Home செய்திகள்கீழக்கரை செய்திகள் குரங்குக்கு பழம் கொடுத்து பசியாற்றிய பால்வளத்துறை அமைச்சர்…

குரங்குக்கு பழம் கொடுத்து பசியாற்றிய பால்வளத்துறை அமைச்சர்…

by ஆசிரியர்

இராஜபாளையம் அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்பு பசியால் வாடிய குரங்குக்கு பழம் கொடுத்து பசியாற்றிய பால்வளத்துறை அமைச்சர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார் கோவில் அய்யனார் கோவில் பகுதியில் பழங்குடி இன மக்கள் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் இல்லாமல் பசியால் வாடி வரும் இவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரிசி பலசரக்கு பொருட்கள் மற்றும் போர்வை ( பெட் சீட்) போன்றவைகளை வழங்கினார். அதன்பின்பு இராஜபாளையம் அய்யனார் கோவில் வனப்பகுதியில் சுற்றுலாத்தலமாக திகழ்வதால் 144 தடை உத்தரவை அடுத்து சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வராததால் இப்பகுதியில் வாழக்கூடிய குரங்குகள் பசியால் வாடி வருகின்றன கொரோனா வைரஸ் குரங்குகளையும் பசியால் வாட வைத்துவிட்டது.

பசியால் வாடிய குரங்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாழைபழங்கள் கொடுத்து குரங்குகளுடையை பசியாற்றினார் குரங்குகளுக்கு வாழைப்பழத்தை கொடுத்து மகிழ்ந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!