Home செய்திகள் தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களை எதிர்க்கட்சிகள் எங்களால் மக்களுக்கு கிடைத்தது பிரச்சாரம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது-திண்டுக்கல் சி.சீனிவாசன்

தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களை எதிர்க்கட்சிகள் எங்களால் மக்களுக்கு கிடைத்தது பிரச்சாரம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது-திண்டுக்கல் சி.சீனிவாசன்

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டில் ஒரு தனியார் மஹாலில் தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழாவும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கியும், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியும் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது மிகவும் சீரும் சிறப்பாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கியும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்கள் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நிலக்கோட்டை , ஆத்தூர், கொடைக்கானல், ஆகிய 3 தொகுதிகளில் உள்ள ஏழை பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரமும், மேல்நிலைப் பள்ளிப் பருவம் பெண்களுக்கு 25 ஆயிரமும், ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும் திட்டம் தொடங்கிய காலத்தில் விலை மிகவும் குறைவாக இருப்பினும் தற்போது விலை உயர்ந்தாலும் திட்டங்களை தமிழக முதலமைச்சர் வாரி வழங்கி வருகிறார். விவசாயிகளுக்காக பயிர்க்கடன் பாத்து செய்யப்பட்டதையும், அதேபோன்று பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் தேர்தலுக்கு முன்பே பிரிவோம் என்று வாக்கூர் பொய்யான வாக்குறுதியை கொடுக்காமல் உடனடியாக நிறைவேற்றி காட்டிய  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதை எதிர்க்கட்சிகள்  சொன்னதால்தான் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதாக வேடிக்கையாக அதற்கு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் அ.தி.மு.க அரசு மிகச்சிறப்பாக கண்ணும் கருத்துமாக செய்து வருகிறது. இதன்காரணமாக மக்களை நம்பி அ.தி.மு.க அரசு உள்ளது. அதேபோன்றுதான் அ.தி.மு.க. வை நம்பி மக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.குழந்தை முதல் பெண்கள இறக்கும்வரை அனைத்து வகையான வகையிலும் அரசு நிதி உதவி மற்றும் பல்வேறு பெண்களுக்கான அனைத்து விதமான உதவிகளையும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பான முறையில் திறம்பட செய்து கொண்டிருக்கிறோம் என பேசினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் முதல் மேயர் மருதராஜ், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழிசேகர்,  திண்டுக்கல் மாவட்டம்  வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் மோகன், நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலகுண்டு மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, கொடைக்கானல் முன்னாள் நகர தலைவர் ஸ்ரீதர், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், வத்தலக்குண்டு நகரச் செயலாளர் பீர் முகமது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!