முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று(27.01.19) கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, ராமேஸ்வரம் அருகே பேய் கரும்பு பகுதியில் உள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா மரைக்காயர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, விஞ்ஞானி பொன்ராஜ், கோட்டாட்சியர் சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் மாணவ, மாணவியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானி பாலமுருகன், பொறியாளர் ஷேக் கவுஸ் மைதீன், கலாம் நினைவிட பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
You must be logged in to post a comment.