7
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜ் இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தொண்டராக உள்ளார் .கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை கீழே இறங்கி வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வலியுறுத்தி தாக தெரியவந்துள்ளது . போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.