திருவண்ணாமலை மாவட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜப்பான் சீட்டோ ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் அறந்தாங்கியில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செங்கம் கராத்தே பயிற்சி பள்ளியின் செயலாளர் எழில் இசை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ,நகர செயலாளர் சாதிக் பாஷா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காரல்மார்க்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்துகொண்டு தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற28 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசுகையில்; செங்கம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் பங்குகொண்டு வெற்றி பெற்றது பெருமைக்குரியதாகும். மேலும் கராத்தே தலையானது ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளது பல்வேறு சிறைகளில் தமிழக அரசும் மாநில அரசும் வழங்கப்பட்டு வருகின்றது இதனை நம் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்அரசுத் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் . என்று பேசினார்.நிகழ்ச்சியில் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சென்னம்மாள் முருகன் , திமுக மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முல்லை மன்னன் , பாரத் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கவியரசன் கட்சி நிர்வாகிகள் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கராத்தே பயிற்சி பள்ளியின் பொருளாளர் எழில் இசை செங்கத்தில் கராத்தே பயிற்சி பள்ளி பள்ளியில் பயிற்சி பெறும் கராத்தே மாணவர்களின் நலன் கருதி கராத்தே மேட் வழங்கும்படி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் உடனடியாக கோரிக்கை நிறைவேற்றி கொடுத்தார்.
Category:
மாவட்ட செய்திகள்
மதுரையில் முதல்முறையாக நவீன முறையில் கம்பத்தில் போக்குவரத்து சிக்னல் விளக்கு வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
by mohan
written by mohan
நாடுமுழுவதும் வழக்கமான போக்குவரத்து சிக்னல்களான வட்டவடிவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகனநெரிசலின் போது போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஒட்டிகளுக்கு புலப்படாததால் போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் முதல்முறையாக நவீன முறையில் கம்பத்தில் LED சிக்னல் விளக்குகளான சிக்னல் ரூபாய் 25,000 மதிப்பீட்டில் பொறுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ஒளி அளவுரு பெரிய பரப்பளவை உள்ளடக்கிய LED விளக்குகளில் ஒவ்வொரு ஒளி மாற்றத்திற்கும், குறுக்குவெட்டுகளில் பாரம்பரிய ஒளி அமைப்பிற்குப் பதிலாக முழுமையான கம்பம் ஒளிருவதால் வாகன ஒட்டிகளும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற எளிதாக இருப்பத்தாகவும் கூறப்படுகிறது.தொடர்ந்து இந்த முறை சிக்னல்கள் சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாநகர் முழுவதும் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களின் வேந்தாராக முதல்வர் வர வேண்டும்.திருமாவளவன் பேட்டி.
by mohan
written by mohan
தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களின் வேந்தாராக முதல்வர் வர வேண்டும்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பார்கள் எனவேளான் சட்டம் வாபஸ் எதிர்கட்சிகளின் தொடர் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றிமதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டிவிவசாய குடிமக்களில் தொடர் போராட்டத்தின் விளைவாக மோடி அரசு பணிந்து இருக்கிறது.அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பல சட்டங்களை மோடி அரசு இருக்கிறது குடியுரிமை திருத்த சட்டம் முத்தலாக் சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து உடைத்து யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தால் அவர்களை சிதறடிக்க முடியாத நிலையில் எதிர்வரும் இருக்கிற 4 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தடா…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விளக்குகள் எதுவும் எரியவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.கடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில், ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையாகும். மேலும், இப்பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். சுற்றுலாத்தலமான திருப்பரங்குன்றத்தில் ரயில்வே, சுரங்கப் பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெரு விளக்கு எரியவில்லை என புகார் எழுந்தும், கண்டும் காணாமல் , மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்ற சம்பவங்கள் நடந்த பிறகுதான் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீதும் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. திருப்பரங்குன்றம் ரயில்வே விளக்குகள் எரியுமா பொறுத்திருந்து பார்ப்போம் போராட்டம் நடக்கும் முன் என சமூக ஆர்வலர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம்:
by mohan
written by mohan
மதுரையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநில அளவிலான கருத்தரங்கம் ரயில்வே காலனியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கிளாரா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கொம்பையா, செயலாளர் கீதா, உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்னிறுத்தி பேசினர். இந் நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் உயர்த்தி அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை எதிர்த்தும், மாநிலச் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தொழில் வாரியான நல வாரியங்களை காக்க …
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடியாததம் கவுண்டன்யா ஆற்றின் மேம்பாலம் நீரில் மூழ்கியதுசிறப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு.
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கவுண்டன்யா சிறு ஆற்றில் சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.குடியாத்தம் பகுதியில் இந்த ஆறு ஓடுவதால் இதன் கரையோர பகுதியில் உள்ள வீடுகளை விட்டு மக்கள் அப்புறபடுத்தப்பட்டனர்.இந்த ஆற்றின் மீது இருக்கும் பாலத்தின் மீது வெள்ளம் இப்போது ஓடுகிறது.இதை வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரி நந்தகுமார், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அருகில் வருவாய்துறையினர் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய சேவைகளின் கூட்டமைப்பு நிறுவனம் (FNI), தீபம் இந்தியா அறக்கட்டளையும் இணைந்து RSமங்கலம் துரோபதி மஹாலில் தொழில்முனைவோர்களுக்கான பயிற்சி பட்டறை FNIயின் தேசிய தலைவர் முனைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த தொழில் முனைவோர் பயிற்சி பட்டறையில் தீபம் இந்தியா அறக்கட்டளை தலைமை நிர்வாகி மதிவாணன் முன்னிலை வகித்தார். FNI மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் டேனியல் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார். FNI தேசிய செயலாளர் கனகாம்பாள், மாநில பொருளாளர் சக்திவேல் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றியும் திட்டங்களுக்கான பயிற்சியும் அளித்தனர்.தொழில் முனைவோர் கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள்,தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு தலைவிகள், மக்கள் பிரதிநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கூட்ட முடிவில் கார்த்திகா நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரம்பரியப் பெருமை கொண்ட கோயில்களும், பள்ளிவாசல்களும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கட்டடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலகப் பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.திராவிடக் கட்டடக்கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் பற்றி ஆய்வு செய்துவரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,ராமநாதபுரத்தின் அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்பகுதிகளில் இஸ்லாம் பரவி உள்ளது. திருப்புல்லாணி கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள பிழார் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.தீர்த்தாண்டதானம் சிவன் கோயில் எதிரில் சிதைந்த நிலையில் இருந்த மண்டபத்தை கி.பி.1269-ல் அங்கு தங்கி இருந்த அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் உள்ளிட்ட வணிகக்குழுவினர் பழுதுபார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர்.கீழக்கரை பள்ளிவாசலில் உள்ள ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் கி.பி.1300-ம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக் கல்வெட்டு மூலம் இவ்வூரில் கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் குடியிருந்ததையும் இஸ்லாமியப் பள்ளி இருந்ததையும் அறியமுடிகிறது. வட்டானம் மற்றும் வாலிநோக்கத்தில் கி.பி.15-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளி இருந்ததை அங்குள்ள கல்லறைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைப் பாறைகளையே அதிக அளவில் கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். கீழக்கரை, வேதாளை, வாலிநோக்கம், நரிப்பையூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் கடற்கரைப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட மணற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. கோயில்கள் கட்ட பயன்படுத்திய திராவிடக் கட்டடக்கலையையே பள்ளிவாசல்கள் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர்.பெரும்பாலான பழமையான பள்ளிவாசல்கள் தொழும் மாடம், மகாமண்டபம், முன்மண்டபம், தாழ்வாரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்புறத்தில் அதிஷ்டானம், பாதசுவர், பிரஸ்தரம் ஆகிய அமைப்பு காணப்படுகிறது. தூண்களிலும், மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் வெட்டப்பட்டிருக்கும். கீழக்கரை, வேதாளை, நரிப்பையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் திராவிட கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளன.கீழக்கரையின் சில பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள் வெட்டுப் போதிகை, தாமரைப்பூ, வாழைப்பூ போதிகைகளோடு கூட்டுத்தூண்களாக கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிற்காலப் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளும் உள்ளன. அவற்றின் தூண்கள், போதிகைகள், கொடுங்கைகள் மூலம் அவற்றின் கலைப்பாணியை அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில் தூண்களும் இதுபோலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பெருங்குடி பகுதியில் பட்டாசு வெடித்ததில் கோழி கடையில் தீ விபத்து; விரைந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
by mohan
written by mohan
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தினமும் அனைத்து இல்லங்களிலும் விளக்கு ஏற்றி வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் இன்று மதுரையில் பலர் இல்லங்களில் மத்தாப்பு வைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியில் உள்ள அன்னை தெரசா நகரில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மோகன் பாபு என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது.விபத்து குறித்து மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்துள்ளது. கடை பூட்டி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கத்தில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்த சம்பவம்; சோகத்தை ஏற்படுத்தி உளளது .
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தோக்கவாடி பகுதியை சேர்ந்த துரை என்பவரது ஓட்டு வீடு மூன்று பக்கமும் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்து நாசமானது இதனால் துரை மற்றும் அவரது மனைவி உட்பட இரண்டு குழந்தைகள் அதிசயமாக உயிர் தப்பினர்இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் மழையின் நிவாரணத்தொகை வாங்கித்தருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார் ஆனால் மழை நிவாரண தொகையை வைத்து ஒரு குடிசை கூட போட முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கி இருந்து வந்துள்ளார் ஆனால் தொடர் மழையினால் தனது வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் வைத்திருந்த உணவுப்பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது மேலும் வேறுவழியின்றி தோக்கவாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் துரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தகவல் அறிந்து வந்த செங்கம் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு அவர்களிடம் சமரசம் பேசி விரைவில் பசுமை வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி துரை வீட்டை நேரில் ஆய்வு செய்தார் அப்போது துரை வீடு மழைநீரில் நினைந்து முழுவதும் சேதம் அடைந்ததால் அவருக்கு உடனடியாக பசுமை வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் தகவல் கொடுக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் துரை அங்கிருந்து சென்றார் ஆனால் அரசு பசுமை வீடு வரும்வரை அவர் எங்கு தனது குடும்பத்துடன் போய் தங்குவது என தெரியாமல் கவலையோடு இருந்த வீட்டு இருக்கே சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்த 20 ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு காவல் நிலைய பணியிட மாற்றத்திற்கான கவுன்சிலிங் நடைபெற்றது.இதில் தேர்வான காவலர்களிடம் பொதுமக்களிடத்தில் கனிவாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்டத்தில் இயங்கிவரும் காவல் நிலையத்தின் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பெயரில் தென்காசி ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்த 20 இரண்டாம் நிலை காவலர்களை காவலர் பயிற்சியின் போது எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களின் விருப்ப ஒப்புதலைப் பெற்று அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் கேட்கப்படும் காவல் நிலையம் வழங்கப்பட்டது. பின்பு இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்வு செய்யப்பட்ட 20 காவலர்களிடம் கூறுகையில், ஆயுதப் படையில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்காக செல்ல இருக்கும் நீங்கள் முன்பு இருந்ததை விட கூடுதல் பொறுப்புடன், பொதுமக்களிடம் கனிவாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரைகள் வழங்கி பொது மக்களுக்கு காவல்துறை என்றும் நண்பன் என்பதை உணர்த்தும் வகையில் பணிபுரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பாலாற்றில் தொடரும் வெள்ளபெருக்குசெல்பி எடுக்க வேண்டாம்.மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.
by mohan
written by mohan
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓடுகிறது.விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து காவல்துறையால் துண்டிக்கப்பட்டுள்ளதுபல ஆண்டுகளுக்கு பின்பு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் கரையோரங்களிலும், பாலாத்தின் மீது பார்த்து கொண்டும் பலர் செல்பி எடுத்துவருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே யாரும் பாலம், கரையோரத்தில் செல்பி எடுக்க வேண்டாம் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்மங்களின் (Solids) காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இலூயீ நீல் பிறந்த தினம் இன்று (நவம்பர் 22, 1904).
by mohan
written by mohan
இலூயீ யூழ்சீன் பெலி நீல் (Louis Eugene Felix Neel) நவம்பர் 22, 1904ல் இலியான், பிரான்சில் பிறந்தார். இலியான் நகரில் உள்ள பார்க்கு உயர்நிலைப் பள்ளியில் (Lycee du Parc) படித்தார். பின்னர் பாரிசில் உள்ள ஈக்கோல் நோர்மால் சுப்பீரியர் (Ecole Normale Supérieure) என்னும் உயர் கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பின்னர் இசிற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் (University of Strasbourg) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1970ல் திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்றார். திண்மநிலை காந்தப் பண்புகளின் ஆராய்ச்சியால் கணினி நினைவக உறுப்புகளில் மிகப்பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஏறத்தாழ 1930ல் இவர் முற்றிலும் புதிய ஒருவகையான காந்தப்பண்பு இருக்கக்கூடும் என்று கூறினார். இது மறுதலை இரும்பியக் காந்தம் (antiferromagnetism) என்று அழைக்கப்படுகின்றது. இரும்புக் காந்தம்போல், ஆனால் ஒரு பொருளின் உள்ளே உள்ள காந்தத்தன்மையுடைய அணுக்கூறுகள் ஒரே திசையில் காந்தப் புலம் கொள்ளாமல் எதிரெதிர் திசையில் நின்று ஏறத்தாழ காந்தத்தன்மை இல்லாதது போல் இருக்கும். ஆனால் தாழ்ந்த வெப்பநிலையில் ஓரளவுக்குக் காந்தத்தன்மை கொண்டிருக்கும்.வெப்பநிலை உயர்ந்தால் இந்தக் காந்தத் தன்மையை இழந்துவிடும். இதே போன்ற, ஆனால் சிறிதளவு எதிரெதிர் காந்தச் சாய்வுகள் கொண்ட தன்மையுடைய சிறுமுரண் இரும்பியக் காந்தப் பண்பையும் இவர் 1947 இல் கண்டுபிடித்தார். இந்த சிறுமுரண் இரும்பியக் காந்தத்தன்மையும் நீல் வெப்பநிலை என்னும் வெப்பநிலை எய்தியவுடன் மறைந்துவிடும். இலூயிசு நீல், பாறைகளில் காணப்படும் மென்மையான காந்தத் தன்மைக்கும் தக்க விளக்கம் தந்தார். இவருடைய ஆய்வின் பயனாக நில உருண்டையின் காந்தப்புல வரலாற்றை அறிய முடிகின்றது. சிறுமுரண் இரும்பியக் காந்தவியல் (Ferrimagnetism) என்பது சில திண்மப் பொருள்களில் காணப்படும் ஒருவகையான மென்மையான நிலைக்காந்தவியல். இரும்பில் உள்ள இரும்பணுக்களின் காந்தக்கூறுகள் ஒரே திசையில் நிற்கும். ஆனால் சிறுமுரண் இரும்பியக் காந்தம் என்னும் பொருளில் உள்ள அணுக்களின் காந்தப்புலத்தின் திசை எதிர் எதிராக நிற்கக்கூடியன.சில அணுக்களின் காந்தப்புலம் ஒரு திசையிலும் வேறு சில அணுக்களின் காந்தப்புலம் எதிர் திசையிலும் தற்செயலாய் நிற்கும், என்றாலும் ஒரு குறிப்பிட்ட கியூரி வெப்பநிலைக்குக் கீழே, இந்த எதிரெதிர் நிற்கும் காந்தக்கூறுகள் ஓரளவுக்கு ஒரே திசையில் காந்தத்தன்மை காட்டக்கூடியவை. மேக்னட்டைடு (magnetite) , இரும்பு ஆக்சைடு ( Fe3O4) போன்றவை இவ்வகையான சிறுமுரண் இரும்பியக் காந்த வகையை சேர்ந்தவை.சிறுமுரண் இரும்பியக் காந்தமும், இரும்புக்காந்தம் போலவே கியூரி வெப்பநிலைக்குக் கீழே தானாகவே காந்த ஒழுங்கு பெற்று இருக்கும், ஆனால் இதில் எதிர் திசையில் நிற்கும் காந்தக்கூறுகளும் உண்டு. கியூரி வெப்பநிலைக்குக் கீழே இப்பொருளில் உள்ள படிகக்கூறுகளின் காந்தத் திருப்பம் (magnetic moment) சரியாக எதிர் எதிராக நின்று ஈடாக நிற்கும் ஒரு நிலை (magnetization compensation point) உண்டு. இது தவிர கோண உந்தம் ஈடுசெய் புள்ளி என்றும் ஒரு நிலை உண்டு. இப்படி உள்ள நிலையால்தான் விரைவாக காந்தத் திசைகளை மாற்ற இயலுகின்றது. திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இலூயீ யூழ்சீன் பெலி நீல் நவம்பர் 17, 2000ல் தனது 95வது அகவையில் பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம்.ஜி.கே. மேனன் நினைவு தினம் இன்று (நவம்பர் 22, 2016).
by mohan
written by mohan
எம்.ஜி.கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றார். 1942ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் கொண்டார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். நிறமாலையியலில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.
டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமிபாபாவின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்தார். விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதுவே விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டம். 1953ல் நோபல் பரிசு பெற்ற சிசில் எஃப். பவலின் வழிகாட்டுதலின் கீழ், காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். காஸ்மிக் கதிர்கள், துகள் இயற்பியல் துறையில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.
ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், சிறந்த தலைமைப் பண்பும் கொண்டிருந்ததால், மிக குறுகிய காலத்தில் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தார். இவரது அயராத முயற்சியால் உயிரி அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் டாடா நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. மனித உழைப்பு என்கின்ற விசாலமான ஸ்பெக்ட்ரத்தை, விஞ்ஞான ரீதியாகப் பயன் படுத்தினால் எவ்வளவு அழகாக எதையும் படைக்க முடியும் என்பதை பௌலினிடம் கற்றார். அதுபோல் சரியான திட்டமிடல், ஒரே கருத்துடையவர்களின் ஒத்துழைப்பு, குறிப்பிட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சரியான இடம் போன்றவற்றின் உதவியால் வெற்றிகரமான ஆராய்ச்சியை இந்தியாவில் சாத்தியமாக்கலாம் என்பதை ஹோமி பாபாவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.
நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உலக அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. 1966ல் ஹோமிபாபா இறந்த பிறகு, அவர் வகித்த பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். ஹோமிபாபா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றினார். 1972ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரானார். அங்கு 9 மாதங்களே பணியாற்றினாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். மத்திய திட்டக்குழுவில் பிரதமரின் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டார். நான்கு தசாப்தங்களாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.
பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968), பத்மவிபூஷன் (1985), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் விருது என பல விருதுகளைப் பெற்றார். 2008ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. சக விஞ்ஞானிகளால் ‘கோகு’ என நேசத்தோடு அழைக்கப்பட்டார். 1989-90ல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித் துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 1990-96ல் தில்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.ஜி.கே. மேனன் நவம்பர் 22, 2016ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 2008ம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் அருகே அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை; நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் கோரிக்கை.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வன்னியர் தெருவில் கிராமமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் கனமழையால் காரப்பட்டு ஊராட்சிக்கு ட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு , மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது இதனால் கிராமப்புற மக்களுக்கு டெங்கு, மலேரியா என பல்வேறு நோய்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் நோய்கள் தாக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் எல்.ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, பொறியாளர் அமுதா ,மற்றும் அரசு அதிகாரிகளை பார்வையிடும்போது முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் முற்றுகை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் எச்சரித்தனர்.இரண்டு மணி நேரமாக தொடர்ந்த வாக்குவாதம் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் உள்ளிட்டோர் சமரசத்தில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிவளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர்பா.பொன்னையா, ஆய்வு.
by mohan
written by mohan
மதுரை மாநகராட்சியில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகள், மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்க நடைபெற்று வரும் இறுதி கட்ட பணியினையும், மேலும் ஸ்மார்ட் சிட்டி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஜெய் ஹிந்திபுரத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில், பெயர் பலகையில் ஜெயலலிதா படம் இருந்து வருகிறது.இந்த நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி படம் இடம் பெற்றது.இது குறித்து சலசலப்பு ஏற்பட்டதாம்.இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் கூறப்படுதாவது:
மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள்.இந்த படம் வைக்கப்பட்டது குறித்து, எங்களுக்கு தகவல் தெரியாது; படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கிடையாது.உடனடியாக விசாரணை நடத்தப்படும்மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் விளக்கம் அளித்துள்ளார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெறக்கூடிய திட்டப்பணிகள் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் மற்றும் பேரூராட்சித் தேர்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி ஆகியோர் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர் எம்எஸ் காலனியில் பூங்கா அமைப்பதற்கு 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் அங்கு மரக்கன்றுகளை நட்டனர் இதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்துவீடுதோறும் வாங்கும் திட்டங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார் பின்பு பேரூராட்சி மூலதன மானிய திட்டத்தின் கட்டப்பட்ட புதிய தினசரி சந்தையை பார்வையிட்டார் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள வள மீட்பு பூங்காவை பார்வையிட்டு மண்புழு உரம் மற்றும் கலவை உரம் தயாரிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார் தொடர்ந்துபுதிதாகக் கட்டப்பட்ட வரும் பஸ் நிலையத்தை பார்வையிட்டார் ஆய்வு முடித்து பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஆய்வு செய்து வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை கேட்டறிந்தார் இந்த ஆய்வில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் செயற்பொறியாளர் சாய்குமார் உதவி செயற்பொறியாளர் சுரேஷ் ராஜன் செயல் அலுவலர் ஜீலான்பானு மற்றும் இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த, இந்தியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற தமிழர், சர் சி.வி.இராமன் நினைவு தினம் இன்று (நவம்பர் 21, 1970).
by mohan
written by mohan
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) நவம்பர் 7, 1888ல் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா.சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B.A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M.A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.
சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.
ஐரோப்பாவில் 1928ம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சி.வி.ராமன்கப்பல் பயணம் மேற்கொண்டார். மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டுஇருந்தபோது, கப்பலின் திறந்தவெளி தளத்தில், ராமன் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். இதற்கிடையே, ஆகாயத்தை பார்த்த ராமனுக்கு ஒரு வித்தியாச மான உணர்வு ஏற்பட்டது. மத்திய தரைக் கடல் பகுதியின் வானம், ஏன் அடர்த்தியான நீல நிறமாககாட்சி அளிக்கிறது என்று சிந்திக்க தொடங்கினார். அப்போது, அவருக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், அந்த சந்தேகம் மனதில் ஆழப்பதிந்தது. ஐரோப்பா பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியராமன், வானத்தின் நிறம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக ஒளி ஊடுருவக் கூடிய ஊடகம் திடப் பொருளாகவோ, திரவப் பொருளாகவோ அல்லதுவாயுப் பொருளாகவோ இருக்கலாம்.அந்த ஊடகங்களில் ஒளி செல்லும் போது அதன் இயல்பில் ஏற்படும்மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற வரலாற்று உண்மையைக் கண்டறிந்தார்.
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் (Raman Scattering) அல்லது ராமன் விளைவு (Raman Effect) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது. இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை
படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்.
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல், சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல், வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல், அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல், 10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
இவர் வயலின் (பிடில்), மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார். இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறுஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்’ தோன்றுவதை அவர் கண்டார். நாம் வானவில் காண்கிறோம் அல்லவா. அது எப்படி உருவாகிறது என்பதையும் ராமன்தான் கண்டுபிடித்தார். இதனை பின் நாளில் ‘ராமன் வரிகள்’என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு’ (Raman effect) என்றும் அழைக்கப்படத் தொடங்கியது.
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் பிப்ரவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.இவருக்கு இலண்டனிலுள்ள வேந்தியக் குமுகத்தின் சிறப்புப்பேராளர் (இராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப்பு) பெருமை 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பிரித்தானிய அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் “நைட்டுஃகூடு” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது. இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது. மைசூர் அரசர் “இராசபாபூசன்” பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார். பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்கிளின்” பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் அகில “உலக இலெனின் பரிசு” அளிக்கப்பட்டது. ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற தமிழர், சர் சி.வி.இராமன் நவம்பர் 21, 1970ல் தனது 82வது அகவையில் பெங்களூரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்த, முகமது அப்துஸ் சலாம் நினைவு தினம் இன்று (நவம்பர் 21, 1996).
by mohan
written by mohan
முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) ஜனவரி 29, 1926ல், பிரிக்கப்படாத இந்தியாவில் சாஹிவால் மாவட்டத்தில் சாண்டோக்தாஸ் எனும் ஊரில் சவுத்ரி முகமது ஹுசைன் மற்றும் ஹாஜிரா ஹுசைன் தம்பதியருக்கு பிறந்தார். இளம் வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த இவரை ஆசிரியர்கள், பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் எடுத்து ஆசிரியராக ஆகச் சொன்னார்கள். இவரோ தனக்குக் கணிதத்தில் ஆர்வம் என்று சொல்லி கணிதத்தைப் பாடமாக தேர்வு செய்தார். தனது 14 வயதில், சலாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார். அப்துஸ் சலாம் பல்துறை வல்லுநராகவும் உருது மற்றும் ஆங்கிலப் புலமை பெற்றவராகவும் இருந்தார்.1994ல் கணிதத்தில் பி.ஏ படித்தார். அவர் ஸ்ரீநிவாஸ ராமானுஜத்தின் கணக்குகளையொட்டிப் பல ஆராய்ச்சிகள் செய்தார். அவர் 1946 ல் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் கணிதவியல் தனது எம்.ஏ. பட்டத்தை பெற்றார். அதே ஆண்டில் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ், பி.ஏ. (ஹானர்ஸ்) படிக்க உதவித்தொகை வழங்கியது. 1949ல் அவர் இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். 1950ல் அவர் இயற்பியலில் மிகச் சிறந்த முன் முனைவர் பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்மித் பரிசு பெற்றார். 1951ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வறிக்கையில் முதுநிலை பட்டம் பெற்றார்.முகமது அப்துஸ் சலாம், ஷெல்டன் கிளாஷோ, ஸ்டீவன் வெய்ன்பெர்க் (Sheldon Glashow, Steven Weinberg) ஆகிய மூவருக்கும் 1979ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. மின்காந்த மற்றும் கதிரியக்கச் சக்திகளின் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. 1960 முதல் 1974 வரை பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து பாகிஸ்தானின் அறிவியல் ஆலோசகராக இருந்தார் சலாம். செப்டம்பர் 16, 1961ல் நிர்வாக ஆணை மூலம், விண்வெளி மற்றும் உயர் வளிமண்டலம் ஆராய்ச்சி ஆணையம் நிறுவப்பட்டது. அதில் அப்துஸ் சலாம் முதல் இயக்குநராகப் பணியாற்றினார். 1964ல், அப்துஸ் சலாம் பாக்கிஸ்தான் நாட்டின் IAEA குழு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.1972ஆம் ஆண்டில் ஆயுதங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வையும் சலாம் வழி நடத்தினார். Copley பதக்கம் (1990), ஸ்மித் விருது(Smith), ஆடம்ஸ் விருது(Adams), நிசான் இ இம்தியாஸ் (Nishan-e-Imtiaz) (1979), சித்தரா-இ-பாகிஸ்தான் Sitara-e-Pakistan (1959), இயற்பியலில் சிறந்த பங்களிப்புக்கான தங்க பதக்கம் (அறிவியல் Czechoslovak அகாடமி, பராகுவே) (1981) போன்ற பரிசுகளை பெற்றுள்ளார். 1998ம் ஆண்டில் அந்நாடு அணுப் பரிசோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அவருக்கு நினைவு தபால் தலைகளை 1998ம் ஆண்டில் வெளியிட்டது. அப்துஸ் சலாம் விருது (சலாம் பரிசு) இயற்பியல் மற்றும் இயற்கை அறிவியல் உயர் சாதனைகள் மற்றும் பங்களிப்புக்கான விருது நிறுவப்பட்டது.முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் முகமது அப்துஸ் சலாம் நவம்பர் 21, 1996ல் பிராக்ரஸிவ் மிகையணுக்கரு வாதத்தால் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்தில் தனது 70வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பின்னர் அவரது உடல் பாகிஸ்தான் கொண்டு வரப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமியரும் இவரே.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.