Home செய்திகள் விவசாயிகள் கோரிக்கை ஏற்று அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கப்பட! தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்.

விவசாயிகள் கோரிக்கை ஏற்று அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கப்பட! தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்.

by mohan

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவதுமதுரை மாவட்டம் , அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திண்டுக்கல் , மதுரை , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பை அரவை அனுப்புகின்றனர் .எடப்பாடியார், தலைமையிலான மாண்புமிகு ஒ.பி.எஸ் வழிகாட்டுதலோடு கடந்த அம்மா ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு எங்களுடைய முயற்சியால் ரூ 22 கோடி வரை வழங்கப்பட்டது . அதே போல், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கு ஒதுக்கீடாக ரூ 6 கோடி வழங்கப்பட்டது .கோவியட்- கொரோனா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் அரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டது . தற்போது, 60,000 மெட்ரிக் டன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 2022 – ம் ஆண்டு அலங்காநல்லுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை உடனடியாக தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போரட்டம் நடத்தி வருகின்றனர் .தற்போது, 2 ஆயிரம் ஏக்கர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் கரும்பு அறுவடைக்குத்தயாராக உள்ள நிலையில் அந்த கரும்பும் தற்போதைய சூழலில், அலங்காநல்லுார் கொண்டு வரவே அதிக வாய்ப்பு உள்ளது .அரைவை தொடங்காததால் ஆலை உபமின் நிலையம் செயல்படாமல் உள்ளது . இதனால் அரசுக்கு ரூ .110 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கரும்பு விவசயாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் . இதுகுறித்து, கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் , முன்னாள் முதலமைச்சர், ஒ.பி.எஸ் , முன்னாள் முதலமைச்சர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் ,அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர் . எனவே,அரசு சார்பில் இந்த ஆண்டு ஆலையை இயக்கப்பட தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவரை கேட்டுக்கொள்கிறேன் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!