Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் தலையில் ஏறி இளைஞர் பலி..

மதுரை எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று (21/03/2021) இரவு 7 30 அளவில் மதுரை தெற்கு வாசலில் முகைதீன் ஆண்டவர் தெருவை சேர்ந்த சம்சுதீன். இவரது மகன் தாஜுதீன் 33 இவர் எல்லிஸ் நகர் 70 அடி ரோட்டில் பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார், அதே சமயம்  எதிரே திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் மகன் கிஷோர் 26 பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து எல்லீஸ்நகர் ரோடு வழியாக திருமங்கலம் செல்ல எல்லிஸ் நகர் ரயில்வே மேம்பாலம் அருகே வரும்பொழுது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது.

இச்சம்பவத்தில் தாஜுதீன் (ஹெல்மெட் அணியவில்லை) கீழே விழுந்த பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் தலைமீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல் காலில் காயமடைந்த கிஷோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையாளர் மாரியப்பன் மற்றும் திருமலைக்குமார்,  எஸ் எஸ் காலனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிளவர் சீலா ஆகியோர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் எல்லிஸ் நகர் 70அடி சாலையில் அதிக அளவு மணல் குவியல் இருப்பதாலே வாகன ஒட்டிகள் மணலை தவிர்க்கும் வண்ணம் வாகனத்தை ஓட்ட முற்படும் பொழுது விபத்துக்குள்ளாகிறார்கள் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!