5
மதுரை திருநகர் ஐந்தாவது பஸ் ஸ்டாப் விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் 34 .இவரது வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் திருடியது தெரியவந்தது. திருடிக்கொண்டிருந்தபோது கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடன் விரட்டி பிடித்தனர் .பிடிபட்டவர்களை திரு நகர் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்கள் தோப்பூர்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் மற்றும் திருக்குமரன் நகரைச் சேர்ந்த சேர்ந்த பால்பாண்டி என்ற பட்டாசு பாலு என்றும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.