.!
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் திரு.சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.
சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அப்புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மறுத்து கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், புகார் கொடுத்த பெற்றோரிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
மாணவி தற்கொலை குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செயலாகும்.
காவல்துறையினரின் இந்த அராஜகப்போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய மோசமான பாகுபாடான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்துபேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர்.
இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இதுவரை எந்தவிதமான முறையான விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக காவல்துறை இதுகுறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய சம்பவங்கள் இனிமேல் இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் தொடராத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கே. பாலகிருஷ்ணன்
(மாநிலச் செயலாளர்)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டம்.
by mohan
written by mohan
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிங்கள் இருந்தும் அவை நிரப்பப்படாமல் உள்ளது.ஆனால் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணி அமர்த்தி அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காக பணி செய்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுப்பதில்லை என்று ஒப்பந்த பணியாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்காததை கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்த ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், கேங்மேன் பதவியை உடனடியாக தடை செய்ய கோரியும் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதில் 200 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த 10 நாட்களுக்கு முன் தலைநகர் டில்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு டில்லி முழுவதும், புகை மண்டலமாக காட்சி அளித்தது. மூச்சு திணறல் பிரச்னையால், பள்ளி செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பலர் முக கவசம் அணிந்தபடி அன்றாட பணிகளை மேற்கொண்டனர். தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், காய்ந்து போன பயிர்களை எரித்ததுமே, இந்த காற்று மாசுக்கு காரணம் என, கூறப்படுகிறது
காற்று மாசின் தரக்குறியீடு, 0 – 50 புள்ளிகள் வரை இருந்தால், ஆபத்தில்லை என கருதப்படுகிறது. அது, 201 – 400 புள்ளிகள் வரை இருந்தால் மிக மோசமான நிலை என்றும், 500 புள்ளிகளை தாண்டினால் அதிதீவிர அபாய நிலை என்றும் அளவுகோள்கள் உள்ளன.
கடந்த 2-ம் தேதியன்று டில்லியின் காற்று மாசின் தரக்குறீயீடு அளவு, 533 புள்ளிகள் என்ற அதிதீவிர அபாய கட்டத்தை தொட்டது. பின், 480 புள்ளிகளாக குறைந்தது. இதனால், டில்லியில், பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் (நவ. 12) மாலை 4 மணியளவில் காற்று மாசு 425 புள்ளிகளாக இருந்தது பின்னர் இரவு 9 மணியளவில் 437 அதிகரித்து, இரவு 10 மணியளவில் 484 புள்ளிகளை தொட்டது. இது 500 புள்ளிகளை தாண்டி அதி தீவிர அபாயமாக மாறும் என்பதால் அவசரநிலை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி
by mohan
written by mohan
ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, புதிதாக சுயதொழில் துவங்கும் இளைஞர்களை
ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சுயதொழில் துவங்குவோர் கடல் உணவுப்பொருள் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில்கள் மூலம் அதிக லாபம் பெறலாம். பனைமரம் சார்ந்த உபயோகப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம்
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுயதொழில் துவங்கும் நபர்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களை உற்பத்தி செய்து சரியான முறையில் சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக இலாபம் பெறலாம். செய்யும் தொழிலில் நேர்மை, உண்மையான உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.புதிய தொழில் முனைவோருக்கு அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச சந்தைப்படுத்தும் தன்மையை ஒருங்கிணைங்க அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தர நிர்ணய சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வ.அனந்தன், ராமநாதபுரம் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் வி.ஆர்.சி.பாண்டியன், மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், ராமநாதபுரம் திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ரமேஷ்குமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவன பயிற்சி இயக்குநர் வி.கலைச்செல்வன், சிட்கோ கிளை மேலாளர் செ.சத்யராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மண்டல மேலாளர் வி.டி.அனந்தன், பேராசிரியர் சு.வெங்கட நாராயணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்
by mohan
written by mohan
சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசுசிறுசேமிப்பு
துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் பொதுமக்களிடத்தில், சிறுசேமிப்பு முகவர்கள் மூலம் அஞ்சலக சிறுசேமிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சிறுசேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக சிக்கன நாளையொட்டி (30.10.19), சிறுசேமிப்பு துறை மூலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி னார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.வீரப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
by mohan
written by mohan
உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகை அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர்.உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு நீதிமன்றத்திலிருந்து ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் சங்கத்தலைவர் வீரபிரபாகரன் கூறுகையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.இ;ந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தினரும் பங்கேற்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை
by mohan
written by mohan
உசிலம்பட்டி பேருந்து நிலையம் சந்தைப்பகுதிகள் வணிக வளாகங்களின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோட்டாட்சியர் சௌந்தர்யா உத்தரவிட்டார்.மதரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் சந்தைப்பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பூ மார்க்கெட் இறைச்சி கடை பகுதி மற்றும் மதுரை ரோடு. பேரையூர்; ரோடு. தேனிரோடு போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாகவும் இதனால் நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோட்டாட்சியர் சௌந்தர்யாவிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் ஒருவாரத்திற்குள் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புக்களை அகற்றாவிட்டால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என கோட்டாட்சியர் சௌந்தர்யா தெரிவித்தார்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள டொயோட்டா நிறுவனத்தில் மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை இரத்த தான பகிர்மானக கழகம், ஏ.ஆர்.சி குரூப் ஆப் கம்பெனிஸ், மதுரை ரவுண்ட் டேபிள்-14, மதுரை மகளிர் வட்டம்-8, மதுரை நகர் ரவுண்ட் டேபிள்-99 மற்றும் மதுரை மகளிர் வட்டம் 60 ஆகியோரும் இணைந்து இரத்த தான முகாமை நடத்தினர். இம்முகாமிற்கு மதுரை இ.எஸ்.ஐ துணை இயக்குனர் அருள்ராஜ் சிறப்பு விருந்தினராக தலைமையேற்று துவக்கி வைத்தார். ஆனைமலைஸ் டொயோட்டா உதவிப் பொது மேலாளர் சேதுராஜன்,நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சோனி ரங்கராஜன், மற்றும் பொது தொடர்பு அலுவலர் சண்முகம் அவர்களும் உடன் இருந்தனர்.
இதே போல் மதுரை தேவதாஸ் மருத்துவமனையிலும் மதுரை வாலண்ட்ரி இரத்த வங்கியின் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமை தேவதாஸ் மருத்துவ மனையின் சேர்மன் பேராசியர் Dr.தேவதாஸ் தலைமையேற்று துவக்கி வைத்தனர். Dr.சதீஸ் உடன் இருந்தனர்.இந்த முகாமின் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் மதுரை ரவுண்ட் டேபிள்-14 சேர்மன் M.ரகுராம் மற்றும் மதுரை மகளிர் வட்டம்-8 சேர்மன் சுகன்யா ரகுராம் செய்திருந்தனர்.மேலும் மதுரையில் உள்ள அனைத்து கார் நிறுவனங்களிலிருந்தும், ARAS குரூப்ஸ், சுசீ குரூப்ஸ், சுசீ பைனான்ஸ்,அபர்ஜிதா மற்றும் அருணா அலாய்ஸ் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றனர். ஆனைமலை ஸ் டொயோட்டா நிறுவனத்தில் வருடத்திற்கு மூன்று முறை இது போன்ற முகாமினை மதுரை அரசு மருத்துவமனை உதவியுடன் நடத்தி வருகின்றதாகவும், கடந்த வருடம் 60 யூனிட்டுக்கும் அதிகமாக வழங்கப்பட்டதுஎனவும் இந்த முறை 100க்கும் மேற்பட்ட யூனிட் இரத்தம் சேகரிக்கப்படும் என எதிர் பார்க்கிறோம் என்று மதுரை மகளிர் வட்டம்-8 சேர்மன் சுகன்யா ரகுராம் தெரிவித்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம். கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
by mohan
written by mohan
இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சேதுபாண்டியன். இவருக்கும் ஜெயராணி 45, என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லை காரணத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சேதுபாண்டியன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயராணி வசிக்கும் வீட்டிற்கு சேதுபாண்டியன் இன்று காலை சென்றார். வீட்டை காலி செய்யுமாறு ஜெயராணியிடம், சேது பாண்டியன் தகராறு செய்தார். வீட்டை விட்டு வெளியேற முடியாது என ஜெயராணி பிடிவாதம் செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நேரம் தகராறு நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த சேதுபாண்டியன், ஜெயராணியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடினார். உயிருக்கு போராடிய ஜெயராணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து சேதுபாண்டியனை தேடி வருகின்றனர். தலைமறைவான சேதுபாண்டியனை கொலை வழக்கில் கைது செய்யக்கோரி, ஜெயராணியின் உடலை வாங்க மறுத்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் முனீஸ்வரன், 22. வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றித்திரிந்தார். திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவரது தம்பி குமார் , வெளியில் செல்லும்போது இதோ திருடன் தம்பி போகிறான் என பலர் அவதூறு பேசிவந்தனா. இதனால் மன உளச்சல் அடைந்த குமார் , முனீஸ்வரனின் கன்னத்தில் முருங்கை தட்டையால் நேற்றிரவு12.11.19 தாக்கினார். இதில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் முனீஸ்வரனை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். முனீஸ்வரனின் தாயார் பாப்பா புகாரில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு இதம்பாடல் அரசுஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் மற்றும் கம்பி வலைகள் மக்கள் பாதை சார்பாக அன்பளிப்பு அளிக்கபட்டது.அதில் தலைமை ஆசிரியை கெளரி வரவேற்று, ஆசிரியர்கள் பாண்டி, வினோத், ஆசிரியை சுதா, சூரியபிரபா ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பாதை தோழர்களை மரக்கன்றுகள் நடுவதற்கு சிறப்பாக வரவேற்று சிறப்பித்தனர்.இராமநாதபுரம் மாவட்ட கடலாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நளினி காந்த் தலைமை தாங்கி, மக்கள் பாதை பொறுப்பாளர் கனகசபாபதி மற்றும் தோழர்கள் பிரபுகுமார்,கலைச்செல்வன், கலைமோகன்,அரவிந்த் ராஜ்,இராமர் ஆகியோர் மரக்கன்றுகள் விழாவில் கலந்து கொண்டனர். இவ்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடுவதற்கு உதவி செய்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தந்தை இறந்த சோகம் தற்கொலைக்கு முயன்ற மாணவன். சாமர்த்தியத்தால் மீட்ட நண்பன்.. எஸ்.பி., பாராட்டு…
by mohan
written by mohan
தந்தை இறந்த சோகத்தால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 13 வயது நண்பனின் உயிரை சாமர்த்தியத்தால் காப்பாற்றிய ஒத்த வயது சிறுவன்.ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே கருங்குளத்தில் கமுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் தந்தை, உடல் நலக் குறைவால் சமீபத்தில் இறந்தார்.தந்தை இறந்த சோகம் தாளாத, அந்த மாணவன் நவ.11 காலை பள்ளி சென்றார். வகுப்பறையிலும், தொடர்ந்து சோகத்துடன் காணப்பட்டார். அந்த மாணவர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதை சக மாணவர் வடிவேலன் பார்த்து விட்டார்.உடனே மரத்தின் அருகே ஓடிச் சென்ற வடிவேலன், தூக்கில் தொங்கிய தனது நண்பனை தன் தோளில் தாங்கியவாறு அருகில் இருந்தோரை உதவிக்கு அழைத்தார்.வடிவேலனின் கூச்சலை கேட்டு ஓடி வந்தவர்கள் தூக்கில் தொங்கிய அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பினர்.இது பற்றி தகவலறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், வகுப்பு தோழனை தன் சாமர்த்தியத்தால் காப்பாற்றிய வடிவேலனை தன் அலுவலகம் அழைத்து வரச் செய்தார். பெற்றோருடன் அங்கு வந்த வடிவேலனை பாராட்டி சான்றிதழ், தன்னம்பிக்கை புத்தகம் வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை நகரில் பங்க் கடையில் வைத்து மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
by mohan
written by mohan
திருவண்ணாமலை டவுன் ராமலிங்கனார் தெரு மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் அருகில் ஆரம்பப்பள்ளி அருகில் பங்க் கடையில் கள்ளச்சாராயம், பிராந்தி ,வகைகள் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. .இங்கு வரும் குடிமகன்கள் அதே இடத்தில் மது குடித்துவிட்டு பள்ளிப் பிள்ளைகள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பங்க் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகரின் மையப் பகுதியில் இயங்கிவரும் கள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை தேர்வு நிலை பேரூராட்சியின் அலட்சியத்தால் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகள் அல்லப்படாமலும், கழிவு நீர் சாக்கடைகள் சரிவரதூர் வாரப்படாமல் இருப்பதாலும் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகின்றது. இப்பகுதியில் உள்ள முத்தையா சுவாமி திருக்கோவில் எதிரே கழிவு நீர் வாய்க்காலில் விடப்படாமல் இருப்பதனால் கழிவு நீர் தேங்கி அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் தொற்று ஏற்படுகின்றது. சமீபத்தில் பெய்த மழையால் இப் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மேலும் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி அதிகமாகி , கொசு உற்பத்திக் கூடாரமாக இப் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. .இதேபோல் தாமரைக்குளம் பேருராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு நபிகள் நாயகம் தெரு மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பாதசாரிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவை சம்மந்தமாக தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் பொதுமக்களால் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களை வஞ்சிக்கும் தென்கரை தேர்வு நிலைபேரூராட்சி, மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களது பிரச்சினைகளை சரி செய்ய இனியாவது முன் வருமா?
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.