14
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓடுகிறது.விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து காவல்துறையால் துண்டிக்கப்பட்டுள்ளதுபல ஆண்டுகளுக்கு பின்பு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் கரையோரங்களிலும், பாலாத்தின் மீது பார்த்து கொண்டும் பலர் செல்பி எடுத்துவருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே யாரும் பாலம், கரையோரத்தில் செல்பி எடுக்க வேண்டாம் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
You must be logged in to post a comment.