19
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்திரவிட்டுள்ளது.பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும், நடைப்பெறும் “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே, வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் “மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்” நடைப்பெறாது என, மதுரை மாவட்ட ஆட்சியர்மரு.எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.