மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொருளாதார குற்ற விழிப்புணர்வு நிகழ்வு..
திண்டுக்கல்லில் இன்று(18/05/2019) வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் கவிதா சார்பு ஆய்வாளர்கள் பாலு சுப்பிரமணி, சேகர், தண்டபாணி மற்றும் காவலர்கள் ஏலச்சீட்டு, பண்டு மற்றும் அனுமதி பெறாத முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் அருகில், திருவள்ளூர் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆற்காடு அருகே கணவன் மற்றும் குழந்தையை கொன்ற பெண்…. போலீசார் கைது செய்தனர் ….
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கணவன் மற்றும் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேறு தொடர்பில் இருந்ததாகவும் தகவல் உள்ளது, ஆகையால் மனைவி கொன்றதாகவும், இன்னொரு கோணத்தில் கணவனின் கள்ள காதலில் ஆத்திரம் கொண்டு இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கள்ள உறவுகளினால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகமாகி வருவதுதான் யதார்த்தம்.
இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்ததாஜ்பூரா பகுதியை சேர்ந்த ராஜா (24) அதே பகுதியை சேர்ந்த மாற்று ஜாதியை சேர்ந்த தீபிகா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு பிரனீஷ் (1) என்ற குழந்தை உள்ளது. ராஜா எலக்டீசியன் வேலை செய்து வருகின்றார். இவருக்கு குடிபழக்கமும் உண்டு. ராஜாவின் நண்பர் இதே ஊரே சேர்ந்த ஜெயராஜ் என்பவனிடம் தீபிகா கள்ளக் காதல் இருந்தது. இதை ராஜா கண்டித்து உள்ளார். இதனால் கணவனை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறாள்.
சம்பவத்தன்று இரவு கணவன் குடித்துவிட்டு தூங்கி கொண்டு இருக்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளாள். அருகில் தூங்கி கொண்பிருந்த பிரனீஷையும் கழுத்தை நெறித்து கொன்று அருகில் உள்ள ஏரியில் தனது கள்ளக் காதலன் ஜெயராஜ் துணையுடன் புதைத்து உள்ளார். பிறகு இருவரையும் காணவில்லை என்று நாடகம் ஆடி உள்ளாள். ராஜாவின் அக்கா லட்சுமி ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து தீபிகாவை கைது செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கள்ளக் காதலன் ஜெயராஜை போலீசார் தீவிர விசாரணை வளையத்தில் கொண்டு வந்து உள்ளனர்.
2 பேரின் சடலத்தை ஆற்காடு தாசில்தார் வச்சலா ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி கீழப்புதூரில் கடந்த 3 மாதமாக பழுதடைந்துள்ள குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் 16வது வார்டில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதமாக அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார்கள் பழுதடைந்துள்து. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் சிரம்மப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆனையாளரிடம் குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார்களை சரி செய்ய வேண்டுமென மனு அளித்து வந்தனர். ஆனால் 3 மாதங்களாகியும் இதுவரை சரி செய்யாமல் இருப்பதால் குடிநீர் இல்லாமலேயே உப்பு தண்ணீரையே குடித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனே நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டார்களை விரைவில் சரி செய்து குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முருகப் பெருமானின் அவதார நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் வைகாசி விசாகத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்திருவிழா நடைப்பெற்றது.
திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருநாளில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி, மற்றும் பறவை காவடி எடுத்து முருகப் பெருமானை வழிபட்டனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான விசாக திருவிழாவின் தொடக்கமாக 9ஆம் தேதி வசந்த உற்சவம் தொடங்கியது. கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். அங்கு நீர்நிலையில் அமர்ந்து சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் 17ஆம்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கடந்த 18ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழை நீயூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ரயில் நிலையத்தில் முன் இருந்த மீன் சிலை சில காலமாக யார் கண்ணிலும் படுவதில்லை. மதுரையில் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக பல்வேறு அடையாளங்கள் உண்டு. அதில் மதுரை ரயில் நிலையம் முன் இருந்த பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தை குறிக்கும் மீன் சின்னம். இது பல வருடங்களாக மதுரை ரயில் நிலையம் முன் இருந்தது.
ஆனால் திடீர் என ஸ்மார்ட் சிட்டி மாற்றம் என்ற பெயரில் உலோகத்திலான ஆன அந்த மீன் சின்னம் இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை. இது பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் நோக்கில் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவருக்கு சொந்தமான 46 கால்நடை ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார் நேற்று இரவு இடிதாக்கி 10 குட்டி ஆடுகளும் 26 ஆடுகளும் உயிரிழந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு பேருந்து, தனியார் வாகன ஓட்டுனர்கள் சச்சரவால் ஸ்தம்பித்த வைகை அணை சந்திப்பு..
பெரியகுளத்தில் வைகை அணை சந்திப்பில் சிக்னல் அருகே கார் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் அரசி அதிகாரிகள் யாரும் சீர் செய்ய முன் வரவில்லை என்பதால் பஸ் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி விட்டார்கள். இதன் இடையில் 108 ஆம்புலன்ஸ் வண்டி இடையில் சிக்கி கொண்டதால் நோயாளிகளும் அவதிக்குள்ளானார்கள்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழை வேண்டி.. நோய் நொடியில்லாமல் வாழ.. பெண்கள் விளக்கு பூஜை பிரார்த்தனை..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப் பநாயக்கனூரில் சந்தன மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் மழை வேண்டியும் நோய் நொடியில்லாமல் அனைவரும் நலம் பெறவும், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் குடும்பத்தில் செல்வம் பெருகவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை பிரார்த்தனை நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் பெருகி வரும் பெண்கள் அழகு நிலையம்… போலிகள் ஜாக்கிரதை…
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தங்களது அழகில் அக்கறை காட்ட கூடியவர்கள். தங்களது அழகை மேம்படுத்த அழகு நிலையங்களுக்கு சென்று பேசியல் மற்றும் ப்ளீச்சிங் போன்றவைகளை செய்து தங்களது முகத்துக்கு அழகூட்டுவர். சில பெண்கள் தங்களது உறவினர்கள், காதலர்கள், கணவர்களிடம் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முகத்தை அழகாக்குவர். பெண்களின் இந்த மோகத்தால் போலி அழகு நிலையங்கள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரப் பகுதியில் நாளுக்கு நாள் கடல் அலையைப் போல் பெருக்கெடுத்து பெண்கள் அழகு நிலையங்களை நோக்கி வருகின்றன. உசிலம்பட்டி நகரப் பகுதியைப் பொறுத்தவரை ஆண்கள் அழகு நிலையங்களை விட அழகு நிலையங்கள் மிகவும் அதிகம். உசிலம்பட்டி பகுதியில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அழகு நிலையங்கள் உள்ளன. இந்த அழகு நிலையங்களை நடத்துபவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் அதற்கான டிப்ளமோ படிப்பை முறையாக முடித்துவிட்டு சான்றிதழ் வைத்து அதிகாரிகளிடம் அதற்கான உரிமமும் பெற்று, அழகு நிலையங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் சில அழகு நிலையங்களை நடத்துபவர்கள் நாங்கள் வெளிநாட்டில் அழகு கலை படித்துள்ளோம்,. சான்றிதழ் பெற்றுள்ளோம் என பொய்யான தகவலை வைத்து அழகு நிலையங்களை நடத்தி பொதுமக்களையும், பெண்களையும் ஏமாற்றி வருகின்றனர். இதில் சில அழகு நிலையங்களை நடத்தி வருபவர்கள் அனுபவம் இல்லாமல் பணத்தை மட்டுமே வைத்து பியூட்டி பார்லர்களுக்கு தேவையான உபகரணங்கள், பேசியல் கீரிம்கள் போன்றவைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு பேசியல் செய்து பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் செய்து கொள்ளும் பேசியல்களின் வகைகள் விலை ஒவ்வொன்றிற்கும் ரூ500 முதல் 2000ரூ வரை வசூல் செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் முகத்திற்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆகவே பொதுமக்களும் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உண்மை எது, போலி எது என்று அறிந்து கொள்வது மிக அவசியம். ஆகவே அரசு அதிகாரிகளும் இவ்விசயத்தில் தலையிட்டு சரியான முறையில் பியூட்டி பார்லர்கள் நடத்தி வருகிறார்களா என அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
TARATDAC-யின் மாற்றுத் திறனாளிகளுக்கான போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அமைப்பாளர்கள் அறிவிப்பு..
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர்க்குழுவின் சார்பில் கடந்த 16.07.18 அன்று பழனி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கட்டண கழிப்பறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும்,
அந்தந்த கழிப்பறைகளின் முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் என்கிற வாசகங்களை தாங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பழனி நகராட்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் TARATDAC நடத்தியது.
போராட்டத்தின் விளைவாக தற்போது பழனி நகராட்சி ஆணையாளர் அவர்கள் பழனி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கழிப்பறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றும், இலவச அறிவிப்பை அனைத்து நகராட்சி கட்டண கழிப்பறைகளின் முன்பாகவும் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு அதற்க்கான கடிதத்தின் நகலை சங்கத்திற்கு கொடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அனைத்து கழிப்பறைகளிலும் இலவச அனுமதி ஆணை வழங்கிய பழனி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S. மாலதி – நகர தலைவர் P.தங்கவேல் – நகர செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரக்கோணத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக நேற்று இரவு பெண் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர். சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கல்யாணி மற்றும் அரக்கோணம் போலீசார் நேற்று இரவு திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக உறுதியளித்தனர். இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.
திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருவீட்டார் உறவினர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி எதிரொலி-நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம்..
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பேட்டை வழியாக திருநெல்வேலி காட்சி மண்டபம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் காட்சி மண்டபம் முதல் கல்லணை பள்ளி, அருணகிரி திரையரங்கு வழியாக திருநெல்வேலி நகரில் உள்ள ஆர்ச் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து திருநெல்வேலி மாநகரில் 16.05.19 வியாழக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல், கடையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை நெல்லையப்பர் கோயில், வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம் வழியாக செல்லும். அதேநேரத்தில் தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வண்ணார் பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்லும்.
போக்குவரத்து மாற்றம் தொடர்பாக வண்ணார்பேட்டை, திருநெல்வேலி ஆர்ச் பகுதியில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தென்காசி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கண்டியப்பேரி குளம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு சாலையில் இருந்த மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கண்டியப்பேரி குளக்கரை சாலை வழியாக ஏராளமான லாரிகள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வில்லாபுரம் கற்பகம் நகரை சேர்ந்த நீலகண்டன் இவரது மனைவி மகேஸ்வரி வயது55 ஆகியோர் இன்று (17/05/2019) காலை சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்குள் கோவில் வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் போலீஸ் உதவியுடன் மகேஸ்வரியின் உடல் வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தினசரி சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் மீனாட்சி அம்மன் கோவிலில் முதலுதவியும் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் உடனடியாக கிடைக்காதது மிகவும் வேதனையானது என பக்தர்கள் தெரிவித்தனர். முதலுதவி அளித்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆலங்குளத்தில் ஜவுளி எடுக்க வந்த பெண்ணை கேலி செய்த வாலிபருக்கு அடி உதை-பரபரப்பு.. காணொளி..
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அம்பை பிரதானசாலையில் ஜவுளிகடை உள்ளது. ஜவுளிகடைக்கு ஜவுளி எடுக்க வந்த பெண்ணை அருகில் இருந்த வாலிபர் கேலி செய்துள்ளார். ஜவுளி எடுக்க வந்த அப்பெண்ணின் குடும்பத்தினர்கள் பெண்கள் உட்பட 10 பேர் கேலி செய்த வாலிபரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினர்கள் இந்த சம்வத்தை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி நிருபரை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளதாக தெரிகிறது.இது குறித்து ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் காரணமாக சிறிது நேரம் (15- நிமிடம்) அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் நிலையத்திலிருந்து வந்த அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக சென்றதால் தனது கட்டுப்பாட்டை இழந்து நாட்டாமங்கலம் பேருந்து நிறுத்ததில் மோதியது. இதில் வழக்கமாக பயணிகள் அந்த பேருந்து நிறுத்தில் நின்றுகொண்டிருப்பார்கள் அச்சமயம் பயணிகள் சென்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
இது போன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேமாக சென்று விபத்து ஏற்படுத்தும் தனியார் பேருந்து நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக சரவணன் பணியாற்றி வருகின்றார். ஒரு முனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற ரூ 2,350 லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். அரசு கட்டணம் ரூ 7250 ஐ விட கூடுதலாக பணம் வாங்கிய ஆய்வாளர் சரவணன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப் பட்டார்.
இவர் வாலாஜா அடுத்த அனந்தலையை சேர்ந்த பாலாஜி (26) கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தரமற்ற ஒப்பந்தகாரர்கள் பணி.. கண்டுகொள்ளாத கீழக்கரை நகராட்சி..உயிரை பலிவாங்க காத்திருக்கும் சாக்கடை வாருகால்..
தாயில்லா பிள்ளை போல், நிரந்த ஆணையர் இல்லாமல் கவனப்பாரற்று சீர் குலைந்தே கிடக்கிறது கீழக்கரை நகராட்சி நிர்வாகம். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் வாய்ப்பு கிடைத்தவர்கள் சுருட்டுவதற்கு நேரத்தை எதிர்பார்த்து இருப்பது போல்தான் உள்ளது நகராட்சியின் செயல்பாடு.
கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்தும், பொதுமக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் வகையில் திறந்தும் கிடந்த வண்ணம்தான் உள்ளது. சமீபத்தில் கீழக்கரையின் அவல நிலையை விளக்கி பல்வேறு சமூக அமைப்புகள் பிரசுரம் வெளியிட்டனர். பின்னர் அதை தொடர்ந்து அவசர கதியில் சில இடங்களில் சீர்கேடு சரி செய்யப்பட்டது. ஆனால் இரண்டு வாரங்கள் கூட தாங்கவில்லை. உதாரணமாக வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள பைத்துல்மால் அருகே இருந்த வாருகால் மூடி சில வாரங்களுக்கு முன்பு சரி செய்யப்பட்டது, ஆனால் மீண்டும் இடிந்து விட்டது, இது போன்ற தரமற்ற பணிகளுக்கு யார் காரணம், பணி வழங்கிய பின் ஓப்பந்தகாரர்கள் செய்யும் பணியை முறையாக நகராட்சி அதிகாரிகள் கண்கானிக்காததே காரணம். இதனால் பொதுமக்கள் வரி பணமே விரயமாகிறது. மக்களிடம் முறையில்லாமல் வரி வசூல் செய்ய முற்படும் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தரமான சேவையும் செய்ய முன் வர வேண்டும்.
அதே போல் வடக்குத் தெரு பகுதியில் பல் வேறு இடங்களில் முக்கியமாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வாருகால் மூடிகள் திறந்த வண்ணம் கிடக்கிறது. ஏற்கனவே பல முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் கால்களை பதம் பார்த்துவிட்டது, ஆனால் உயிர் பறிபோனால் தான் நகராட்சி நடவடிக்கை எடுக்கும் என தோன்றுகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம்:-
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (16-05-2019) இரவு மதுரை நகர் அவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் சிந்து வரும் ஆட்டோ டிரைவரான சரவணன் அவருடைய மனைவி அர்ச்சனா தேவியை மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து அரிவாளாள் வெட்டி கொலை செய்து உள்ளார்.
இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீச்சலில் சாதனை புரிந்த மாணவனுக்கு வில் மெடல்ஸ் உலக சாதனையாளர் பட்டம்…
தமிழகத்தின் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் ஜெய் ஜஸ்வந்த். 10 வயதாகும் இச்சிறுவன் ஜஸ்வந்த் இதுவரை பல்வேறு நீச்சல் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றுள்ளார்.
இந்த சிறுவன் கடந்த 28.3.2019 அன்று தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையை 10 மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
1994 ஆம் ஆண்டு குற்றாலீசுவரன் நீச்சலில் புரிந்த உலக சாதனையை இந்த சிறுவனின் இந்த புதிய சாதனையானது முறியடித்துள்ளது. இந்த சிறுவனின் இந்த புதிய உலக சாதனையானது வில் உலக சாதனை ஆய்வு மையத்தால் அங்கீகரிக்கப்பட்டுஅந்தச் சிறுவனுக்கு வில் மெடல்ஸ் உலக சாதனையாளர் பட்டமானது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கீழை நியூஸ் தளத்தில் வெளியிட்ட செய்தி:-
http://keelainews.com/2019/03/28/achievement-3/
You must be logged in to post a comment.