7
மதுரை அருகே மாங்குளத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கதிரடிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர்பலியானார் என்ற செய்தி மதுரை கிழக்கு மாங்குளம் வி.ஏ.ஓ.கருணாநிதிக்கு தெரியவந்தது .அவர்உதவியாளர் அழகுமலை உடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.அப்போது சேலம் மாவட்டம் புளியங்குறிச்சியைசேர்ந்த சீராளன் மகன் நாகப்பன் 32 என்பவர் எந்திரத்தில் வைக்கோல் கட்டிய போது எந்திரங்களுக்கிடையே சிக்கி பலியாகி இருந்தார். இதுதொடர்பாக வி.ஏ.ஓ. கருணாநிதி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுஇறந்தவரின் உடலை கைப்பற்றி இயந்திரத்தின் உரிமையாளர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா ஓதிய்த்தூரை சேர்ந்த ராயர் மகன் மாயழகன் 22 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.