பி.சி.சி.ஐ.தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு.கங்குலியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கே.எம்.வாரியார்
பி.சி.சி.ஐ.தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு.கங்குலியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கே.எம்.வாரியார்
மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன். வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அப்போது, கடற்கரையில் குப்பைகளை மோடி சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள மோடி, மாமல்லபுரத்தில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டேன். இது 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, கடற்கரையில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாகவும் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்வோம். நாம் ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதி செய்வோம் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை ஒட்டி கடந்த ஒரு வாரமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இரு தலைவர்கள் வருகையை ஒட்டி கடற்கரையை சுத்தமாகவே வைத்திருந்தனர். அப்படி இருக்க எந்த குப்பையை பிரதமர் சுத்தம் செய்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:-இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.மாமல்லபுரத்தை என் வாழ்க்கையில் இனி ஒரு நாளும் மறக்க முடியாது. பல இனிமையான நினைவுகளை மாமல்லபுரம் பயணம் எனக்கு தந்துள்ளது. என்னை போன்றே சீன அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம் மறக்க முடியாதபடி இருக்கும் என்று கருதுகிறேன்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்து விட்டது. என்னுடன் வந்த அதிகாரிகளும் இதை உணர்ந்தனர். இதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேற்றும், இன்றும் மனம்விட்டு பேசினோம். அது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து இரு நாடுகளின் உறவு மேம்படபாடுபடுவோம்.நாங்கள் இருவரும் மிக ஆழமாக பேச்சு நடத்தி உள்ளோம். இந்த பேச்சு வார்த்தைகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு நிச்சயம் அமையும்.மாமல்லபுரத்தின் வருகை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமாக இது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.இவ்வாறு சீன அதிபர் ஜின்பிங் பேசினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேபாளம் புறப்பட்டார்.சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர் 2 நாட்கள் மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடத்தினர். பின்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார். அவரை தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ‘சபாநாயகர் மற்றும் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
கே.எம்.வாரியார்
சீன அதிபர் ஜி ஜிங்சாங் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மரமல்லபுரத்தில் இன்றும், நாளையும் சந்தித்து பேசயுள்ளனர். இந்நிலையில் மத்தியம் சென்னை விமான நிலையத்திற்கு முதலில் வந்த பிரதமர் மோடிக்கும் பகல் 1.55 மணிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் | முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
மோடி பிறகு ஹெலிகேப்டரில் கோவளம் புறப்பட்டு சென்றார் சீன அதிபருக்கு பல்வேறு வகையானவரவேற்பு விமான நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதேப்போல் கிண்டி ஓட்டல் வரை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் மாலையில் மாமல்லபுர சிற்பங்களை பார்த்துவிட்டு பின்பு கலைநிகழ்ச்சியை பார்க்கின்றனர். பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்யபபட்டுள்ளது. மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
கே.எம் வாரியார்
புகழ் பெற்ற சாக்ச போன்இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல் நலக்குறைவால் கர்நாடகாவில் உள்ள மங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்
கே.எம்.வாரியார்
புது டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர், இன்று 10-ம் தேதி சந்தித்து பேசினர்.
கே.எம்.வாரியார்
பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36ரஃபேல் போர் விமானங்களில் வாங்க 2016இல் ஒப்பந்தம்.அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
நன்றி : ANI Poto
கே.எம்.வாரியார்
டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்திய விமானப் படை தளபதி ராகேஷ் குமார் பதோரியா சந்தித்தார்
கே.எம்.வாரியார்
டெல்லியில் இன்று 5-ம் தேதி பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்து அவர்கள் பேசினர்.
கே.எம்.வாரியார்
உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ – டெல்லி இடையே இன்று 4-ம் தேதி தனது பயணத்தை துவங்கியது. இந்த ரயிலானது கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்தியாவில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட முதல் தேஜஸ் ரயிலை முதல்வர் யோகி ஆதித்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கே.எம்.வாரியார்
தமிழகத்தில் தற்போது நவராத்திரி விழா தொடர்ந்து 9 நாள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் வடமாநிலமான மத்திய பிரதேசம் மாநிலம் சிவனி மாவட்டம் பரஸ்காடு தாலுகாவில் நவராத்திரி விழா 9 நாளாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயன் என்பவர் மத்தியபிரதேசத்தில் உள்ள பரஸ்காடு தாலுகாவில் துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவினை இவரது தலைமையில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நவராத்திரி விழாவில் 9 நாளாக துர்க்கையம்மனுக்கு காலை மாலை என இரண்டு நேரங்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. மேலும் அந்த பகுதி பெண்கள் 108 விளக்கு வைத்து பூஜைகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து விழாவின் இறுதி நாளில் பரஸ்காடு தாலுகாவில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக துர்க்கையம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்கி காட்சி தருவதாக கூறப்படுகிறது. அதற்கு பின் அருகே உள்ள பரக்காடு அணையில் துர்க்கையம்மனுக்கு மங்கள இசை முழங்க சிறப்பு பூஜைகளுடன் கடலில் கரைத்து விடுவர். இந்த விழாவிற்காக தாலுகா முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்து காணப்பட்டது.
ராஜஸ்தான் செய்தியாளா் ராஜேஷ் கண்ண்ன்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கே, எம்.வாரியார்
இன்று (29/09/2019) மாலை ஹோட்டல் பிரசிடென்ட்டில் SDPI வழக்கறிஞர் அணி சார்பாக ” திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்களும் (UAPA, NIA), மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடும் (NRC) என்ற தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் A.ஜஹாங்கீர் பாதுஷா தலைமை வகித்ததார். இந்த கருத்தரங்கினை வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் A.சையது அப்துல் காதர், வரவேற்புரை வழங்கி துவக்க,#SDPI_கட்சி மதுரை மாவட்டத் தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
“தேசிய குடியுரிமை பதிவேட்டின் பாரபட்சங்கள் குறித்தும், சொந்த மக்களையே அகதிகளாக்கும் அதன் தன்மையைப் பற்றியும் SDPI வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் S.A.S.அலாவுதீன் கருத்துரை வழங்கினார்.
தனி நபர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையிலான கருப்புச்சட்டமானUAPA மற்றும் அதே மாநில காவல்துறையின் அதிகாரங்களையும் உரிமைகளையும் பறிக்கும் வகையில் NIA விற்கு வரம்பில்லாத அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்தங்களின் அபாயங்களை பற்றி NCHRO வின் மாநிலத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பா.மோகன் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக வழக்கறிஞர் அணி மாவட்டத் செயலாளர் A.முகமது யூசுப் நன்றியுரை வழங்கினார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்..
இலங்கையில் இருந்து தங்கம், சோப்பு, கிராம்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் மர்மப்படகுகளில் தமிழகத்திற்கு இரவு வேளைகளில் கடத்தி வரப்படுகிறது. இது போல் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படுகிறது. தகவல் மற்றும் ரகசிய கண்காணிப்பு படி கடத்தல் தங்கம் பிடிபடுகிறது. போதை பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 40 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 25 க்கும் மேற்பட்டோர் மத்திய வருவாய் புலனாய்வு, கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக இலங்கை தங்கம் தடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது . இதன்படி தூத்துக்குடி மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர். இலங்கையில் இருந்து மர்மப்படகு மூலம் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடல் பகுதிக்கு கடத்தி வந்து காரில் எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கத்தை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மதுரை – ராமேஸ்வரம் சாலையில் நேற்றிரவு பறிமுதல் செய்தனர். காரில் சென்ற மதுரை கே.கே.நகர், சென்னை புதுப்பேட்டை சேர்ந்த இருவர் உள்பட 5 பேரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தங்கம் விலை பவுன் ரூ.31 ஆயிரத்தை எட்டிய நிலையில் தங்கம் கடத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
பண மதிப்பிட்டில் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெருமாள் பக்தர்களிக் கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனையின் தனது ஜாதிக்காரரை நியமனம் செய்து உள்ளார் .ஆந்திர முதல்வர் பண பாிமாற்றத்தில் சேகர் முதன்மை குற்றம் சாட்டபட்டவர் தான் காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.வாரியார்
சம்பல் ஆறு (Chambal River) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இராஜஸ்தான் மாநிலம் வழியாக பாய்ந்து, இறுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் கலக்கிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாா் மாவட்டத்தில் 19 ஷட்டா் பொருத்திய மதகுகள் பொருந்திய கோட்டா அணை கட்டப்பட்டுள்ளது..
தற்பொது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் சம்பல் ஆறு நிரம்பி வழிகிறது.இதனால் கோட்டா அணையிலுள்ள 19 ஷட்டா்களும் திறக்கப்பட்டுள்ளன.இதனால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பேருந்து வணிக வளாகங்கள் தண்ணீல் மிதக்கின்றன.
செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்
வடமாநிலமான ராஜஸ்தான் கான்பூர் மாவட்டத்தில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் அதனை தொடர்ந்து ரதயாத்திரையாக முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்.
மொகரம் பண்டிகைக்கான விடுமுறையை செப்டம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மொகரம் பண்டிகைக்காக செப்டம்பர் 10ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசுக்கு தலைமை காஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த விடுமுறை செப்.11ம் தேதிக்கு மாற்றப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
பெங்களூருவில், குண்டும் குழியுமான சாலையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, ஓவியர் ஒருவர் வெளியிட்ட நிலவில் நடக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர், பெங்களூருவில் உள்ள குண்டும் குழியுமான சாலை ஒன்றை வித்தியாசமான முறையில் நகரத்தின் உள்கட்டமைப்பு பொறுப்புக்கான பி.பி.எம்.பி (Bruhat Bengaluru Mahanagara Palike) அமைப்பின் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்தார்.
இதையடுத்து, மோசமான நிலையில் உள்ள அந்த சாலையை நிலவின் மேற்பரப்பு போன்று ஓவியமாக வரைந்தார். அதில், விண்வெளி வீரர்போல் வேடமிட்ட ஒருவர் நடந்து செல்வதுபோல் முப்பரிமாண (3டி) வீடியோ ஒன்றை உருவாக்கினார்.அதை, ‘ஹலோ, பிபிஎம்பி கமிஷனர்’ என்று பெயரிட்டுதனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். நிலவில் மனிதன் நடப்பதுபோல் பார்ப்போர் நம்பும் இந்த வீடியோவை, பகிரப்பட்ட 4 மணி நேரத்தில் 56 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். ஆயிரத்து 400 பேர் லைக் செய்துள்ளனர். 2 ஆயிரத்து 500 பேர் பகிர்ந்துள்ளனர்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உத்திர பிரதேசத்தில் உப்பைத் தொட்டுக்கொண்டு சப்பாத்தி சாப்பிட்டதை வீடியோவாக எடுத்து பகிர்ந்த பத்திரிகையாளர் மீது இரண்டு பிரிவுகளில் உத்தரப்பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவாக தினமும் ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.பள்ளி வளாகத்தில் அமர்ந்து சப்பாத்தியை உப்பில் தொட்டுக்கொண்டு மாணவர்கள் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்நிலையில் உத்திரப்பிரதேச அரசை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப் பட்டியலில் பருப்பு சாதம், ரொட்டி, காய்கறிகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாட்களில் மாணவர்களுக்கு ரொட்டியும், தொட்டுக்கொள்ள உப்பும், சில நாட்களில் சாதமும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் தான் அளிக்கப்படுகிறது.யாராவது முக்கிய பிரமுகர்கள் வந்தால் மட்டும் குழந்தைகளுக்கு பால் மற்றும் உரிய உணவு வழங்கப்படுகிறது” என்று பெற்றோர்கள் கூறினர்.
இந்த நிலையில், மாணவர்கள் சப்பாத்தியும், உப்பும் சாப்பிட்டதை வீடியோ பதிவு செய்த பவான் ஜெஷ்வால் பத்திரிகையாளர் மீது மாநில அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.உத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.