கொரொனா கால உதவியாக மாற்றுத்திரனாளிகளுக்கு அரிசி,பருப்பு,சீனி உள்ளடங்கிய தொகுப்பை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி வழங்கினார்..
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி மு க உறுப்பினர் ஐ.பெரியசாமி தற்போது நாட்டில் கொரொனா நோய்தொற்று உள்ள சூழலில் கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தடையுத்தரவு அமுலில் உள்ள நிலையில் பனிக்கு செல்லமுடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திரனாளிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு செம்பட்டியில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் வைத்து அரிசி, பருப்பு,சீனி உள்ளடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார். இந்த விழாவில் பழனி தொகுதி தி மு க சட்டமன்ற உறுப்பினர் பி.செந்தில்குமார், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் தி மு கழக கட்சி முன்னோடிகளும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
பயனடைந்த மாற்றுத்திரனாளிகள் அனைவரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
You must be logged in to post a comment.