6
வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி வேலூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுரேஷ், நாகேஷ்வரன், ராஜேஷ் ஆகியோர் வேலூர் சுண்ணாம்புகார தெருவில் உள்ள 15 கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 20 சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்பளர்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ 5 ஆயிரம் ஆகும். 2 கடைகாரர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.