Home செய்திகள் காட்பாடி அருகே கொத்தடிமைகள் மீட்பு..

காட்பாடி அருகே கொத்தடிமைகள் மீட்பு..

by ஆசிரியர்

காட்பாடி தாலுகா மாதாண்டகுப்பத்தில் உள்ள அரிசி ஆலையில் 15 கொத்தடிமைகள் மீட்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மாதாண்டகுப்பத்தில் பசுபதிக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த நெல் அரிசி ஆலையில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகள் வேலை செய்வதாக உதவி ஆட்சியர் மெக ராஜுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக வருவாய் துறை மற்றும் காவல்துறையினருடன் விரைந்த உதவி ஆட்சியர் ஆலையில் இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 கொத்தடிமை தொழிலாளிகளை அதிரடியாக மீட்டனர். பொன்னை காவல்துறை பசுபதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!