திருச்சி தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் மாணவர்களுக்களுக்கான தடகளப் போட்டிகள் நவ. 21, 22, 23 தேதிகளில்நடைபெற்றன. இதில் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் எம்.குமரகுரு உள்பட தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 64 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர் 44.99 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து மாநில அளவில் 6 ஆம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.மாணவர் குமரகுரு, பள்ளி உடற்கல்வி விளையாட்டு ஆசிரியர் ஜெரோம் வில்லியம் ஜெயக்குமார் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி(மண்டபம்), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி,வேர்க்கோடு புனித ஜோசப் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளர் தேவசகாயம், முதல்வர் சூசை ரத்தினம், உடற்கல்வி இயக்குநர்கள் சசிகுமார், அன்சாரி உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.ரமேஷ், ராஜா, சந்திரசேகர், மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Category:
மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் அருகே பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக பரவ விட்டவர் கைது
by mohan
written by mohan
இராமநாதபுரம் அருகே பாண்டியூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,42. இவர், ராமநாதபுரம் காட்டூரணி வைகை நகரில் தற்போது வசிக்கிறார். இவர் பாண்டியூரைச் சேர்ந்த பெண்ணின் போட்டோவை திருடினார். தனக்கும், அப்பெண்ணின் குடும்பத்திற்கும் இடையேயான முன் விரோதம் காரணமாகஅந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அப்பெண் போலீசில் புகார் அளித்தார். நயினார் கோவில் போலீசார் விசாரணையில், சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை பரப்பியது உண்மை என தெரிந்தது. இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிந்து ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது. 15 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
by mohan
written by mohan
கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 1 ½ சவரன் வளையலையும் பறித்து சென்றனர் .மற்றும் மதுரை யாகப்பா நகர், சர்ச் ரோடு எதிரில் நடந்து சென்றுகொண்டடிருந்த பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றதாக அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர்கண்ணன் இவ்வழக்கை புலன்விசாரணை செய்தார். காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை விரைவில் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார் . காவல் துணை ஆணையர் குற்றம் .பழனிகுமார் மேற்பார்வையிலும், காவல் உதவி ஆணையர் வினோஜி நேரடிக்கண்காணிப்பிலும், அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் உதவி ஆய்வாளர். செந்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் . பன்னீர்செல்வம் தலைமை காவலர்கள் போஸ், கண்ணன், விஜயசீலன், வெங்கட் மற்றும் ஆயுதப்படை காவலர் சசிகுமார் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட மதுரை, சக்கிமங்கலம் பசும்பொன் நகரை சேர்ந்த ஆதீஸ்வரன் கார்திக் கண்ணன் @ பரதன் யோகராஜ் ஆகிய மூன்று நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது மூவரும்தான் என உறுதிசெய்யப்பட்டது. எனவே மூவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 15 ½ சவரன் நகை மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்கள் மூவர் மீதும் ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் 3 வழக்குகளும், மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், மதுரை மாநகர் புதூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், அண்ணாநகர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2022-23 ஆம் ஆண்டு மாவட்ட கவர்னர் தேர்வு இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் பாராட்டு விழா
by mohan
written by mohan
தென் மாநில ரோட்டரி சங்கங்களின் 2022-23 ஆண்டு மாவட்ட கவர்னராக தேர்வாகியுள்ள இதயம் வி.ஆர்.முத்துவுக்கு இராமநாதபுரம் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா என்எஸ்பி மஹாலில் நடந்தது. தலைவர் எஸ்.நாகராஜன் தலைமை வகித்தார்.உதவி கவர்னர்கள் பி.ரெங்கநாதன், கே. நானா (எ) நாகரத்தினம், டி.அருள் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவர்னர்கள் கவுன்சில் சேர்மன் ஜோ.வில்வராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பி.முத்தையா பிள்ளை தன்னம்பிக்கை உரையாற்றினார்.
முன்னாள் மாவட்ட கவர்னர்கள் வி.பாஸ்கரன்,டி.ஏ.நெல்லை நாயகம்,எச்.ஷாஜகான், எம்.அசோக் பத்மராஜ், ஜெ.நவமணி,டாக்டர் கே.விஜயகுமார், டாக்டர் சின்னதுரை அப்துல்லா, ராஜகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஏற்புரை ஆற்றிய இதயம் வி.ஆர்.முத்துவுக்கு ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஏ.ரவிச்சந்திர ராமவன்னி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.செயலாளர் கே.செந்தில்குமார் நன்றி கூறினார்.இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பிரதான ஏற்பாடு செய்தனர்.பரமக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம், உச்சிப்புளி ரோட்டரி சங்கம் , ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி கோல்டன் ரோட்டரி சங்கம் , ராமநாதபுரம் ராயல்ஸ் ரோட்டரி சங்கம், ராமநாதபுரம் கோரல் சிட்டி ரோட்டரி சங்கம், ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இலஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு தின விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று லஞ்சம் ஒழிப்பு ஊழல் எதிர்ப்பு தினமாக மக்கள் பாதை இயக்கம் சார்பாக அனுசரிக்கின்றனர்.அதன் அடிப்படையில் இன்று இராமநாதபுரத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்தார்.மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் வீரக்குமார் வரவேற்றார் .இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் வாழ்த்துரை வழங்கினார்.திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் கிளாட்வின் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் அதை கையாளும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன், மாணவரணி பொறுப்பாளர் மதிவண்ணன், தேவிபட்டினம் ஊராட்சி பொறுப்பாளர்
உலகு ராஜ், சமூக சேவகர் சாகுல் ஹமீது , ரத்னராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட கொடை திட்ட பொறுப்பாளர் பாலாஜி நன்றியுரை கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நான் சொல்லித்தான் ஓபிஎஸ் தியானத்தில் அமர்ந்தார்-துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி..!
by Askar
written by Askar
திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி,இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என தான் பயந்தேன். ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு மாற்றம் வரும், என்று பேசினார்.
மேலும், மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது இறுதிக்கட்டம் அல்ல. சரத்பவார் என்ன நினைக்கிறார் என்று சிவசேனா கட்சிக்கு கூட தெரியாது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சி அமைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோத்தபாய ராஜபக்சே வருகைக்கு எதிராக டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ அறிவிப்பு.!
by Askar
written by Askar
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 28-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அறிவிப்பு.!
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு இரக்கம் அற்ற கோத்தபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கின்றார்,
முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே இராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார்.
காணாமல் போனோர் கதி என்ன?
தமிழ் ஈழம் சிங்களர்களின் இராணுவக் கூடாரம் ஆகி விட்டது, காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன? என்ற வேதனை நம்மை வாட்டுகின்றது.
சாஞ்சியில் போராட்டம்
இந்தியாவில் எட்டுக் கோடித் தமிழர்கள் வாழ்கின்றோம். அதைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்தியாவின் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கோத்தபய இராஜபக்சேவுக்கு வாழ்த்தும் சொல்லி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருக என அழைப்பும் விடுத்து இருக்கின்றது. மகிந்த இராஜபக்சே சாஞ்சிக்கு வந்தபோது, 1500 கிலோ மீட்டர் கடந்து சென்று, கருப்புக்கொடி காட்டிக் கைதானோம்.
கருப்பு கொடி போராட்டம்
2014 இல், நரேந்திர மோடி பதவி ஏற்புக்கு மகிந்த இராஜபக்சே வந்தபோது, தலைநகர் தில்லியில் கருப்புக்கொடி காட்டிக் கைதானோம். நமக்கு உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. நம் நரம்புகள் மரத்துப் போய்விடவில்லை.
கோத்தபாயவுக்கு எதிராக போராட்டம்
தமிழ்ச் சாதி, நாதி அற்ற இனம் அல்ல என்பதை, உலகத்திற்குப் பிரகடனம் செய்யும் வகையில், வருகின்ற நவம்பர் 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புது தில்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம். கழகக் கண்மணிகள், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், தில்லிக்கு வாருங்கள்.
பங்கேற்க அழைப்பு
குண்டடிபட்டுக் கொத்துக்கொத்தாக மடிந்து போன ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம். கழகக் கண்மணிகள், ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இந்த அறப்போரில் பங்கேற்பதோடு, நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற அறப்போராட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தோள்கொடுத்துத் துணை நிற்கவேண்டும் என இரு கரம் கூப்பி, பணிவுடன் வேண்டுகிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யூடியூப் சேனல்கள் ‘PRESS’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவிப்பு..!
by Askar
written by Askar
யூடியூப் சேனல்கள் ‘PRESS’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு.!
யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள் PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை அமைச்சர் கர்னல் ராஜவர்த்தன்சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்து ஆர்.என்.ஐ-யில் பதிவு செய்துள்ள பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள், ஆல் இந்தியா ரேடியோ செய்தி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்களாக அங்கீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் பணிபுரிவர்கள் செய்தியாளராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றம் எனவும்,போலியாக செயல்படுவோர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்திக்கு அரசியல் உண்டு, அழகியல் உண்டா? ஆம் உண்டு என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குமரேசன்..!
by Askar
written by Askar
செய்திக்கு அரசியல் உண்டு, அழகியல் உண்டா? ஆம் உண்டு.
செய்தி ஆக்கத்தைக் “கதை செய்தல்” என்றே ஊடகவியலில் குறிப்பிடுகிறோம். கதை என்றால் அது படிக்கவோ பார்க்கவோ கேட்கவோ சுவையாக இருக்க வேண்டும்.
செய்தி சுவையாக இருக்க வேண்டும் என்றால், ஒரு சோகமான செய்தியில் சுவையை எதிர்பார்க்கலாமா? ஒரு புரட்சிகரமான போராட்டச் செய்தி சுவையாக இருக்குமா?
சுவை என்றால் இங்கே அந்த உணர்வு ஏற்படுத்தப்படுவது என்றே பொருள். சோகமான நிகழ்வு பற்றிய செய்தியைப் படிக்கிறவர்களுக்கு அந்தத் துயர உணர்வு தொற்றிக்கொள்ள வேண்டும். போராட்டச் செய்தியைப் படிக்கிறவர்களுக்கு அந்தப் புரட்சிகர உணர்வு தூண்டப்பட வேண்டும்.
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், வாழ்க்கையின் அவலத்தைச் சொல்கிற ஒரு கவிதை அந்த அவலம் பற்றிய சிந்தனையோடு, கவிதையை வாசிக்கிற கவித்துவமான பரவச உணர்வைத் தர வேண்டுமல்லவா? எழுச்சிகரமான ஒரு கதையைச் சித்தரிக்கிற சினிமா அறுவையாக இருந்தால் ரசிப்போமா? அதுபோலத்தான் செய்தியாக்கமும்.
சமுதாயத்தின் பிற்போக்குத் தனத்தை அப்படியே தக்க வைக்க வேண்டும் என எழுதுகிறவர்கள் சுவைபட எழுதுகிற கலையைக் கற்றிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களது எழுத்தை ஏராளமானோர் விரும்பிப் படிக்கிறார்கள் – யாரைத் தாக்குகிறார்களோ அவர்கள் உட்பட! அப்படியானால், சமுதாயத்தின் முற்போக்கான மாற்றங்களுக்காக எழுதப் புறப்பட்டவர்கள் அந்தக் கலையைக் கற்க வேண்டாமா? இயக்கம் சார்ந்த ஊடகவியலாளர்களுக்கு அது வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை மட்டும் அல்ல, நிறைவேற்ற வேண்டிய கடமையும் கூட.
அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் கோரி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்..!
by Askar
written by Askar
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி மாலத்தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், சாக்கடை ,பொது கழிப்பறை, சுகாதார வசதிகள் மற்றும் மயானவசதி இல்லை எனவும்.
மேலும் 100 நாள் வேலைக்கான அட்டை வழங்காமல் தங்களது பகுதி பொதுமக்களை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் சாக்கடை வசதிகள் இன்றி தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதிகமான கொசுக்கள் உற்பத்தியாகி இரவு பகல் பாராமல் கொசுக்கள் கடிப்பப்பதால் இப்பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மயான வசதிகள் இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் அடக்கம் செய்யப்பட்டு வருவதால் தனியாக மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கூறி கோரிக்கை மனுவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனாலும் இதேபோன்று பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அடிப்படை வசதிகள் செய்து தர மனுக்கள் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் கலைந்து செல்ல மறுத்து பொதுமக்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம்,அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விழிப்புணர்வு, முகாம்..!
by Askar
written by Askar
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் இழப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தின் சார்பில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் அதனால் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிரச்சனைகள் காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள சட்ட சிக்கல் இன்றைய நடைமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர், இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தங்களுடன் பணிபுரியும் நண்பர்கள் என அனைவரிடமும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி தலைக்கவசம் அணிந்து செல்ல கட்டாயப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினர்.
எனவே கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம் விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தபட்டது.
கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், இரு சக்கர வாகனஓட்டிகள், வாகஓட்டிகள் பொதுமக்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்திற்கு துணை ஆய்வாளர் பாலமுத்தையா தலைமை தாங்கினார் மேலும் காவலர்கள் சரவணன், சக்திவேல், முருகன் மற்றும் கூட்டத்தின் முடிவில் காவலர் முனியாண்டி நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகரில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரையின் முக்கிய பிரதான சாலையான சர்வேயர் காலனி முதல் அய்யர்பங்களா வரை சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக இருக்கும் பழமையான 50க்கு மேற்பட்ட மரங்கள் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் உயர்மட்ட மேம்பால பணிகள் நடை பெற்றாலும்..மரங்களை வெட்டி சாய்க்காமல் அதனை வேருடன் பிடுங்கி வேறு இடங்களுக்கு நட்டால் அந்த மரம் உயிர் பெறும் அப்படி ஒரு செயலை நெடுஞ்சாலைத்துறையினர் செய்யாமல் பழமையான மரம் என்று கூட பாராமல் 50க்கும் மேற்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது இது சமூக ஆர்வலர்களிடையே வேதனை அளிக்கிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்தில் சிறுவன் பலி. 13 பேர் படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி. மதுரை கப்பலூர் பகுதியை சேர்ந்த செக்கானூரணியில் உள்ள திருமண விழாவிற்கு சென்றுவர திரும்பும்பொழுது திருமங்கலம் அடுத்த கரடிக்கல் செட்டிகுளம் விலக்கு அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் நிகழ்விடத்திலேயே பலியானான். மேலும் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் 108 வாகனம் மூலமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாதாரணமாக அரவாணிகள் பஸ்கள் – ரயில்களில் பயணிகளிடம் பணம் வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். ஆனால் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடந்த திருமணத்தில் அரவாணிகள் கும்பல் நுழைந்து கட்டாய வசூலில் ஈடுபட்டது. திருமண வீட்டிற்கு வந்தவர்களை முகம் சுளிக்குமளவு நடந்து கொண்டனர். பணம் வசூல் செய்வதற்காக வந்தவர்கள் திருமண வீட்டாரிடம் தாலி கட்டும் நேரத்தில் மேடையில் நுழைந்து கைகளை தட்டி அதிக அளவு வசூல் பணம் கேட்க அவர்கள் முறைக்க கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க துவங்கி விட்டனர். பின்னர் ஒரு வழியாக திருமண விழாவிற்கு வந்த இளைஞர்கள் பேசி சமாதானப்படுத்தி பணத்தை அன்பளிப்பாக வழங்கி அரவாணிகளை அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தின் முதல் குறை தீர்ப்பு கூட்டம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
by mohan
written by mohan
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன் படி, தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 25 ஆம் தேதி திங்கள் காலை 11 மணிக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.மேலும், குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனு மூலம் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் குடிநீருக்காக அரசு சார்பில் அமைக்கபட்டுள்ள போர்வெல் ஆழ்துளை கிணறை மூட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜோதிமாணிக்கம் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2லட்சம் மதீப்பீட்டில் போர்வெல் மூலம் 500அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் ஜோதிமாணிக்கம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அந்த ஆழ்துளை கிணற்றில் நீர் இல்லாமல் வறன்டு போன நிலையில் ஆழ்துளை கிணறு செயல்படாமல் கேட்பாடற்று போயின.
காலப்போக்கில் அதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உயிர்பலி ஏற்படும் முன் இந்த ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி மணப்பாறை கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் மூலம் உபயோகமில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டுமென அனைத்து மாவட்ட ஆடசியர்களும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம். விவசாயிகள் மகிழ்ச்சி
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பருத்தி அதிகம் பயிரிட்டுள்ளனர். மேலும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களான கணவாய்பட்டி, சேடபட்டி, பெருங்காமநல்லூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பெரும்பாலான விவசாயிகள் பருத்தியை மிகுந்த ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக இந்த பகுதிகளில் பருத்தி நல்ல விளைச்சலை கண்டுள்ளது. மேலும் 1பருத்தி செடிக்கு 20காய்க்கு மேல் விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் தற்போது மழை காலம் என்பதால் பருத்தி காய்கள் அனைத்தும் வெயில் அடிக்க தொடங்கினால் தான் பருத்தி வெடித்து சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இந்நிலை நீடித்தால் ஒரு மாதம் கழித்து பருத்தி எடுக்கும் போது அமோக விளைச்சல் வரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.மேலும் கடந்த வருடம் பருத்தி 1கிலோ 25ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் பருத்தி சாகுபடி செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பருத்திக்கு போதிய கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உங்களுடைய எதிர்கால கனவுகளை நோக்கியே உங்கள் சிந்தனைகள் இருக்கவேண்டுமே தவிர ஆபத்தை விளைவிக்கும் செல்ஃபியை நோக்கி அல்ல…செல்ஃபி எனும் அற்ப சந்தோசத்திற்கு ஆசைப்பட்டு உங்களது அன்றாட வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்…தன்னிலை மறந்து செல்ஃபி எடுத்து மகிழாமல் தன் குடும்பம் தனக்கு பின்னால் தனிமைப்படுத்தப்படும் என்பதை உணர்ந்து பாதுகாப்பாக இருங்கள்…
செல்போனில் செல்ஃபி எடுப்பதால் ஏற்படும் அபாயம் மற்றும் ஆபத்துக்ளை ஒரு நிமிடம் சிந்தித்து கவனமாக செயல்படுங்கள்…செல்ஃபி எனும் எமனை துரத்தி துரத்தி அழைக்காதீர்கள்…உங்களுடைய செல்ஃபி ‘செம்ம” என்று மற்றவர்கள் உங்களை புகழும் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு செல்ஃபி
எடுத்து மகிழாதீர்கள் அதன் பின் விளைவுகள் விபரீதத்தில் முடிந்துவிடும்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நகர் பகுதியான காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.அதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளளும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இராமநாதபுரம் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அப்பகுதிகளில் நகராட்சியின் சார்பாக குப்பைத்தொட்டி எதுவும் வைக்காப்படாததால் தெருக்களில் குப்பைகள் குவியும் அவலநிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இராமநாதபுரம் நகராட்சி பொது மக்களின் நலன் கருதி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வாரசந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர்.!
by Askar
written by Askar
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வாரசந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர்.!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் காய்கறி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கூடமாக (சந்தை) ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளில் நடைபெற்று வருகிறது. இங்கு வீட்டு உபயோக உணவு தானியம் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் ஐந்து நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், அந்த சந்தையின் வாசல் வழி மிகவும் குறிகியதாக சுமார் 10 அடி மட்டுமே! உள்ளது. இதில் பாதையை மறித்து இருபக்கமும் வியாபாரிகள் கடைபோட்டு இருப்பதால் ஆண் பெண் பாகுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் இடித்துக் கொண்டு சென்று வரக்கூடிய நிலை நீண்டகாலமாக தொடர்கிறது. இந்த நெருங்கிய வாயிற்படியை பயன்படுத்தி திருடர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் மற்றும் செல்போன்களை திருடிச்செல்லும் நிலையும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வாரசந்தையை பராமரிப்பு செய்து செய்து வரும் உரிமையாளர் பொதுமக்கள் சந்தைக்குள் சென்று வர ஏதுவாக வாயிற்படியை அகலப்படுத்துவதோடு மேடுபள்ளமாகவும் சேறும் சகதியுமாகவும் கிடப்பதை சீர்படுத்திட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றி இறக்கும் சாக்கில் தங்களுடைய ஆட்டோக்களை சாலையின் இருபகுதியிலும் நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அந்த வழியாக நெடுந்தூரம் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை (22/11/19 இன்று) இருந்தபோது தகவலறிந்து வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்தின் உடனடியாக தலையிட்டு ஆட்டோக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்.
You must be logged in to post a comment.