ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் கார்த்திக், கோகிலா என்ற தம்பதியின் மகன் சிறுவன் சஞ்சைக்கு நேற்று பிறந்த நாள் இச்சிறுவனின் தந்தை சமூக ஆர்வலர், தாய் செவிலியராக பணிபுரிகிறார் என்பதால் கொரோணா வைரஸ் தாக்கம் குறித்து தாய், தந்தையர் தினமும் வீட்டில் இருக்கும் பொழுது அச்சிறுவனுக்கு முக கவசம் அணிவது குறித்தும் கைகளை கழுவுவது குறித்த அவசியத்தை கூறி வந்ததன் விளைவாக தனது பிறந்த நாள் கொண்டாடும் பொழுது நமது வீட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முககவசம் கொடுக்க வாங்கி தந்தால் தான் நான் புத்தாடை அணிந்து சாமி கும்பிட்டு விட்டு பிறந்த நாள் கொண்டாடுவேன் என ஒரே பிடிவாதமாக சொல்லியுள்ளான். அதனை கேட்ட அவனது தாய், தந்தையர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக சுமார் 200 முக கவசங்களை தயார் செய்யச் சொல்லி வாங்கி வந்து தனது மகனிடம் கொடுத்தனர் .அதனை பார்த்த சிறுவன் மிகுந்த சந்தோசத்தின் உச்சிக்கே சென்று உடனே தனக்கு ஏற்கனவே எடுத்து வைத்திருந்த புத்தாடையை அணிந்து கொண்டு தானும் முக கவசம் அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு முக கவசங்களை வழங்கியதோடும், கொரோனா குறித்த விழிப்புணர்வுகளையும் பொதுமக்களிடையே ஏற்படுத்திய இச் சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அத்துடன் அப்பகுதி பொதுமக்கள் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல செவிலியரின் மகன் என்பதால் சுகாதாரம் குறித்து இவ்வளவு விழிப்பாக உள்ளான் என கூறி அனைவரும் சிறுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.
Category:
செய்திகள்
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு:-வைகோ கண்டனம்..
by Askar
written by Askar
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு
‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு:-வைகோ கண்டனம்..
காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மிகத் தெளிவான வழிகாட்டு விதிகளை வகுத்திருந்தது.
பக்ரா – பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன்மாதிரியாகக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டது. 6 ஆண்டுகள் காலதாமதமாக 2013 பிப்ரவரி 19 இல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 16, 2018 இல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின்னர் 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
மத்திய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அணைகளிலிருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ள உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. காவிரி நீரை பிரச்சினைக்குரிய மாநிலங்களுக்குகிடையே பகிர்ந்து அளிக்கும் அதிகாரமும் இல்லை என்பதை மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபோதே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டிய கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளைச் செயல்படுத்த, மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதெல்லாம் கர்நாடக மாநிலம் மறுத்து வந்தது. நீர் திறப்பு பற்றிய மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளானதைக் கண்கூடாகப் பார்த்தோம்.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உப்புச் சப்பற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவைகளை அமைத்த மத்திய அரசு, தற்போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைத்து சமாதி எழுப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது.
காவிரி ஆணையத்தின் 5ஆவது கூட்டம், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ராஜேந்திரகுமார் தலைமையில், கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் நடந்தது. இதுவே காவிரி ஆணையத்தின் இறுதிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்.
ஏனெனில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகமான ஜல்சக்தித் துறை, காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய பா.ஜ.க. அரசு பறித்துவிட்டது.
நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் ஒழித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தவா சட்டம் 1956 மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
கொரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டுகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
29.04.2020
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் YOUNG GUYS CRICKET CLUB என்ற தனியாா் அமைப்பின் சாா்பில் சரவணப்பாண்டி தலைமையில் இளைஞா்கள் உசிலம்பட்டி வருவாய் கோட்டாசியர் ராஜ்குமாா் மற்றும் காவல் ஆய்வாளர் சாா்லஸ் ஆகியோாிடம் துப்புரவு பணியாளர்கள், பொது சேவகர்கள், மற்றும் பொதுமக்கள் உபயோகத்திற்கு முககவசங்களை வழங்கினா்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பாரதி சமூக அறக்கட்டளை மூலம் உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் தொழுநோயாளிகளுக்கு உதவி
by mohan
written by mohan
மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி சிவா. இவர் பாரதி அறக்கட்டளை மூலம் 144 தடை உத்தரவு போடப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர்,தொழு நோயாளிகள் ஏழை எளியோர் என இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு இன்று வரை உணவு தானியங்களை சமூக அக்கறையோடு தொண்டு உள்ளத்தோடு கொடுத்து உதவி வருகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலசப்பாக்கம் பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கினர்..
by Askar
written by Askar
கலசப்பாக்கம் பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கினர்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் முன்னூர்மங்கலம், மேல் முடியனூர், ஒரந்தவாடி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
144 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இதனால் என் எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து
முன்னாள் அமைச்சரும் ,திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ. வேலு அவர்களின் ஆலோசனையின் கலசபாக்கம் தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே. கம்பன் மற்றும் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் 15 நாட்களுக்கு தேவையான காய்கறி, மளிகை மற்றும் நிவாரணப்பொருட்கள் பொருட்கள் இலங்கை முகாமை சேர்ந்த 55 குடும்பங்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், பேரூராட்சி செயலர், மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் காவல்துறையின் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
by Askar
written by Askar
செங்கம் காவல்துறையின் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் துறையின் சார்பில் பொதுமக்களிடத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் ராட்சத ஓவியம் வரையப்பட்டன.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு விழிப்புணர்வு முன்னச்செரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து செங்கம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், கலசபாக்கம் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர அனாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும் அதையும் மீறி மோட்டார் சைக்கிள்களில் சிலர் சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.
இவர்களை எச்சரிக்கும் விதமாக பொதுமக்கள்ளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் செங்கம் காவல்துறையின் சார்பில் சார்பில் கரோனா வைரஸ் உருவப்படமும், தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு, நலமாக இரு, கரோனாவை ஒழிப்போம் என்று வாசங்களும், முககவசம் அணிவோம், கைகழுவுவோம், நம்மைக் காப்போம், நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு ஓவியத்தை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில், செங்கம் காவல் துறை ஆய்வாளர் சாலமன் ராஜா, காவல்துறை யினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த பிரம்மாண்டமான ஓவியம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் கபசுர கசாயம் மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்டது
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் காவல்துறை ஒருவருக்கு தோற்று உறுதியானதை அடுத்து அந்தப் பகுதியானது தடை செய்யப்பட்ட பகுதியாக மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வீட்டுக்கும் கபசுர கசாயம் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகவே வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டு வாசலிலிருந்து வாங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டு வாசலிலிருந்து அப்பகுதி மக்கள் கசாயத்தை வாங்கி அருந்துகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு அம்மா உணவகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இலவசமாகவே மூன்று வேளையும் கொடுக்கப்படுகிறது. இதில் குறிப்பாக தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மதுரை அரசு மருத்துவமனை சார்பாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனை பயன்படுத்தி ஒரு சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மேலவளவு போலீசுக்கு புகார் வந்தது.இந்த நிலையில் மதுரை மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த உடப்பன்பட்டி பகுதியில் யாரோ கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து அவர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து 2 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.போலீசாரின் விசாரணையில் அவர் உடப்பன்பட்டியை சேர்ந்த ராமன் (வயது 65) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மேலவளவு போலீசார் ராமனை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்,
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1893).
by mohan
written by mohan
அரால்டு கிளேட்டன் யுரே (Harold Clayton Urey) ஏப்ரல் 29, 1893ல் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் யுரே மற்றும் கோரா இரெபெக்கா இரைநோல்க்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.
பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் அறிவுத்தாக்கம் பெற்று பின்னர் கோப்பனாகனில் நீல்சு போருடன் சேர்ந்து அணுக்கட்டுமானம் பற்றி ஆய்வு செய்தார். அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் 1924 முதல் 1928 வரை வேதியியல் துணையாளராக (Associate in Chemistry) இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கினார். பின்னர் ஆர்தர் உருவார்க்கு (Arthur Ruark) என்பாருடன் சேர்ந்து “அணுக்கள், குவாண்டாக்கள், மூலக்கூறுகள்” (Atoms, Quanta and Molecules) என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இது ஆங்கிலத்தில் உருவான குவாண்டம் இயங்கியல் பற்றியும் அதன் பயன்பாடுகளும் பற்றியுமான முதல் நூல்களில் ஒன்று. யுரேயுக்கு அணுக்கருவியலில் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஆய்வு செய்ததின் விளைவாய் தியூட்டிரியம் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது.
அரால்டு கிளேட்டன் யுரே ஐதரசனின் ஓரிடத்தானாகிய டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாகுவதைச் செய்து காட்டிய மில்லர்-யுரே செய்முறைக்காட்டுக்கும் புகழ் பெற்றவர். டியூட்டிரியம் (Deuterium) என்பது ஐதரசனின் ஓரிடத்தான்களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய உட்கருவில் ஒரு நேர்மின்னியும் ஒரு நியூட்ரானும் உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் டியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் “டியூட்டெரோசு” (deuteros) என்றால் “இரண்டாவது” என்று பொருள். தியூட்டிரியத்தின் வேதியியல் குறியீடு 2H என்பதாகும். எனினும் D எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் இது நீரியம்-2 என்றும் அழைக்கப்படும். டியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று டியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது. அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம். புவியில் 0.0156 விழுக்காடு இந்த டியூட்டிரியம் உள்ளது. (நிறை அளவில் 0.0312%). விண்மீன்களின் உள்நடுவே டியூட்டிரியம் உருவாவதை விட விரைவாக அழியும் ஆகையாலும் மற்ற முறைகளில் விளையும் அளவு மிகவும் குறைவானதாலும், இப்பொழுது இருக்கும் டியூட்டிரியத்தின் அளவு, பெரு வெடிப்பு என்னும் நிகழ்ச்சி ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றைய பொழுது உண்டானவை என்று கருதுகின்றார்கள்.
வால்வெள்ளி என்னும் விண்பொருள்களிலும் புவியில் காணப்படுவது போன்றே ஏறத்தாழ மில்லியன் பங்கில் 156 பங்கே கொண்டுள்ளதாக கணக்கிட்டுள்ளனர். இதனால் புவியின் கடலில் உள்ள நீர் கூட இப்படியான வால்வெள்ளி மோதலில் உருவானதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். டியூட்டிரியம் இரு ஆக்சிசன் மூலக்கூறுகளுடன் சேர்ந்து கனநீர் உண்டாகிறது. கன நீர் அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. யுரே நோபல் பரிசைத் தவிர, 1943ல் பிராங்க்ளின் பதக்கத்தையும், 1962ல் ஜே. லாரன்ஸ் ஸ்மித் பதக்கத்தையும், 1966ல் ராயல் வானியல் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும், 1973ல் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் பிரீஸ்ட்லி பதக்கத்தையும் வென்றார். 1964ல் அவர் தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார். 1947ல் ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆனார். சிறுகோள்4716 யுரே (சந்திர தாக்க பள்ளம் யுரே) அவருடைய பெயரிடப்பட்டு உள்ளது.
யுரே தோட்டக்கலை மற்றும் கேட்லியா, சிம்பிடியம் மற்றும் பிற மல்லிகைகளை வளர்ப்பதில் மகிழ்ந்தார். டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அரால்டு கிளேட்டன் யுரே ஜனவரி 5, 1981ல் தனது 87வது அகவையில் கலிபோர்னியாவின் லா ஜொல்லாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இந்தியானாவின் டீகால்ப் கவுண்டியில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாஹித்ய அகாடமி விருது பெற்ற புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1891).
by mohan
written by mohan
பாவேந்தர் பாரதிதாசன் (Bharathidasan) ஏப்ரல் 29, 1891ல் பாண்டிச்சேரியில் (புதுவை) கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார்.
தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 29, 1946ல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990ல் பொது உடைமையாக்கப்பட்டன.
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல நூல்களை எழுதியுள்ளார். 1946ல் “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964ல் தனது 72வது அகவையில் நியூயார்க், சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1970ல் அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது. அக்டோபர் 9, 2001ல் சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், ஆதிதிராவிடர் (காளியம்மன் கோயில் தெரு) அருந்ததியர் குடியிருப்பில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போர் உள்பட 1,500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பை மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார். கமுதி வடக்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் வாசுதேவன், கமுதி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்செல்வி போஸ் மற்றும் திமுக., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டை அருகே உணவு பொருட்கள் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் 1 லட்சம் மதிப்பிலான போலி பீடிகள் கடத்தல்-3 பேர் கைது
by mohan
written by mohan
சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் கொரோனா கால தீவிர வாகன சோதனையின் போது போலி பீடிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தில் போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது ரூ.1லட்சம் மதிப்பில் போலி பீடிகள் சிக்கியது.கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சேர்ந்தமரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு தலைமையில் ஏட்டு பன்னீர் செல்வம் மற்றும் தன்னார்வலர்கள் கொரோனா ஊரடங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக போலீரோ மற்றும் லோடு ஆட்டோவில் வந்த வாகனத்தை மடக்கி சோதனையிட முயற்சித்தனர். அப்போது அந்த வாகனங்கள் நிற்காமல் வேகமாக சென்றது. அதனால் அந்த வாகனங்களை போலீசார் விரட்டி பிடித்தனர். அதில் இருந்த 4 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை செய்ததில் அதில் உணவு பொருட்கள் அவசரம் என ஒட்டப்பட்ட வாகனத்தில் போலி பீடிகளை ஆலங்குளத்திலிருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து ஆலங்குளத்தை சேர்ந்த செல்வராஜ்,(38), சிவகாமியை சேர்ந்த கண்ணன்(40), இரட்டைகுளத்தை சேர்ந்த அருணகிரி (32) ஆகியோரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த ரூ 1 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகள், 13 பண்டல் பிரபல கம்பெனி பெயரிலான போலி லேபிள்கள் மற்றும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கொரோனா அரசியல் சூடு பிடித்து வரும் இச்சூழலில் வீட்டு வாடகை வாங்க மறுத்த விவசாயி ஒருவரின் மனித நேயமிக்க செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டையில் வீட்டு வாடகை வாங்காத மனித நேயரை பலரும் பாராட்டி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் திருமலை. மதிமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்துவருகிறார். 4 வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார்.இந்நிலையில் கொரோனாவை தடுக்க . 144 தடை உத்தரவு காரணமாக தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களிடம் (4 வீட்டிற்கும்) இம்மாதம் வாடகை வேண்டாம் என கூறி வாங்காமல் தன் பெருந்தன்மையை இயல்பாக நிரூபித்து உள்ளார்.விவசாயி ஒருவர், கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்படுவர் என தெரிந்து வீட்டு வாடகை வேண்டாம் எனக்கூறிய மனிதநேயமிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முடிதிருத்துநர்கள், சலவைத்தொழிலாளர்கள்,அயல்நாடுகளில் சிக்கி இருப்போருக்கு உதவிகள் தேவை:-வைகோ அறிக்கை..
by Askar
written by Askar
முடிதிருத்துநர்கள், சலவைத்தொழிலாளர்கள்,
அயல்நாடுகளில் சிக்கி இருப்போருக்கு உதவிகள் தேவை:-வைகோ அறிக்கை..
கடந்த ஒரு மாத கால முடக்கத்தால், ஏழை எளிய அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாடி வதங்குகின்றனர்.
அதிலும் குறிப்பாக முடி திருத்துநர்கள், சலவைத் தொழிலாளர்கள், தலைச்சுமை வணிகர்கள், வேறு எந்தவிதமான வருமானத்திற்கும் வழி இல்லாமல் துயர நிலையில் இருக்கின்றனர். திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் சுருங்கி விட்டதால், படக்கலைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கவில்லை. பகுதிநேர செய்தியாளர்கள் அமைப்புகளில் இல்லை என்பதால், செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் அவர்களுக்கு இல்லை.
மும்பை வீதிகளில் தலைச்சுமை வணிகம் செய்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொரோனா தாக்கி இறந்து விட்டார்கள். அவர்களுடன் தங்கியிருந்த பலர், உரிய மருத்துவம், உணவு, தங்கும் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். ஒவ்வொரு வேளை உணவும் அவர்களுக்குப் போராட்டம்தான். அங்குள்ள தமிழர்களின் உதவியோடு நாட்களைக் கடத்துகின்றார்கள். நாடு திரும்ப வழி இல்லை. நாளை வான்ஊர்திகள் பறந்தாலும் பயணச்சீட்டு வாங்குவதற்கு அவர்களிடம் காசு இல்லை.
இது போல பல்வேறு நாடுகளில் துன்பத்தில் தவித்த கேரள மாநிலத்தவர் திரும்பி வருவதற்கு கேரள அரசு எப்படி ஏற்பாடு செய்திருக்கிறதோ, அதைப் பின்பற்றியாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
29.04.2020
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில் வீசிய சூறைக்காற்றில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 20 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமாயின. தமிழகத்தில் விசைப்படகுகளின் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இன்று (29.4.2020) அதிகாலை 4:30 மணியளவில் திடீர் சூறைக்காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 20க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆல்வின் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகு நடுக்கடலில் மூழ்கியது. படகிலிருந்த மீனவர் நால்வர் நீந்தி கரை வந்தனர். சேதமடைந்த படகுகள் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல மணி நேரம் மின் தடை நீடித்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜவ்வாது மலையிலிருந்து வெளியூருக்கு கள்ளச்சாராயம் கடத்திய 10 பேர் அதிரடி கைது..!
by Askar
written by Askar
ஜவ்வாது மலையிலிருந்து வெளியூருக்கு கள்ளச்சாராயம் கடத்திய 10 பேர் அதிரடி கைது..!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாது மலையிலிருந்து வெளியூருக்கு கள்ளச்சாராயம் கடத்திய 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
ஜவ்வாது மலையில் இருந்து ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கள்ளசாராயம் கடத்தி சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகரன் தலைமையில் ஜமுனாமரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் ,முருகன் சிறப்பு இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன், தனிப்பிரிவு போலீசார் விஜய் உள்ளிட்ட போலீசார் நள்ளிரவு அமிர்தி அருகில் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மலை கிராமங்களில் மலை கிராமங்களில் சாராயம் வாங்கிக் கொண்டு அதனை பைக்கில் கடத்தி வந்த 11 பேரை போலீசார் மடக்கினர். அதில் ஒருவன் தப்பி ஓடினான் இதையடுத்து ஆரணியை சேர்ந்த உமாபதி 37, பாஸ்கரன் 27, மணிகண்டன் 25 சிவா 32 ,மோகன எஸ்வரன் 24, கணேசன் 45, மற்றும் வாலாஜாவில் சேர்ந்த விநாயகம் வேலூரை சேர்ந்த ராஜேஷ் பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமலை உட்பட 10 பேர் பிடிபட்டனர் அவர்களிடம் கடத்தி வந்த 250 லிட்டர் கலசங்களுடன் பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 11 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் அடுத்த ஜவ்வாது மலையில் காட்டு யானை சேதமாக்கிய 5 குடிசைகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.
by Askar
written by Askar
செங்கம் அடுத்த ஜவ்வாது மலையில் காட்டு யானை சேதமாக்கிய 5 குடிசைகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.
ஜவ்வாது மலையில் காட்டு யானை எடுத்த 5 குடிசை வீடுகளில் உரிமையாளர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று உலா வந்து கொண்டிருந்தது. இரவு நேரங்களில் உணவு தேடிச் செல்லும்போது குடிசை வீடுகள் பலா மரங்கள், நெல்வயல், ஆகியவற்றை சேதமாகி வருகின்றன. மாட்டுக்கானூர்,சிந்லூர் ஆகிய கிராமங்களில் 5 குடிசை வீடுகளை இந்த யானை இடித்து தள்ளி சேதம் ஆக்கியது .அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தனது சொந்த பணத்தில் தலா 5 ஆயிரம் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் தாசில்தார் வெங்கடேசன், யூனியன் தலைவர் ஜீவா , ஊராட்சிஒன்றிய ஆணையாளர்கள் சக்திவேல், ஆனந்தன், வனசரக அலுவலர் குணசேகரன் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது:-மு.க.ஸ்டாலின்அறிக்கை…
by Askar
written by Askar
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது:-மு.க.ஸ்டாலின்அறிக்கை…
“தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி”, “15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை” ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பு என்று அ.தி.மு.க. அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.
கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு ஊழியர்கள்- கொரோனா தடுப்புப் பணிகளையும், “மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது”, முழு ஈடுபாட்டுடன் ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவத்துறை டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் என பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக் கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி – கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா நேரத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் எல்லாம் ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளார்கள். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு “அவசியமான” அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நேரத்தில் அ.தி.மு.க. அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை – அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.
மத்திய பா.ஜ.க. அரசு முடிவு எடுத்தவுடன் – உடனே அதைப் பின்பற்றி, அ.தி.மு.க. அரசும் இதுபோன்று அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை மனம் போன போக்கில் ரத்து செய்வதை, மக்கள்நலனில் அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. “நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்” என்று “விளம்பரம்” செய்து வந்த அ.தி.மு.க. அரசும், அதன் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும் இதுபோன்ற ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது – அ.தி.மு.க. ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டு விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ரூ.4.56 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை வீழ்த்திய கொடுமையான அ.தி.மு.க. ஆட்சிதான், இப்படியொரு பின்னடைவான சூழலை கொரோனா போரில் கள வீரர்களாக நிற்கும் காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் மீது திணித்து, அவர்கள் தலையில் கைவைத்திருக்கிறது என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
“ஏற்கனவே ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்திருந்தால் அதையும் ரத்து செய்யுங்கள்” என்று அமைச்சர் திரு. ஜெயக்குமாரின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை வெளியிட்டிருப்பது சிறிதும் ஈவு இரக்கமற்றது. கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இப்படி உதாசீனப்படுத்துவது ஏற்புடையதாகாது.
“அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பிற்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து” போன்ற, அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அவர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கொரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் லாரி டிரைவரிடம் லஞ்சம்-ஆயுதப்படை காவலர் அதிரடி சஸ்பெண்ட்…
நெல்லையில் உணவுப்பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை-தென்காசி சாலையில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 24-ம் தேதி பணியில் இருந்த ஆயுதப்படை காவலரான செல்வகுமார் என்பவர் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை வழிமறித்து வசூல் செய்ததாகப் புகார் எழுந்தது.
அந்த வழியில் உணவுப் பொருளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்த காவலர் செல்வகுமார் 50 ரூபாய் லஞ்சம் பெறும் காட்சி வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால்,இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் காவலர் செல்வகுமார் லாரி டிரைவரை மிரட்டி லஞ்சம் பெற்றது தெரியவந்தது. அதனால் அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் தீபக் டாமோர் அதிரடியாக உத்தரவிட்டார்.
கொரோனா நிவாரணப் பணிக்கு உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகரக் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூட்டிக்கிடக்கும் பிசிஆர் ஆய்வகம்; பொறுப்பற்ற முறையில் செயல்படும் ஐசிஎம்ஆர்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்..
by Askar
written by Askar
பூட்டிக்கிடக்கும் பிசிஆர் ஆய்வகம்; பொறுப்பற்ற முறையில் செயல்படும் ஐசிஎம்ஆர்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்..
மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி இருந்தும் அந்தக் கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உஇருந்தும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளதை சுட்டிக்காட்டி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுமைக்கும் கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய வேளையில், இந்தியா போதிய அளவிற்கு சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதுகுறித்து பலமுறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “எந்த அளவிற்கு சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்கள் உள்ளனவோ அவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று பதில் சொல்லப்பட்டது.
சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தினம் தினம் அரசிடம் வைக்கப்படுகிறது.
ஆனால், மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி உள்ளது. அந்தக் கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். ஆனாலும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளன.
இதை விட ஐசிஎம்ஆரின் அலட்சியத்தை வெளிக்காட்டக்கூடிய விஷயங்கள் ஏதாவது இருக்குமா? இந்த ஆய்வகம் தமிழகத்தில் யானைக்கால் நோய் தொற்றுக்கு எதிராக நிறைய ஆய்வுகளையும் சோதனைகளையும் செய்த முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வகம்.
அதில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் கொரோனா குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளது ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் .
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினம் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக சோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலமே நோய் தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்து நோய் பரவாமல் தடுக்க முடியும்.
எனவே உடனடியாக மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனாவை கண்டறிவதற்கான சோதனைகளை துவக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
PCR கருவியில் பயன்படுத்த தேவைப்படும் வேதியல் மூலக்கூறுகள் அல்லது ரசாயன பொருட்களை தருவித்து ஆய்வகத்தை செயல்படவைக்கவேண்டும்.
மேலும் புதிய கருவியை வாங்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஆய்வகம், மக்களுக்கு அதிகம் தேவைப்படும் காலத்தில் செயல்படாமல் போனால் அந்த ஆய்வகத்தின் பயன் என்ன ?”
You must be logged in to post a comment.