இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தீவிர கண்காணிப்பில் 10 பேர்.இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, கண்காணிப்பில் வைத்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர் மருத்துவமனையில் தனி அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் கொரோனா எனும் கொடிய வைரஸ் நுழைந்துள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலால் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Category:
தேசிய செய்திகள்
பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி பின்பற்றப்படுவதன் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமித்ஷா, கட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால், அமித்ஷா கடந்த சில மாதங்களாக இரு பதவிகளில் இருந்து வந்தார். எனவே, பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தகவலின் படி, பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டு மக்களை போல் நானும் சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்தேன் -.மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது – ..இருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கிரகணத்தை நேரலையில் பார்க்க முடிந்தது – பிரதமர் மோடி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா?-பிரியங்கா காந்தி கண்டனம்
by mohan
written by mohan
மத்திய பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்மையில் மத்திய அரசு நிறுவனங்களான ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. பின், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை நவ.20 நேற்று ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் நமது நாட்டின் பெருமைகள். அவை தங்கப் பறவைகள். நாட்டை புதுப்பித்து கட்டுவதாக பாஜக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.ஆனால், பொதுத் துறை நிறுவனங்களை நட்டமாக்கி, அவற்றை விற்கும் வேலையைத் செய்து கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ள அவர் இது வருத்தமான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய கல்விக் கொள்கை அல்ல;புதிய புல்டோசர் கொள்கை-மாநிலங்கள் அவையில் மதிமுக வைகோ கடும் தாக்கு
by mohan
written by mohan
மாநிலங்கள் அவையில் இன்று 21.11.19 கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுந்து குறுக்கிட்டார்.அப்போது அவர் அவைத் தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடிய போது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.
இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரை மட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும்.அவைத் தலைவர் வெங்கையா நாயுடு: உங்கள் கேள்விக்கு வாருங்கள்.வைகோ : நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் சுற்றி வளைத்துப் பேசினார்.
வைகோ: எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே!அவைத் தலைவர்: உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது. நீங்கள் மூத்த உறுப்பினர். இதற்குமேல் கேட்கக்கூடாது.வைகோ: உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே இவ்வாறு வைகோ பேசினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது
குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் கலாசார விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள், ‘தல்வார் ராஸ்’ எனறு அழைக்கப்படக்கூடிய குஜராத்தின் பாரம்பரிய நடனமான வாள் நடனம் ஆடினர்.
மாணவிகள் இரு கைகளிலும் வாள்களை ஏந்திக்கொண்டு நடனம் ஆடினர். இரு கைகளிலும் வாள்களை சுழற்றி நடனமாடுவது ஆபத்தானது என்றபோதிலும் மாணவிகள் நேர்த்தியாக ஆடினர்.
அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை மாணவிகளுடன் சேர்ந்து வாளுடன் நடனம் ஆடினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் கல்வி மாமேதை மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்
by mohan
written by mohan
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்ததினம் தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அபுல் கலாம் ஆசாத் கல்வியின் முன்னோடியாக திகழ்ந்தவர். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றவர் ஆசாத்.தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951-ல் கோரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவை 1956-ல் ஆசாத் அமைத்தார்.
மேலும் அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குர்ஆனை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977ல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை (22.12.1958 ) இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேச பக்திக்கு அபுல் கலாம் ஆசாத் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.இவருக்கு நட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது 1992-ல் மறைவுக்குப் பிந்தையதாக வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவ. 11-ம் தேதி இன்று தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்துள்ளன. புறநகர் ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் (ஒரே தண்டவாளத்தில்) ஒருவர் பலியானார். 20 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரள மாநிலம் கொல்லம் ஆட்சியர் அலுவலகம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் பிரகாசன்,வெங்காய விலை உயர்வையொட்டி சலுகை வழங்க உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
400 ரூபாய் கொடுத்து 5 கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டி-சர்ட் வழங்கப்படும் என்று அதில் கூறியிருந்தார்.
அதன்படி 2 நாட்களில் 1500 கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்து அதற்கு உரிய டி-சட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
விலை உயரும்போது வாடிக்கையாளர்கள் மனதை சாந்தப்படுத்த சில இலவசப் பொருட்களை வழங்கினால் விற்பனை அதிகரிக்கும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள்,” என்று கடை உரிமையாளர் பிரகாசன் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.
சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில்இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இருந்துவந்த நீண்ட பிரச்னை, இந்தத் தீர்ப்பின் மூலமாக ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதித்துறையின் இந்த முடிவை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரித்தேகருத்து தெரிவித்து வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்துத்தலைவர்களும் மக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2010ல் அலகாபாத் நீதிமன்றம், நிலத்தை மூன்றாக பிரித்ததே தவறு என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தற்போது, அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம்மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அதேபோன்று, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு வக்பு போர்டு ஏற்கும் இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு கருதியும், வசதி கருதியும் நேற்று இரவு தீர்ப்பு நேரம் அறிவிக்கப்பட்டு இன்று(9/11/2019) காலை தீர்ப்பு முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாகவே, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் சாதாரணமாக மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொண்ட நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் நாம் நிரூபித்திருக்கிறோம். தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டாலும்,சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படித்த பின்னர், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.
அவ்வாறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், கண்டிப்பாக இந்த வழக்கின் விசாரணை தொடர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தீர்ப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், தீர்ப்பினை அமல்படுத்த கால தாமதம் ஆகலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உத்தரபிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் ( வயது 42). இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர்.
அதன்படி 50 முட்டைகளை சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. பந்தய தொகையாக 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 250 ரூபாய் முன்பணமாக பெறப்பட்டுள்ளது.
இதன்பின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு முட்டை சாப்பிட ஆரம்பித்துள்ளார் சுபாஷ். மது குடித்துக்கொண்டே முட்டைகளை சாப்பிட ஆரம்பித்தவர் 41 முட்டைகளை சாப்பிட்டுள்ளார். 42-வது முட்டையை சாப்பிடும்போது அவர் மயக்கமடைந்து கீழே விழ அருகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சுபாஷை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு கூறி உள்ளனர்.
உடனடியாக சுபாஷை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாஷுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் பந்தயத்தில் சுபாஷ் உயிரை இழந்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.!
டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சீரியஸான விஷயமாகும். இதனால் நம்முடையா குழந்தைகள், வேலைக்கு செல்வோர், சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
காற்று மாசுபாட்டு பிரச்னையை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். 1952-ல் லண்டனில் ஏற்பட்ட மிக மோசமான காற்று மாசுபாட்டால் 12 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்தார்கள். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லண்டன் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். இதன் விளைவாக புதிய சட்டம் இயற்றப்பட்டு மாசுபாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அயோத்தி’வழக்கு’ விரைவில் தீர்ப்பு, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
by Askar
written by Askar
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம்தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அன்று தவறினாலும், 14 அல்லது 15-ம் தேதி கண்டிப்பாக தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீர்ப்புக்காக இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே அயோத்தியிலும், உத்திரபிரதேசத்தின் காஜியாபாத்திலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்தியா முழுவதுமே பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநில போலீசாருக்கு வரும் 30-தேதி வரை விடுமுறையை ரத்து செய்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
அதேபோல் தீர்ப்பு எந்த தரப்புக்கு சாதகமாக வந்தாலும் இரு தரப்பும் அமைதி காக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. வானொலியில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அமைதி காத்ததை போல, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் போதும் அனைவரும் அமைதிகாக்க வேண்டுமென தெரிவித்தார். இது குறித்து பேசிய உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு முழுமையாக அமல்படுத்தும். நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2ம் தேதி கூடிய முஸ்லீம் அமைப்புகள், நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு முஸ்லீம் அமைப்புகள் மதிப்பளிக்க வேண்டுமென அறிவித்தன. அதேபோல் டெல்லியில் கடந்த 1ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர் நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில் சாதகமாக தீர்ப்பு வந்தாலும் வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்னும் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளதால் மத்திய மாநில அரசுகள், வழக்கு தொடர்புடைய இரு தரப்பினர், பொதுமக்கள் என அனைவரும் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே 5 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு என்பதால், 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்குவார்களா அல்லது மாறுபட்ட தீர்ப்பை வழங்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேய் உள்ளது என்றும், பில்லி – சூனியம் போன்ற செயல்களால் பலன் உள்ளது என்றும் நிரூபித்தால், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என, ஒடிசா மாநில கலெக்டர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் விஜய் அம்ருதா குலாங்கே. இந்த மாவட்டத்தில் உள்ள கோபபூர் மற்றும் ஜெகன்நாத் பிரதா கிராமங்களில் சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறப்பட்டது.இதையடுத்து அவர்கள் மந்திரவாதிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பில்லி – சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய மந்திரவாதிகள், பாதிக்கப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி, மனித கழிவுகளை உண்ணச் செய்தனர்.
மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, கன்ஜம் கலெக்டர் விஜய் அம்ருதா குலாங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது; “பில்லி – சூனியம் மூலம் ஒருவருக்கு மற்றொருவர் தீங்கு செய்ய முடியாது.ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டுமே தவிர மந்திரவாதிகளிடம் அல்ல. என் அறிவுக்கு எட்டியவரை, பேய் இல்லை; பில்லி – சூனியம் என்பது மூட நம்பிக்கை.அப்படி, பேய் உள்ளது என்றும், பில்லி – சூனியம் போன்ற செயல்களால் பலன் உள்ளது என்றும் நிரூபித்தால், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.சீனாவின் வூஹான் நகரில் 7வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இவர் கடந்த 2018ம் ஆண்டு, இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.கடந்த 2005ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், 2008ம் ஆண்டு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி இடது காலை இழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொறுப்புள்ள அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு! தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கண்டனம்.!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர்
இ.முஹம்மது வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது.!
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த களக்காட்டில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்சந்தித்து தங்களின் பகுதியில் உள்ள ரேசன்கடை தொடர்பான மனுவை கொடுத்துள்ளனர்.
அந்த மனுவை வாங்க மறுத்த ராஜேந்திரபாலாஜி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே! பின் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனுவை தருகின்றீர்கள்? 6 சதவிகித வாக்குகளை வைத்து நாக்கு வழிக்கவா முடியும்? என்று பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
தமிழக அரசின் அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சரின் நாகரீகமற்ற பேச்சு இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவினர் இதுவரைக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அறியாமையை நினைத்து கவலை கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியா? லேடியா? என்று கேட்டு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனித்து நின்ற போது, மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதிகபட்சமான இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்து அதன் காரணமாக அதிமுக பெரும்பான்மை இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதுபோல சென்ற 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றே அதிமுக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது. இந்த வரலாறையெல்லாம் மறந்து விட்டுப் பேசுகின்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
என்றைக்கு அதிமுக பாஜகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததோ அன்றிலிருந்தே இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.
அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று பிரித்து செல்வதில்லை, அதுபோல அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கிற அரசியல் பாலபாடம் கூடத் தெரியாதவர் இந்த ராஜேந்திரபாலாஜி என்பது உறுதியாகின்றது.
மோடி எங்களின் டாடி என்று சொல்லி அமைச்சராக மட்டுமல்ல! அரசியலுக்குக் கூட தகுதியில்லாத அரிச்சுவடி தெரியாத ராஜேந்திரபாலாஜியின் தொடர் உளறல்களை மக்கள் அறிவார்கள்.
பாஜகவோடு உறவை வைத்ததால் இழந்து விட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை மீண்டும் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையில் உள்ளவர்கள் நினைக்கும் நிலையில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் இழிவுபடுத்தியுள்ளதோடு மட்டுமின்றி பல சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி., அதிமுகவை சவக்குழிக்கு அனுப்பும் வேலையைச் செய்து வருகின்றார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்ற ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்று அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ள அமைச்சரின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவன்மையாகக் கண்டிக்கின்றது. வடநாட்டு பாஜக அமைச்சர் போல தன்னை நினைத்துக் கொண்டு செயல்படும் ராஜேந்திரபாலாஜியை அதிமுகவின் தலைமை கட்டுப்பட்டுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றது. என தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பி.சி.சி.ஐ.தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு.கங்குலியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் எந்த குப்பைகளை சுத்தம் செய்தார் மோடி! – கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
by mohan
written by mohan
மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன். வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அப்போது, கடற்கரையில் குப்பைகளை மோடி சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள மோடி, மாமல்லபுரத்தில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டேன். இது 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, கடற்கரையில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாகவும் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்வோம். நாம் ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதி செய்வோம் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை ஒட்டி கடந்த ஒரு வாரமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இரு தலைவர்கள் வருகையை ஒட்டி கடற்கரையை சுத்தமாகவே வைத்திருந்தனர். அப்படி இருக்க எந்த குப்பையை பிரதமர் சுத்தம் செய்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:-இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.மாமல்லபுரத்தை என் வாழ்க்கையில் இனி ஒரு நாளும் மறக்க முடியாது. பல இனிமையான நினைவுகளை மாமல்லபுரம் பயணம் எனக்கு தந்துள்ளது. என்னை போன்றே சீன அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம் மறக்க முடியாதபடி இருக்கும் என்று கருதுகிறேன்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது. என்னுடன் வந்த அதிகாரிகளும் இதை உணர்ந்தனர். இதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேற்றும், இன்றும் மனம்விட்டு பேசினோம். அது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து இரு நாடுகளின் உறவு மேம்படபாடுபடுவோம்.நாங்கள் இருவரும் மிக ஆழமாக பேச்சு நடத்தி உள்ளோம். இந்த பேச்சு வார்த்தைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு நிச்சயம் அமையும்.மாமல்லபுரத்தின் வருகை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமாக இது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.இவ்வாறு சீன அதிபர் ஜின்பிங் பேசினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேபாளம் புறப்பட்டார்.சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர் 2 நாட்கள் மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடத்தினர். பின்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார். அவரை தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ‘சபாநாயகர் மற்றும் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீன அதிபர் ஜி ஜிங்சாங் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மரமல்லபுரத்தில் இன்றும், நாளையும் சந்தித்து பேசயுள்ளனர். இந்நிலையில் மத்தியம் சென்னை விமான நிலையத்திற்கு முதலில் வந்த பிரதமர் மோடிக்கும் பகல் 1.55 மணிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் | முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
மோடி பிறகு ஹெலிகேப்டரில் கோவளம் புறப்பட்டு சென்றார் சீன அதிபருக்கு பல்வேறு வகையானவரவேற்பு விமான நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதேப்போல் கிண்டி ஓட்டல் வரை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் மாலையில் மாமல்லபுர சிற்பங்களை பார்த்துவிட்டு பின்பு கலைநிகழ்ச்சியை பார்க்கின்றனர். பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்யபபட்டுள்ளது. மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
கே.எம் வாரியார்
You must be logged in to post a comment.