இராமநாதபுரம், நவ.8- இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
பட்டயத்தலைவர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். தலைவர் ரம்யா தினேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயிருக்கு போராடிய பலருக்கு உரிய நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றிய டாக்டர் எம்.ஜவஹர் பாரூக், சிறந்த கல்விப்பணி ஆற்றிய கணித ஆசிரியர் எம்.சீனிவாசகன் (ஓய்வு), ஓவிய ஆசிரியர் ஜி.வேல்முருகன், விழாக்கள், விஷேசங்களில் சிறந்த இன்முக சேவை புரிந்த ராமநாதபுரம் வைசிராய் ரெசிடன்சி, தமிழர்களின் பராம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகம், தற்காப்பு கலையான சிலம்பம் உள்ளிட்ட கலைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இலவச பயிற்சி அளித்து வரும் கிராமியக்கலை தலைமை பயிற்றுநர் சிலம்பொலி எம்.லோக சுப்ரமணியன், என்.சத்யபாமா, எம்.மீனாள், எம்.ரெத்தினம் உள்ளிட்டோருக்கு சிறந்த நுண்புலன் விருதுகளை ரோட்டரி ஆளுநர் ஆர்.முத்தையா பிள்ளை வழங்கினார். ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் ஏ. ஆறுமுக பெருமாள், உதவி கவர்னர் ஜி.டி.அருள் பிரசாத்,
ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.அண்ணாதுரை, செயலாளர் கே.பாலாஜி, தொழில் சேவை பிரிவு இயக்குநர் ஆர்விஎஸ் பார்த்தசாரதி, தொழில் விருதுகள் பிரிவு தலைவர் கே.முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
November 8, 2023
ராமநாதபுரம், நவ.7- கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.
கடந்த அக்.30 தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இயலாததால் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு இன்று (நவ.7) மாலை அணிவித்து தரிசனம் செய்தார், தேவர் வீட்டில் உள்ள பூஜை அறையில் தியானம் செய்து, தேவரின் இளமைப்பருவம் உள்ளிட்ட புகைப்படங்களை பார்வையிட்டார், தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார் பழனி, தங்கவேலு, ஆகியோர் வரவேற்றனர். ஓபிஎஸ் அணி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் மதுரை ராஜ்மோகன், முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மூக்கையா, ஒன்றிய செயலாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராமலிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
8,650 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்: டிரைவர் உள்பட 2 பேர் கைது..
இராமநாதபுரம், நவ.7-
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் வழிகாட்டுதலின்படி விருதுநகர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனுராதா, ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சார்பு ஆய்வாளர் சிவஞான பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தேவேந்திரன் ஆகியோர் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகே இன்று வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் (மேற்கு) பதிவெண் லாரி, அதை தொடர்ந்து வந்த மதுரை (தெற்கு) பதிவெண் காரை சோதனை செய்தனர். லாரியில் தலா 50 கிலோ வீதம் 173 மூடைகளில் 8,650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த லாரி டிரைவர் தெய்வேந்திரன் 42, சிவகங்கை நேதாஜி மகன் சரவணன் 24 ஆகியோரை கைது செய்தனர். காரை ஓட்டி வந்து தப்பி ஓடிய முத்துப்பாண்டி, அரிசி வியாபாரி கேணிக்கரை சேர்ந்த நிஷா என்பவரை போலீசார் தேடி வந்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனைவியின் பிறந்த நாள் அன்று மதுரையில் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம்..
மதுரை மாநகர் நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி பகுதியில் உள்ள பூமி உருண்டை தெருவில் வசித்தவருபவர் காளிமுத்து (42) இவர் கார்ப்பென்டராக பணிபுரிந்துவருகிறார். இவர் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து மரவேலைகளை பார்த்துவருகிறார். இவர் தனது மனைவி ஜாக்லின் ராணி (36) மகள் மதுமிதா (12) ஆகியோருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் இன்று காளிமுத்துவின் மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காளிமுத்து வாட்ஸ்அப் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்டேடஸ் வைத்துள்ளார்.
இதையடுத்து காளிமுத்து கூடல்நகர் ரயில்வே நிலையத்திற்கு சென்று வாட்ஸ்அப்பில் விடை பெறுகிறேன் என ஸ்டேடஸ் வைத்து விட்டு அங்கு தண்டவாளத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதனிடையே மதியம் 2 மணிக்கு மேல் காளிமுத்துவின் மனைவிக்கு அவர்களது உறவினர் போன் செய்த நிலையில் அவர் எடுக்கவில்லை இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் வீட்டுகதவை தட்டியுள்ளனர்.
அப்போது வீடு உள்பக்கத்தில் பூட்டப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது காளிமுத்துவின் மனைவி ஜாக்குலினும் மகள் மதுமிதாவும் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர்.
இதனையடுத்து செல்லூர் காவல்நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மனைவியின் பிறந்தநாளில் மனைவி மகளுடன் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய சில மணி நேரத்தில் 3 பேரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். காளிமுத்துவின் உடலை கூடல்புதூர் காவல்துறையினர் கூடல்நகர் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.