Home செய்திகள் திருவண்ணாமலை அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்.

திருவண்ணாமலை அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிலம் மீட்பு போராட்டம்.

by mohan

திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கடப்பன்குட்டை பகுதியில் வாழ்ந்துவரும் இருளர் இன மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை ரவி முனியன் ஆகிய இருவர் சுமார் 7.5 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளதாகவும் அதனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .நில மீட்புப் போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பி சண்முகம், மாநில பொதுச் செயலாளர் சரவணன் மாநில துணை பொது செயலாளர் செல்வன் மாநில மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் இருளர் இன மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை ரவி முனியன் ஆகிய இருவர் சுமார் 7.5 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளதாகவும் அதனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூட்டமைப்பின் சார்பில் கோஷங்களை எழுப்பினர்மாவட்ட செயலாளர் வீரபத்திரன் மாவட்ட செயலாளர் பாரி தாலுகா செயலாளர் அண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி முரசு மாவட்ட செயலாளர் பாலாஜி பிரகாஷ் ஏழுமலை அபிராமி ராமநாதன் மாரிமுத்து லூர்து மேரி ரமேஷ்பாபு கண்ணையன் மற்றும் மாவட்ட செயற்குழு முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!