15
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கவுண்டன்யா சிறு ஆற்றில் சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.குடியாத்தம் பகுதியில் இந்த ஆறு ஓடுவதால் இதன் கரையோர பகுதியில் உள்ள வீடுகளை விட்டு மக்கள் அப்புறபடுத்தப்பட்டனர்.இந்த ஆற்றின் மீது இருக்கும் பாலத்தின் மீது வெள்ளம் இப்போது ஓடுகிறது.இதை வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரி நந்தகுமார், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அருகில் வருவாய்துறையினர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.