நீங்கள் படத்தில் காணும் குப்பைக் கிடங்கு கீழக்கரை வடக்குத் தெருவில் பல வருடங்களாக நோய் பரப்பும் கிடங்காக இருந்து வந்தது. பல ஆட்சிகள் மாறினாலும் காட்சி மட்டும் மாறவே இல்லை. சமீபத்தில் கீழக்கரை மக்கள் களம் மூலமாக பல சமூக ஆர்வம் கொண்ட சகோதரர்களால் சட்டப் போராளிகள் என்ற வாட்ஸ் அப் குழுமம் ஆரம்பம் செய்யப்பட்டது. இக்குழுமத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட அரசாங்கள் அதிகாரிகள் கவனத்திற்கும் மற்றும்; முதலமைச்சர் பிரிவுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தது. சமீபத்தில் வடக்குத் தெருவில் கேட்பாரற்று கிடக்கும் குப்பைக் கிடங்குகள் பற்றிய கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் முதல்வர் பிரிவுக்கும் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக இன்று முழு வீச்சில் நகராட்சி ஊழியர்கள் தனியார் கிடங்கில் கிடந்த கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி வண்டிகள் மூலம் சுத்தம் செய்தனர். இச்சுகாதார பணிகள் நாளையும் தொடரும் என்று அறியப்படுகிறது. மக்கள் சக்தி ஒன்று கூடினால் அரசியல்வாதிகள் சாதிக்க முடியாததையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்த நடவடிக்கைக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு கீழக்கரை மக்கள் களம் கீழக்கரை சட்டப் போராளிகள் மற்றும் கீழை செய்திகள் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது.
Category:
ஆன்மீகம்
கீழக்கரையில் இன்று காலை 10.30 மணியளவில் கீழக்கரை தாலுகா நகராட்சி கட்டிட அலுவலகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் மலேரியா க்ளினிக் அருகில் இலவச சேவை மையம் அனைத்து சமுதாய தன்னார்வ தொண்டர்களின் முயற்சியால் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டார்கள். இம்மையம் கீழக்கரை வட்ட அலுவலர் திரு.தமீம் ராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மையத்தில் அனைத்து வகையான அரசு சம்பந்தப்பட்ட படிவங்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, பூர்த்தி செய்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அறியப்படுகிறது. இம்மையம் வேலை நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மக்கள் சேவைக்காக இயங்கும். இன்று மட்டும் நீதிமன்றக் கட்டண வில்லை ( Court Fee Stamp) இலவசமாக மக்கள் தேவை கருதி வழங்கப்படுகிறது. தற்சமயம் 2 நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் வருங்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வண்ணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மேலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் இலவச காரியங்களையும் காசாக்கி சம்பாதித்து வந்த சுயநல வியாபாரிகளுக்கு பேரிடி இறங்கியுள்ளது. மேலும் இதுபோன்ற இலவச மையம் தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்த சேவையில் களம் இறங்கியுள்ள அனைத்து சமுதாய சேவகர்களையும் கீழக்கரை மக்கள் களம், சட்டப் போராளிகள் குழுமம் மற்றும் கீழை செய்திகள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Older Posts
You must be logged in to post a comment.