மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி.இக்கல்லூரியில் சுமார் 3ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இக்கல்லூரியில் கடந்த நவம்பரில் அரசு உதவிபெரும் பாடப்பிரிவில் பயிலும் மாணவ மாணவியரிடம் அரசு விதிகளின்படி தேர்வுக்கட்டணம் ரூ300 மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்ற விதிமுறை உள்ளதாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ6250 வசூல் செய்யப்;பட்டதாவும் இந்த மோசடி குறித்து அரசுக்கல்லூரி இணை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் குழு அமைத்து கல்லூரியில் விசாரணை நடத்தியதில் கல்லூரி முதல்வர் ரவி தேர்வுக்கட்டணம் வங்கியில் செலுத்தாமல் ரூ1 கோடியே 28லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
தற்போது அரசின் கட்டுப்பாட்டில் கல்லூரி உள்ள நிலையில் கல்லூரி முதல்வர் மாணவமாணவியரிடம் வசூல் செய்த பணத்தை இதுவரை கல்லூரி மாணவர்களுக்கு திரும்ப வழங்கவில்லை.இதனைக் கண்டித்தும் கையாடல் செய்த கல்லூரி முதல்வர் ரவியை கைது செய்ய வலியுறுத்தியும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் முதல்வா் ரவி மாணவிகளிடம் பாலியியல் தொந்தரவில் ஈடுபடுபதாக புகாா் தொிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.